ஊடக சுதந்திரம் என்ற போர்வையில் ஒரு இனத்தையும், பிரதேசங்களையும் தவறாக சித்திரிப்பதை வன்மையாக கண்டிக்கிறேன். அக்குறணை தீ விபத்து தொடர்பில் சுயாதீன ஊடக நிறுவனத்தின் நிகழ்ச்சி தொகுப்பாளர் குறிப்பிட்ட கருத்து தவறு என்பதை அந்நிறுவனம் ஏற்றுக் கொண்டு பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் தான் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் யாருக்கு வேண்டுமானாலும் உயர்நீதிமன்றத்திற்கு செல்லலாம். அதனைவிடுத்து தேர்தல்கள் ஆணைக்குழுவை விமர்சிப்பதில் அர்த்தமில்லை. சட்டத்தின் பிரகாரமே மீண்டும் பாராளுமன்றம் வந்தேன் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
தங்க நகை தொடர்பிலான விவகார விசாரணை தொடர்பில், கைது செய்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவரை படல்கமுவ பொலிஸார், பன்றி இறைச்சியை ஊட்ட முயற்சித்தும், தொழும் போது உதைத்து அதனை தடுத்தும் குற்றத்தை ஒப்புக்கொள்ள அழுத்தம் கொடுத்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பிரத்தியேக விசாரணை ஒன்றினை ஆரம்பித்துள்ளது.