தொல்பொருள் வலயங்களும் கைதுகளும் உணர்த்துவது என்ன?
ஒரு நாட்டின் தேசிய சொத்தாக தொல்பொருட்கள் கருதப்படுகின்றன. இவற்றைப் பாதுகாப்பதற்காக இலங்கையில் தனியான ஒரு திணைக்களம் கலாசார அமைச்சின் கீழ் இயங்கி வருகிறது.
தம்புள்ளை, அநுராதபுரம், பொலன்னறுவை, மிஹிந்தலை, சீகிரியா என்று எமது நாட்டின் தொல்பொருள் பிரதேசங்களை பட்டியலிட்டுக் கொண்டு செல்லலாம்.
நாட்டில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்பொருள் பிரதேசங்களை அடையாளப் படுத்தியுள்ளதாக தொல்பொருள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் விராஜ் பாலசூரிய தெரிவிக்கிறார்.