பழைமைவாதத்திலேயே பிடிவாதமாக இருக்கின்ற அதிகமானோர் நமது சமூகத்தில் இருக்கின்றனர்

புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டுவரப் போனால் கிளர்ச்சி வெடிக்கலாம்; அதற்காக விட்டுக்கொடுப்போடு விடயங்களைக் கையாள வேண்டும்

0 867

கொழும்பு பாத்­திமா முஸ்லிம் மகளிர் கல்­லூரி இஸ்­லா­மிய தின விழாவில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆற்­றிய உரை.

முஸ்­லிம்­க­ளா­கிய எங்­களை பொறுத்­த­வரை இது ஒரு நெருக்­க­டி­யான கால­கட்­ட­மாகும். நாங்கள் பல்­வேறு நெருக்­க­டி­க­ளுக்கும் சவால்­க­ளுக்கும் முகம் கொடுத்து வரு­கின்றோம். இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கின்ற போது இதுபோன்ற பாட­சா­லை­களின் ஆசி­ரி­யர்­க­ளுக்கும் மாண­வி­யர்­க­ளுக்கும் கூட நிறைய பொறுப்­புகள் உள்­ளன. ஆகையால், மாண­வி­யர்­களும், ஆசி­ரி­யை­களும் கூட தெரிந்து வைத்­தி­ருக்க வேண்­டிய விட­யங்கள் நிறைய உள்­ளன.

இஸ்லாம், முஸ்லிம், குர்ஆன், அரபு மொழி என்­ப­ன­வற்­றை­யெல்லாம் மூர்க்­கத்­த­ன­மாக அணு­கு­கின்­ற­வர்கள் மத்தியில் திட நம்­பிக்­கை­யோடும் மன உறு­தி­யோடும் உரிய விளக்­கங்­களை முன்­வைப்­பது எங்­க­ளது கட­மை­யாகும்.

நேற்றுக் கூட (6ஆம் திகதி) அமைச்­ச­ர­வையில் பெண்கள் முகத்தை மூடு­கின்ற ஆடை­களை பற்­றிய நிரந்­த­ர­மான சட்டம் பற்­றிய விடயம் எடுத்­துக்கொள்ளப்­பட்­ட­போது நாங்கள் அதனை எதிர் கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. ஏனை­ய­வர்கள் மத்­தியில் எங்­களை பற்­றிய ஓர் அச்­சமும் சந்­தே­கமும் இருந்து வரு­வதால் நாங்கள் அத­னு­டைய ஆணி­வேரை கண்­ட­றிந்து அதற்­கேற்­ற­வாறு அணு­க­வேண்டும். பிற மதத்­த­வர்கள் மத்­தியில் மட்­டு­மல்­லாது, எங்­க­ளது சமூ­கத்­திற்­குள்­ளேயே வித்­தி­யா­ச­மான விதத்தில் சவால் விடுப்­ப­வர்கள் இருக்­கத்­தக்­க­தாக இது பார­தூ­ர­மான விட­ய­மாக ஆகி­யி­ருக்­கின்­றது.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான நாங்கள் அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் விவா­க, விவா­க­ரத்து சட்டம் சம்­பந்­த­மான விவ­கா­ரத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்­டிய நிர்ப்­பந்தம் ஏற்­பட்­டுள்­ளது. இதற்­கான சீர்த்­தி­ருத்­தங்­களின் போது தீர்­வுகள் வெளி­யி­லி­ருந்து அல்­லாது, எங்­க­ளது சமூ­கத்­திற்­குள்­ளி­ருந்தே அவை வர­வேண்டும் என்­பதில் நாங்கள் உறு­தி­யாக இருக்­கின்றோம்.
இவ்­வா­றான அம்­சங்­களை அணு­கு­கின்ற போது பெண் தலை­மைத்­துவம் பற்­றிய சர்ச்­சையும் எழத்தான் செய்­கின்­றது. இதில் நாம் தலைசிறந்த சன்­மார்க்க அறி­ஞர்­க­ளான உல­மாக்­க­ளுடன் கருத்­தா­டலில் ஈடு­பட்டு இணக்­கப்­பாட்டை எட்ட வேண்­டிய நிலைமை ஏற்­டு­கின்­றது.

