புத்திஜீவித்துவ தலைமைத்துவ சபையே காலத்தின் தேவை

0 678

வர­லாறு நெடு­கிலும் இலங்கை முஸ்­லிம்கள் மீது அவ்­வப்­போது சிற்­சில இன, மத ரீதி­யான தாக்­கு­தல்கள் நடந்­து­வந்­தி­ருந்த போதிலும், 30 வருடப் போர் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் அத்­தாக்­கு­தல்கள் சற்றுத் தீவி­ர­ம­டையத் தொடங்­கி­யுள்­ளன. தாக்­குதல் உத்­தி­களும் பல்­வேறு வகை­யாக அமைந்­துள்­ளன. ஆனால் இவற்­றை­யெல்லாம் புரிந்­து­கொள்­வ­திலோ இவற்­றுக்கு முகம்­கொ­டுப்­ப­திலோ முஸ்லிம் சமூகம் எப்­போ­துமே ஒரே பார்­வையை, வழி­மு­றை­யையே கொண்­டுள்­ளது. கால, சந்­தர்ப்ப, அர­சியல், சமூக, பொரு­ளா­தார, கலா­சார நிலை­மை­க­ளுக்கு ஏற்பத் தன்னைப் புன­ர­மைத்துக் கொள்­வ­திலும் முஸ்லிம் சமூகம் பின்­தங்­கியே உள்­ளது. இந்­நி­லையில் நிகழ்­கா­லத்­துக்கு முகம்­கொ­டுப்­ப­திலும் எதிர்­கா­லத்தை எதிர் கொள்­வ­திலும் முஸ்லிம் சமூகம் பாரிய சிக்­க­லுக்கு உள்­ளா­கி­யுள்­ளது.

ஏப்ரல் 21 தாக்­குல்­களின் பின்னர் ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் பாரிய அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் தாக்­கு­தல்­க­ளுக்கும் உள்­ளா­கி­யுள்­ளது. பெள­தீக ரீதி­யான தாக்­கு­தல்­களை விடவும் சிந்­தனா ரீதி­யான தாக்­கு­தல்கள் உக்­கி­ர­ம­டைந்­துள்­ளன. குறிப்­பாக ஊட­கங்­களின் செயற்­பா­டுகள் மிகவும் ஆபத்­தான நிலையில் உள்­ளன. பிக்­கு­களின் நட­வ­டிக்­கை­களும் அதி­தீ­வி­ர­மாக அமைந்­துள்­ளன. இவை­ய­னைத்தும் ஒன்­று­சேர்ந்து ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் மீதும் வஹா­பிஸ – தீவி­ர­வாத – இஸ்­லா­மியப் பயங்­க­ர­வாத முத்­தி­ரை­களைப் பல­மாகக் குத்­தி­விட்­டுள்­ளன.

முஸ்­லிம்கள் தம்­மீ­தான குற்­றச்­சாட்­டுகள் குறித்து நாம் நிதா­ன­மாக, கூட்­டாக உட்­கார்ந்து சிந்­தித்­தி­ருக்­கி­றார்­களா..? சுய­ப­ரி­சீ­லனை செய்­தி­ருக்­கி­றார்­களா..?
கால, இட, அர­சியல், பொரு­ளா­தார, கலா­சார மாறு­தல்­க­ளுக்­கேற்ப முஸ்லிம் சமூ­கமும் தன்னைத் தகு­திப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளதா? சஹ்ரான் என்ன கொள்­கைகள் பேசி­யி­ருந்­தாலும் எவ்­வா­றான சூழ்­நி­லை­களில் உரு­வா­கி­யி­ருந்­தாலும் அதற்­கான பொறுப்­பி­லி­ருந்து முஸ்லிம் சமூகம் முற்­று­மு­ழு­தாகத் தப்­பித்­துக்­கொள்ள முடி­யுமா ? சஹ்­ரானின் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராக முறைப்­பா­டுகள் செய்தோம், தக­வல்கள் கொடுத்தோம் என்று சொல்­வ­தோடு கைக­ழுவிக் கொள்ள முடி­யுமா? அவர்­களின் நட­வ­டிக்­கைகள் குறித்துப் பகி­ரங்­க­மாகப் பொது­மக்­க­ளுக்குத் தெளி­வு­ப­டுத்­தி­னோமா? இந்த ஜம்இய்­யதுல் உல­மாவின் நட­வ­டிக்­கைகள் இந்த விட­யத்தில் போது­மா­ன­வை­யாக இருந்­துள்­ள­னவா?

