ஹிஜாப் அணிந்த 13 அதிபர்களின் பெறுபேறுகள் இடைநிறுத்தம்: நாளை மீளவும் விசாரணை செய்யும் மனித உரிமைகள் ஆணைக் குழு
ஹிஜாப் அணிந்து வினைத்திறன் காண் தடை தாண்டல் பரீட்சைக்கு தோற்றியமைக்காக, மேல் மாகாணத்தின் 13 முஸ்லிம் அதிபர்களின் பெறுபேறுகள் இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவுக்கு பாதிக்கப்பட்ட அதிபர்கள் செய்த முறைப்பாடு மீது நாளை மீண்டும் விசாரணை நடாத்தப்படவுள்ளது.