நான் கூறி­ய­படி, பெண்­களின் தலை­மைத்­துவம் சம்­பந்­த­மா­ன­தொரு புதிய விவாதம் இன்று சமூ­கத்­திற்குள் நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. பெண்கள் தலை­மைத்­துவம் சம்­பந்­த­மாக அல் குர்ஆன் என்ன சொல்­லு­கின்­றது. நபிகள் நாய­கத்தின் வாழ்க்­கை­முறை எங்­க­ளுக்கு எதைப் போதிக்­கின்­றது. வெவ்­வேறு மத் ஹ­பு­களில் என்ன சொல்­லப்­பட்­டுள்­ளது என்ற விவ­கா­ரத்தில் எல்லாம் இன்று ஒரு புதிய கதை­யாடல் ஆரம்­பித்­தி­ருக்­கின்­றது. இது குறித்த கருத்து முரண்­பா­டுகள் இன்னும் முற்­றுப்­பெ­றாத, இணக்­கப்­பாட்டை எட்­ட­மு­டி­யாத விட­ய­மாக இருக்­கத்­தக்­க­தாக சில பொறுப்­புக்கள் இன்று முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கைகளில் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளன.

குர்ஆன் வச­னங்கள் “அர்­ரி­ஜாலு கவ்­வா­மூன அலன்­நிசா” என சூரத்­துன்­னிஸா என்ற அத்­தி­யா­யத்தின் 34ஆவது திரு­வ­ச­னத்தை மேற்­கோள்­காட்டி பெண்கள் தலை­மைத்­துவம் என்­கின்ற விவ­காரம் கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. கவ்­வா­மூன என்­பது நிர்­வ­கிப்­ப­வர்­க­ளாக, நிர்­வ­கிக்­கின்ற விட­யத்தில் ஆண்கள் பெண்­க­ளை­வி­டவும் தகுதி வாய்ந்­த­வர்கள் என்ற அடிப்­ப­டையில் அந்த குர்ஆன் வசனம் சொல்­வ­தா­ன­தொரு வியாக்­கி­யானம் அளிக்­கப்­ப­டு­கின்­றது. இதற்கு மறு­த­லை­யாக உல­மாக்கள் மத்­தியில் இமாம் அபூ­ஹ­னிபா, இமாம் தபரி போன்­ற­வர்கள் இதை மீள்­வா­சிப்­புக்கு உட்­ப­டுத்த வேண்டும் என்ற நிலைப்­பாட்டில் இருந்­த­தாகக் கூறப்­ப­டு­கின்­றது. இது குடும்பத் தலை­மைத்­து­வத்தை மாத்­திரம் கதை­கின்ற குர்ஆன் வசனம். இதை பொது­மைப்­ப­டுத்தி எல்லா விவ­கா­ரங்­க­ளிலும் பெண்கள் தலை­மைத்­து­வத்­திற்கு தகு­தி­யற்­வர்கள் என்று சொல்­லு­கின்ற வாதம் பிழை­யா­னது என்­கின்­றனர்.

எனவே, இதை மீள்­வா­சிப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று இதற்கு மாற்­ற­மா­கவும் கருத்துச் சொல்­கின்­றார்கள். எனவே, இது ஒரு தர்க்­கத்­துக்­கு­ரிய விட­ய­மாக ஆகி­யது. என்னைப் பொறுத்­த­மட்டில் “அர்­ரி­ஜாலு கவ்­வா­மூன அலன்­னிஸா” என்ற வாக்­கி­யத்தை எடுத்துப் பார்த்தால் சூரத்­துன்­னி­ஸாவின் 34ஆவது திரு­வ­ச­னத்தின் முந்­திய பிந்­தி­யவை எல்லாம் குடும்­பத்தைப் பற்­றித்தான் பேசு­கி­றது. ஒரு குடும்­பத்தில் இருக்­கின்ற ஆண் அந்த குடும்­பத்தை நிர்­வ­கிப்­ப­தற்கு அவரை முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தற்­கான காரணம் அந்த குடும்­பத்­திற்கு செலவு செய்­கின்றார் என்ற கார­ணத்­தினால் என்றும் அதன் பின்னால் குறிப்­பி­டப்­ப­டுகின்றது.

