அதிகரிக்கும் இணையவழி மோசடிகள்
குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவுக்கு பெண் ஒருவர் அண்மையில் முறைப்பாடொன்றை மேற்கொண்டிருந்தார். அது அறிமுகமில்லாத நபர் ஒருவர் தன்னை வட்ஸப் குழுவொன்றில் இணைத்து, டிக்டொக் வீடியோக்களுக்கு லைக் மற்றும் கமெண்ட் போடுவதன் மூலம் பணம் ஈட்ட முடியும் எனத் தெரிவித்து, வங்கிக் கணக்கொன்றுக்கு பணம் வைப்பிலிட்ட சம்பவம் தொடர்பானதாகும்.