முப்­பது வரு­டங்­க­ளுக்கும் மேலாக முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்கள் வேண்­டு­மெனப் பேசப்­பட்டு வந்­துள்­ள­போ­திலும் அதற்­காக நாம் மேற்­கொண்­டுள்ள ஆக்­க­பூர்­வ­மான முயற்­சி­கள்தான் என்ன? நமது உடைக் கலா­சா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்­களை நாம் பரி­சீ­லனை செய்ய வேண்­டி­ய­தில்­லையா?

பல்­வேறு வகை­யான குற்­றச்­சாட்­டுகள் நாளாந்தம் எழு­கி­ன்­றன. நாமும் எங்­கா­வது எதை­யா­வது யாரா­வது சொல்லிச் சமா­ளித்துக் கொண்­டி­ருக்­கிறோம். விளக்கம் சொல்­லப்­போகும் போது வேறு பிரச்­சி­னை­க­ளையும் உரு­வாக்கி விடு­கிறோம். பள்­ளி­வா­சல்­களில் வாள்கள் எப்­படி, எதற்­காக வந்­தன எனும் கேள்­விக்கு நம்­ம­வர்கள் கொடுத்த பதில்­களும் அதனால் விளைந்த கேலிக்­கி­ட­மான கருத்­தா­டல்­களும் உங்­க­ளுக்கு மறந்­தி­ருக்க முடி­யாது.

பிரச்­சி­னை­களை அடை­யாளம் காண்­ப­தற்கும் அவற்றை வகைப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும் முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் அவற்றைப் பிரித்­துப்­பார்த்து அதன் அடிப்­ப­டையில் அவற்றை எதிர்­கொள்­வ­தற்­கு­மான ஒரு செயற்­திட்டம் எம்­மி­ட­மில்லை. எல்லாப் பிரச்­சி­னை­க­ளையும் எல்­லோரும் அணுக முடி­யாது, அணு­கவும் கூடாது. ஒவ்­வொரு பிரச்­சி­னைக்கும் அத்­துறை சார்ந்த விஷேட அறிவும் ஆற்­றலும் அனு­ப­வமும் உள்­ள­வர்­களே பதி­ல­ளிக்கும் ஒரு திட்­டத்தை நாம் உரு­வாக்க வேண்டும்.

அண்­மையில் நடந்த தெஹி­வளை மாநாடு மாற்றுச் சமூ­கத்­தாரின் -புல­னாய்வுத் துறை­யி­னரின் – அரச அதி­கார பீடங்­களின் தீவிர அவ­தா­னிப்பைப் பெற்­றுள்­ளது. இவ்­வாறு பல்­லா­யி­ரக்­க­ணக்கில் ஒன்று திரண்டு அடிக்­கடி அவர்­களின் கவ­னக்­கு­விவை -உள்­ளார்ந்த ஐயங்­களை – அச்­சங்­களை நாமும் வலிந்து அதி­கப்­ப­டுத்­து­வதைத் தவிர்த்துக் கொள்­வதே அறி­வு­டை­மை­யாகும்.
ஆர்ப்­பாட்டம், அல்­லோ­ல­கல்­லோலம் இல்­லாமல் சாணக்­கி­ய­மாகக் காய்­களை நகர்த்து வேண்டும். நாம் இவ்­வாறு நமக்குள் ஓரி­டத்தில் பாரிய அளவில் பல்­லா­யி­ரக்­க­ணக்கில் ஒன்று திரண்டு கோஷங்­களை எழுப்­பு­வ­த­னூ­டாக நமக்கு எதி­ரான மாற்றுச் சக்­தி­க­ளையும் தூண்டி விடு­கிறோம். நம்மைப் போலவே அவர்­களும் திரண்­டெ­ழுந்தால் நிலைமை எவ்­வ­ளவு ஆபத்­தா­ன­தாக மாறக்­கூ­டு­மென்­பதை ஏனோ சிந்­திக்கத் தவ­றி­வி­டு­கிறோம். வெறும் 10%மான நாம் 100% மொத்­த­மாக ஒரே அணியில் சேர்ந்து விட்­டாலும் (இந்த உலகம் உள்­ள­வரை அப்­படி நடப்­பது சாத்­தி­ய­மே­யில்லை) 70% அவர்­களில் அரை­வா­சிப்பேர் மாத்­திரம் ஒன்று திரண்­டாலும் நம்மால் அவர்­களை எதிர்­கொள்­ளவே முடி­யாது.
பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பாம­ரர்கள் ஓரி­டத்தில் கூடிச் சத்­த­மி­டு­வ­தை­வி­டவும் பத்துப் புத்­தி­ஜீ­விகள் சத்­த­மில்­லாமல் கலந்­தா­லோ­சித்துக் காரி­யங்­களைச் சாதிப்­பதே சிறந்­தது.