அதைப் பொது­மைப்­ப­டுத்தி தலை­மைத்­து­வத்­திற்கு பெண்கள் தகு­தி­யில்லை என்று எடுத்த வாக்கில் சொல்லப் போனால், ஆண்கள் கட­மை­யாற்றும் இடங்­களில் குறிப்­பாக, பாட­சா­லை­களில் முஸ்லிம் பெண்கள் தலைமை பொறுப்பில் இருக்க முடி­யாது போகும். அவ்­வா­றானால், தலை­மைப்­ப­த­வியில் பெண்கள் இருக்க முடி­யாது. ஏனென்றால், இதே­மா­திரி நீதி­ப­தி­க­ளா­கவும் வர­மு­டி­யாது என்ற வாதமும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. வியாக்­கி­யா­னங்கள் வித்­தி­யா­சப்­ப­டலாம். சபா நாட்டு அரசி- பார­சீக தேசத்­தி­லி­ருந்த அந்த அரசி சம்­பந்­த­மாக நபி­ய­வர்கள் அவர்­க­ளு­டைய ஒரு ஹதீ­ஸையும் மேற்கோள் காட்­டு­கி­றார்கள். சபா நாட்டு அர­சியின் ஆட்­சியில் எந்தப் பெண் ஆட்­சிக்கு வரு­கி­றார்­களோ அந்த நாடு முன்­னே­றாது என்று சொல்­லப்­பட்­ட­தாக நபி­ய­வர்கள் கூறி­ய­தாக ஒரு ஹதீஸ் மேற்கோள் காட்­டப்­ப­டு­கி­றது.

அதே­வேளை, அதற்கு மாற்­ற­மாக அல்­குர்­ஆனில் சுலைமான் நபி­ய­வர்­க­ளு­டைய காலத்தில் வாழந்த பல்கீஸ் அர­சி­யு­டைய ஆட்சி பற்றி கூறப்­ப­டு­கி­றது. அந்த ஆட்சிக் காலத்தில் அந்த அரசி யுத்­தத்­தி­லி­ருந்து தவிர்ந்து கொண்­ட­தனால் பாரிய அழி­வி­லி­ருந்து தன்­னு­டைய மக்­களைக் காப்­பாற்­றினார் என்று அல்­குர்ஆன் குறிப்­பி­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இவற்றை ஒரு முன்­னேற்­ற­க­ர­மான நோக்கில் மீள்­வா­சிப்­புக்கு உட்­ப­டுத்­து­வதன் மூலம் ஒரு தெளிவை பெறலாம். ஏனென்றால் அந்தக் காலத்­திலே பெண்கள் சமூக பொறுப்­புகள் குறித்த விவ­கா­ரங்­களில் போதிய தேர்ச்சி இல்­லா­தி­ருந்த நிலையில் சில விட­யங்­களை வியாக்­கி­யானம் செய்­கின்ற போது அவற்­றிற்கு அந்­தந்த சந்­தர்ப்­பங்­களில் மற்றும் கால­கட்­டங்­களில் கொடுக்­கப்­பட்ட வியாக்­கி­யா­னங்கள் சகல காலத்­துக்கும் உரி­ய­வை­யாக ஒரு பொதுப்­ப­டை­யான விட­ய­மாக மாறு­கின்ற போது தெளி­வற்ற தன்மை தோன்­றலாம்.
பெண் குழந்­தை­களைப் பிறந்த உட­னேயே உயி­ரோடு கொன்று புதைத்துக் கொண்­டி­ருந்த அறி­யாமை சமூ­கத்தில் இருந்து பெண்­க­ளுக்கு விடு­தலை பெற்றுக் கொடுத்த மார்க்கம் எங்­க­ளு­டைய மார்க்கம் என்று நாங்கள் எல்­லோரும் வியந்து கூறு­கின்றோம். அப்­படிச் சொல்­ப­வர்கள் இன்று பெண்­களின் சமூக செயற்­பா­டு­க­ளிலே அறி­வியல் ரீதி­யான முன்­னேற்­றங்­க­ளோடு நவீன கால சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுப்­ப­தற்கு தங்­களை தயார்­ப­டுத்­து­கின்ற விவ­கா­ரத்தில் தர்க்­கித்துக் கொள்­கின்­றனர். இந்த அடிப்­ப­டையில் தான் இவற்­றிற்கு மீள்­பார்வை அவ­சியம் என்று ஏரா­ள­மான உல­மாக்கள் இவற்றை கேள்­விக்­குட்­ப­டுத்­து­கின்­றனர். ஆனால், இன்னும் பழைமை வாதத்­தி­லேயே பிடி­வா­த­மாக இருக்­கின்ற அதிக எண்­ணிக்­கை­யா­னோரும் எங்­க­ளு­டைய சமூ­கத்தில் இருக்­கின்­றனர்.

