ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி அக்குறணை மக்களை விமர்சித்தமை தவறு

ஊடக சுதந்­திரம் என்ற போர்­வையில் ஒரு இனத்­தையும், பிர­தே­சங்­க­ளையும் தவ­றாக சித்­தி­ரிப்­பதை வன்­மை­யாக கண்­டிக்­கிறேன். அக்­குறணை தீ விபத்து தொடர்பில் சுயா­தீன ஊடக நிறு­வ­னத்தின் நிகழ்ச்சி தொகுப்­பாளர் குறிப்­பிட்ட கருத்து தவறு என்­பதை அந்­நி­று­வனம் ஏற்றுக் கொண்டு பகி­ரங்க மன்­னிப்பு கோரி­யுள்­ளது.

எனது நியமனத்தில் பிரச்சினை இருப்பின் நீதிமன்றம் செல்லவும்

பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மீண்டும் தான் நிய­மிக்­கப்­பட்­டமை தொடர்பில் ஏதேனும் பிரச்­சினை இருந்தால் யாருக்கு வேண்­டு­மா­னாலும் உயர்­நீ­தி­மன்­றத்­திற்கு செல்­லலாம். அத­னை­வி­டுத்து தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவை விமர்சிப்­பதில் அர்த்­த­மில்லை. சட்­டத்தின் பிர­கா­ரமே மீண்டும் பாரா­ளு­மன்றம் வந்தேன் என ஐக்­கிய மக்கள் சக்தி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

பன்றி இறைச்சி ஊட்ட முயன்ற விவகாரம்: கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணை

தங்க நகை தொடர்­பி­லான விவ­கார விசா­ரணை தொடர்பில், கைது செய்த முஸ்லிம் வர்த்­தகர் ஒரு­வரை படல்­க­முவ பொலிஸார், பன்றி இறைச்­சியை ஊட்ட முயற்­சித்தும், தொழும் போது உதைத்து அதனை தடுத்தும் குற்­றத்தை ஒப்­புக்­கொள்ள அழுத்தம் கொடுத்­த­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்பில் சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு பிரத்­தி­யேக விசா­ரணை ஒன்­றினை ஆரம்­பித்­துள்­ளது.