அவர்கள் உண்­மை­யா­கவே உள்­ளார்ந்த அச்­சத்­துக்கு ஆளாகி விட்­டுள்­ளார்கள். அதில் நன்­மை­களும் தீமை­களும் கலந்தே உள்­ளன. நமது வெளிப்­புறக் கோலங்­க­ளாலும் படா­டோ­ப­மான வாழ்க்கை அமைப்­பாலும் அனல்­ப­றக்கும் பேச்­சுக்­க­ளாலும் நாம் அவர்­களை வீணாக அச்­ச­மூட்டி, பதட்­ட­முறச் செய்­தி­ருக்­கிறோம். இது நமக்­கெ­தி­ராக நாமே செய்­து­கொண்­டுள்ள அநி­யா­ய­மாகும்.
பொறு­மை­யாக இருப்போம். எல்லாம் சரி வரும். தமிழ்ச் சகோ­த­ரர்­களை அடக்கி ஒடுக்கி அழித்துக் கட்­டுப்­பத்­தி­யதைப் போல எம்­மையும் கையா­ளத்தான் அவர்கள் காய்­களை நகர்த்­து­கி­றார்கள். நாம் அவர்­க­ளது சதி­களில் சிக்கிக் கொள்­ளக்­கூ­டாது.

நாம் அவர்கள் மீது ஒரே­யொரு கல்லை எறியும் வரைக்­கும்தான் காத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள் – ஒரு கோடிக் கற்­களை நம்­மீது திருப்பி எறியும் திட்­டத்­தோடு வெறி­கொண்டு அவர்கள் வேண்­டு­மென்றே நம்மைச் சீண்­டு­வதும் கோப­மூட்­டு­வதும் நம்மை ஆத்­திரப் படுத்தி நமது நிதா­னத்தைக் குழப்­பத்தான் என்­பதை எப்­போதும் நினைவில் கொண்டு மிக மிக நிதா­ன­மாக நடந்து கொள்வோம் உற­வு­களே !

அர­சாங்­கமும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இந்த நாட்டின் எல்லா ஜனா­தி­ப­தி­களும் பெளத்த மத பீடங்கள் போடும் கட்­ட­ளைப்­ப­டியே செயற்­பட வேண்டும், இந்த நாட்டில் பெளத்த ராஜ்யம் உரு­வாக வேண்டும், இந்­நாட்டில் உள்ளோர் எல்­லோரும் சிங்­கள இனத்­த­வரே, வேறு இனத்தார் என்று தனி­யாக வேறெந்த இனமும் இல்லை என்று சிங்­களப் பேரி­ன­வாதச் சக்­திகள் கூச்­ச­லி­டு­கின்­றன! மறு­புறம், முஸ்­லிம்­களின் எல்லா விவ­கா­ரங்­க­ளையும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையே தீர்­மா­னிக்க வேண்டும் என முஸ்லிம் உணர்­வா­ளர்கள் கூச்­ச­லி­டு­கின்­றனர். அவர்­க­ளுக்கு பெளத்த மதம் ! இவர்­க­ளுக்கு இஸ்­லா­மிய மதம் ! எப்­ப­டியோ இரு இனத்­தா­ருக்கும் “மதம் பிடித்­துள்­ளது” ஒவ்­வோ­ரி­னமும் எல்­லை­மீறி அவ­ரவர் மதங்­களில் வெறி­கொண்டு “மதம்­பி­டித்து” கூச்­ச­லிடத் தொடங்­கினால் இந்­நாடு நர­க­மாகிப் போகும்!
பல்­லினச் சமூ­கங்கள் வாழு­மொரு தேசத்தில் இனங்­களின் மதங்கள், மனி­தர்­களின் தனிப்­பட்ட வாழ்­வுக்கு வெளியே எல்­லை­க­டந்து பொது­வாழ்­விலும் தீவி­ர­மாகச் செயற்­படத் தொடங்­கினால், இத்­தே­சத்தில் மனிதம் மாண்­டு­விடும். நுகே­கொடை, போகம்­பறைப் பிர­க­ட­னங்­க­ளுக்கும் தெஹி­வளைப் பிர­க­ட­னத்­திற்கும் இடையே என்ன பெரிய வித்­தி­யாசம் உள்­ளது?!

முகம் மூடு­வதைத் தடை­செய்தே ஆகு­வோ­மென்று அரசு கடு­மை­யாக முனைப்புக் காட்­டு­வது எவ்­வ­ளவு தவ­றா­னதோ அதே அள­வுக்குத் தவ­றா­னதே முகத்தைக் கட்­டாயம் மூடவே வேண்­டு­மென்று நம்மில் சிலர் அடம்­பி­டிப்­ப­துவும் !