இவர்­களை இணக்­கப்­பாட்­டிற்கு கொண்­டு­வ­ரு­வது தேவைப்­பா­டாக இருக்­கின்­றது. ஏனென்றால், சமூ­கத்­துக்குள் எடுத்த எடுப்­பி­லேயே ஒரு புரட்­சி­க­ர­மான மாற்­றத்தைக் கொண்­டு­வரப் போனால் அங்கு ஒரு கிளர்ச்சி வெடிக்­கலாம். அதற்­காக ஓர­ளவு விட்­டுக்­கொ­டுப்­போடு இந்த விவ­கா­ரங்­களைக் கையா­ள­வேண்டும் என்ற முயற்­சியில் நாங்கள் எல்­லோரும் தீவி­ர­மாக செயற்­பட வேண்­டி­யி­ருக்­கி­றது.

இன்று முஸ்லிம் சமூகம் சம்­பந்­த­மான மோச­மான விமர்­ச­னங்கள் எங்­க­ளது சமூ­கத்­திற்கு வெளி­யி­லி­ருந்து ஏன் சொல்­லப்­ப­டு­கின்­ற­தென்றால், எங்­க­ளு­டைய இஸ்­லா­மிய அடிப்­படை குறித்த மீள்­வா­சிப்பு என்ற விட­யத்தில் இன்று தோன்­றி­யுள்ள புதிய சவால்­க­ளையும் அடிப்­ப­டை­யாக வைத்­துத்தான் அவ்­வாறு கூறப்­ப­டு­கி­றது. இதற்கு நாங்கள் உரிய முறையில் விளக்­க­ம­ளிக்க வேண்டும். இவை போன்ற சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்­க­ளுக்கு இங்கு சில நிமி­டங்­களில் பேசி முழு விளக்­க­ம­ளிப்­ப­தென்­பது கஷ்­ட­மான காரி­ய­மாகும்.

பெண் ஒருவர் தலைமை பொறுப்பை ஏற்­கின்­ற­போது ஏற்­ப­டு­கின்ற சவால்கள், வாழ்க்கை வழி­முறை தொடர்­பாக நான் எனது பாட்டி, தாய், மனைவி மற்றும் மகள்மார் ஆகி­யோ­ரி­ட­மி­ருந்து கற்­றுக்­கொண்ட விட­யங்கள் ஆண்­க­ளி­ட­மி­ருந்து தெரிந்­து­கொண்ட விட­யங்­களை விட மிகவும் முக்­கி­ய­மா­ன­வை­யாகும். என்­னு­டைய பாட்­டனார் ஒரு பள்­ளி­வா­சலின் கதீ­பாக 35 வருட காலம் சேவை செய்­தி­ருக்­கிறார்.

