தீவிரவாதத்திற்கு எதிரான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவிப்பு

0 592

“எமது சமூ­கத்­தி­லி­ருந்து தீவி­ர­வா­தி­களை அடை­யா­ளப்­ப­டுத்­தக்­கூ­டிய தீவி­ர­வா­தத்­துக்கு எதி­ரான பொறி­முறை ஒன்றை உரு­வாக்­க­வேண்­டி­யுள்­ளது. அத்­துடன் இந்த நாட்டில் சமா­தா­னத்­தையும் அமை­தி­யையும் பாது­காப்­ப­தற்­கான வகையில் சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­கின்­ற­வர்­க­ளுடன் இணைந்து செயற்­பட வேண்­டி­யது அவ­சியம்.’’ மேற்­கு­றிப்­பிட்­ட­வாறு நேற்று முன்தினம் கொழும்பு ஸாஹிராக் கல்­லூ­ரியின் ஸ்தாபகர் தின விழாவின் சிறப்பு பேச்­சா­ள­ராகக் கலந்து கொண்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் ஸாஹிராக் கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ரு­மான அலி சப்ரி கூறி­னார்.

கல்­லூ­ரியின் அதிபர் ரிஸ்வி மரைக்கார் தலை­மையில் கல்­லூ­ரியின் அப்துல் கபூர் மண்­ட­பத்தில் நடை­பெற்ற இவ்­வி­ழாவில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

‘‘இந்த நாட்­டி­லுள்ள இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு நீண்­ட­தொரு வர­லாறு உண்டு. கடந்த 11 நூற்­றாண்­டு­க­ளாக அவர்கள் சகல சமூ­கங்­க­ளு­டனும் சமா­தா­ன­மா­கவும் சட்­டத்தைப் பின்­பற்றி நடக்­கின்ற சமூ­க­மா­கவும் வாழ்ந்து வரு­கின்­றனர். துர­திர்ஷ்­ட­வ­ச­மாக முஸ்லிம் பெயரைச் சுமந்த குறிப்­பிட்ட சில தீவி­ர­வா­திகள் நடாத்­திய பயங்­க­ர­வாதத் தாக்­குதல் கார­ண­மாக முஸ்­லிம்கள் பற்­றிய அபிப்­பி­ராயம் சிதை­வ­டைந்­துள்­ளமை யானது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். எனவே நாம் எம்­மோடு வாழக்­கூ­டிய ஏனைய சமூ­கங்­களின் நம்­பிக்­கையை வென்­றெ­டுப்­ப­தற்­கான பொறுப்பு எமது சமூ­கத்தின் மீதுள்­ளது.

இதற்­கான முதற்­கட்ட நட­வ­டிக்­கை­யாக தனித்து ஒதுங்கி வாழும் நிலை­யி­லி­ருந்து வெளி­வந்து ஏனைய சமூ­கங்­க­ளுடன் இணைந்து செயற்­ப­டு­வ­துடன் உற­வையும் சகோ­த­ரத்­து­வத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய வகையில் எமது எதிர்­கால செயற்­பா­டுகள் அமை­ய­வேண்டும்.

இலங்­கையில் பல்­வேறு சமூ­கங்­க­ளு­ட­னான சக­வாழ்­வையும் சக உற­வையும் மேம்­ப­டுத்­தக்­கூ­டிய கல்­வியை விருத்­தி­செய்­வ­தற்கு கடந்த காலங்­களில் ஸாஹிரா கல்­லூரி செயற்­பட்­டது போல் எமது கல்­வியை முன்­னெ­டுத்­துச்­செல்ல வேண்டும்.

ஸாஹி­ராவின் முன்னாள் அதிபர் ஏ.எம்.ஏ. அஸீஸ் 1948 முதல் 1961 வரை அதி­ப­ராக இருந்த பொற்­கா­லப்­ப­கு­தியில் ஸாஹிரா படிப்­ப­டி­யாக கல்வித் துறையில் கீர்த்தி மிகு மத்­திய நிலை­ய­மாக மாறி­யது.

இலங்­கை­யி­லுள்ள முஸ்லிம் –தமிழ் –சிங்­கள சமூ­கங்­களைச் சேர்ந்த சகல மாண­வர்­க­ளுக்கும் ஒரே மாதி­ரி­யான சேவையை வழங்கக் கூடிய பாட­சா­லை­யாக வளர்ச்­சி­ய­டைந்­தது. அது மட்­டு­மன்றி மலே­சியா, கென்யா, பாகிஸ்தான் போன்ற வெளி­நாட்டு மாண­வர்­க­ளும்­கூட இங்கு வந்து கல்­வி­கற்றுப் பய­ன­டைந்­தனர்.

சாதா­ரண முஸ்லிம் பாட­சாலை என்ற நிலை­யி­லி­ருந்து தேசியப் பாட­சா­லை­யாக மாற்றம் கண்ட ஸாஹிராக் கல்­லூ­ரியின் கல்­வித்­தர மேம்­பாட்­டையும் சமூ­கங்­க­ளி­டை­யி­லான பாகு­பா­டற்ற சேவை­யையும் அக்­கா­லப்­ப­கு­தியில் பல்­க­லைக்­க­ழத்­துக்குத் தெரி­வான பல்­லின மாண­வர்­களின் எண்­ணிக்­கை­யி­லி­ருந்து அறிந்து கொள்­ளலாம்.

இக்­கா­லப்­ப­கு­தியில் இலங்­கை­யி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­களின் பீடங்­க­ளுக்கு அனு­மதி பெற்ற மொத்த மாண­வர்­களின் தொகை 138 ஆகும். அனு­மதி பெற்ற இம்­மா­ண­வர்­களில் 80 பேர் இஸ்லாம் மாண­வர்கள், 37 பேர் சிங்­கள மாண­வர்கள், 21 பேர் தமிழ் மாண­வர்­க­ளாவர். சத­வீத அடிப்­ப­டையில் முஸ்லிம் மாண­வர்கள் 57 சத­வீ­தமும் சிங்­கள மாண­வர்கள் 27 சத­வீ­தமும் தமிழ் மாண­வர்கள் 15 சத­வீ­த­மா­கவும் இருந்­தனர். இந்த உதா­ர­ண­மா­னது உண்­மை­யி­லேயே இலங்­கை­யி­லுள்ள சகல சமூ­கங்­க­ளையும் பிரதி நிதித்­து­வப்­ப­டுத்தும் ஒரு பிர­தா­ன­மான முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய முஸ்­லிம்­களால் நடத்­தப்­பட்ட ஒரு கல்வி நிறு­வ­ன­மாகத் திகழ்ந்­தது.

எனவே, அக்காலத்தில் ஸாஹிராக் கல்லூரியானது முன்னுதாரணமாக செயற்படுத்தப்பட்டது போல் எமது கல்வி நடவடிக்கைகளிலும் ஏனைய நடவடிக்கைகளில் சகல சமூகங்களுடன் நல்லுறவை விருத்தி செய்யக்கூடியவாறு எமது செயற்­பா­டுகள் அமைய வேண்டும்’’ எனக் குறிப்­பிட்டார். மேலும் இந்­நி­கழ்வில் ஸாஹிராக் கல்­லூ­ரியின் பழை­ய­மா­ணவர்கள், ஆளுநர் சபை அங்­கத்­த­வர்கள் மற்றும் பல்­வேறு பிர­மு­கர்­களும் வெளி­நாட்டுத் தூது­வர்­களும் கலந்து சிறப்பித்தனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.