எங்­க­ளது பாட்டன் ,பாட்டி ஆகியோர் அணிந்த ஆடை அணி­க­லங்கள், நடை உடை பாவ­னைகள் என்­பன இன்­னமும் எங்­க­ளு­டைய உள்­ளங்­களில் பசு­மை­யாக பதிந்­துள்­ளன. அவை மிகவும் ஒழுக்­கத்தை பிர­தி­ப­லிக்கக் கூடி­ய­வை­யா­கத்தான் அமைந்­தி­ருந்­தன. அதே­போல காலப்­போக்கில் வேறு வித­மான உடைகள் ஒரு முன்­மா­தி­ரி­யான வடி­வ­மாக செல்­வாக்குப் பெற்­றுள்­ளன. அவற்­றையே நாம் இன்று காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. இவற்றை சிலர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட கலா­சாரம் என்றும் கூறு­கின்­றனர்.

அதே­வேளை, பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள் என்று கூறிக் கொள்ளும் சிலர் நமது ஆடை கலா­சாரம் மறு­ப­டியும் மாற்­றப்­பட வேண்­டு­மென்றும் கூறி வரு­கின்­றனர். அதேபோல் எமது ஆடை கலா­சாரம் மாற்­றப்­பட வேண்டும் என்ற ஒரு விமர்­சனம் அந்­நிய சமூ­கத்­தி­னரால் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது.
விசே­ட­மாக முஸ்­லிம்­களின் ஆடை கலா­சா­ரத்தை விமர்­சிக்கும் பௌத்த குரு­மார்கள் உட்­பட பல்­வேறு கூட்­டத்­தினர் காணப்­ப­டு­கின்­றனர். எனவே. இவை வாத விவா­தங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தக்­கூ­டிய விட­யங்­க­ளாக இருந்த போதிலும், விமர்­சிப்­போ­ருடன் நட்­பு­ற­வோடு கருத்துப் பரி­மாறி விளங்க வைப்­பதே சிறந்­த­தாகும்.

அழ­கான முறையில் நல்ல வார்த்­தை­களில் இது தொடர்பில் கலந்­து­ரை­யா­டலாம் என நபி பெரு­மானார் (ஸல்) கூறி­யி­ருக்­கின்­றார்கள். இது தவிர்த்து எடுத்த எடுப்­பி­லேயே முட்டி மோதிக்­கொள்ள முன்­வரக் கூடாது. சந்­தர்ப்ப சூழ்­நி­லை­க­ளுக்கு ஏற்­ற­வாறு எங்­க­ளு­டைய செயற்­பா­டு­களை நாம் வடி­வ­மைத்துக் கொள்ள வேண்டும்.

வாழ்க்­கையின் யதார்த்­தங்­களை சரிவர புரிந்து கொண்டு செயற்பட வேண்டும். பெண் உரிமை ஆர்வலர்கள் சிலர் வாதவிவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு பேசப்படுகின்றவை சர்ச்சைக்குரியவையென கருதப்படுபவை மட்டுமல்ல சவாலுக்குரியவையும் சமகால விவகாரமும் ஆகும். ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்.

மாறிவரும் காலத்தின் தேவைக்கேற்ப சமூகத்தில் பெண்களின் அந்தஸ்தை பொறுத்தவரை முன்னேற்றகரமான சீர்திருத்தங்கள் உள்வாங்கப்படுவது பற்றி சீர்தூக்கிப்பார்க்கப்பட வேண்டும்.

பெண்களுடைய இயல்பு, உடல்வலிமை சிந்திக்கும் ஆற்றல் என்பவற்றிற்கு ஏற்றதாக அவர்களுக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறான சீர்திருத்தங்கள் இந்தோனேசியாவில் 1961 ஆம் ஆண்டிலேயே உள்வாங்கப் பட்டுவிட்டன. சிலவருடங்களுக்கு முன்னர் அவை மலேசியாவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்பதை நாம் மனங்கொள்ள வேண்டும்.

எங்களது முன்னோரைவிட அதிகமான சவால்களை நாங்கள் எதிர்நோக்குகின்றோம். பெண்களாகிய உங்களது வழிகாட்டலில் அடுத்துவரும் சந்ததியினர் இவற்றைவிட அதிகமான சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கு எமது பெண்கள் சமூகம் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் எனக்கூறி வைக்கவிரும்புகிறேன்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.