இந்த நாட்டின் சமூக, அர­சியல், கலா­சார மற்றும் பெள­தீகச் சூழலைப் பொறுத்­த­வ­ரை­யிலும், முகம் மூடு­த­லென்­பது எந்­த­வ­கை­யிலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யா­தது, பொருத்­தமும் இல்­லா­தது. நிகாப் தடைக்­கான சட்ட மூலத்தைக் கடு­மை­யாக எதிர்ப்போம். அதே­மா­திரி முகத்தை மூடியே ஆக­வேண்­டு­மென்ற கடும்­போக்­கையும் எதிர்க்க வேண்­டி­யுள்­ளது.

நமக்கு முன்­னா­லுள்ள அடிப்­படைச் சிக்கல் நமக்­கான ஒரு தேசியத் தலை­மைத்­துவம் இல்­லா­மை­யாகும். மார்க்கத் தலை­மை­க­ளுக்கு நாட்டின் அர­சியல், சமூக, கலா­சார, சட்ட விவ­கா­ரங்­களில் போதிய தெளி­வில்லை…
முஸ்லிம் அர­சியல் தலை­மை­களில் அநே­க­ருக்கு மார்க்கம், அதன் அடிப்­ப­டைகள், மார்க்­கத்­தி­லுள்ள கொள்­கைகள் மற்றும் கலா­சார விவ­கா­ரங்கள் எனும் இரண்­டுக்­கு­மான வேறு­பா­டுகள் குறித்த போதிய தெளி­வில்லை.
முஸ்லிம் புத்­தி­ஜீ­விகள் என அறி­யப்­பட்­டுள்­ளோ­ருக்கும் மார்க்கம் குறித்த பரந்த விளக்­கமோ ஈடு­பாடோ பற்றோ போதி­ய­ளவு இல்லை. அவர்­க­ளுக்குத் தேவைப்­ப­டு­வ­தெல்லாம் அவர்­க­ளது வசதி வாய்ப்­புகள், கெள­ரவம், செல்­வாக்கு மட்­டுமே. அதற்­காக அவர்கள் எதையும் கைவிடத் தயா­ராக இருக்­கி­றார்கள்.

ஆக, மார்க்க அறி­ஞர்கள் – அர­சியல் தலை­வர்கள் – புத்­தி­ஜீ­விகள் ஆகிய மூன்று துறை­யி­னரும் தமக்குத் தெரி­யாத அடுத்த துறைகள் குறித்து முழு­மை­யான, தீர்க்­க­மான எந்த முடி­வு­க­ளையும் எடுப்­பது ஆபத்­தா­னது. ஆகவே, முஸ்­லிம்கள் குறித்த எந்த விவ­கா­ரத்­திலும் இம்­மூன்று துறை­யி­னரும் தனிப்­பட்ட ரீதி­யாகத் தீர்­மா­னங்­களை எடுக்­கக்­கூ­டாது.

முஸ்­லிம்கள் தொடர்­பான எல்லா விவ­கா­ரங்­க­ளிலும் இம்­மூன்று துறை­யி­னரும் ஒரே இடத்தில் அமர்ந்து, மனம்­விட்டுப் பேசி, சுமு­க­மான கூட்டுத் தீர்­மா­னங்­க­ளையே எடுக்க வேண்டும். இத்­த­கைய பொது உடன்­பா­டு­களின் பின்­னரே ஊட­கங்­க­ளுக்கு முன்னால் கருத்துத் தெரி­விக்க வேண்டும் !

முஸ்­லிம்­களின் ஒட்­டு­மொத்த விவ­கா­ரங்­க­ளையும் கையாளும் அதி­கா­ரத்தை, உரி­மையை எந்தக் கார­ணத்­தை­யிட்டும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் கைகளில் மட்டும் விட்டு வைத்­தி­ருப்­பது மிகப்­பெரும் ஆபத்தைக் கொண்­டு­வ­ரலாம். முஸ்லிம் சமூ­கத்­துக்குத் தேவை, மார்க்க அறி­ஞர்கள் – அர­சி­யல்­வா­திகள் – புத்­தி­ஜீ­விகள் அடங்­கிய ஒரு தேசிய தலை­மைத்­துவ சபை­யே­யாகும் !

இப்­படிச் சொல்­லும்­போது சிலர், இப்­போதும் முஸ்லிம் கவுன்சில் ஒஃப் ஸ்ரீலங்கா மற்றும் ஷூறா கவுன்சில் போன்ற அமைப்­புகள் உள்­ள­னவே என்­கி­றார்கள். சரி, இருக்­கலாம். ஆனால் அவர்­களால் தமக்­கான பணி­களைத் தேசிய மட்­டத்தில் மிகச்­ச­ரி­யாகச் செய்ய முடிந்­துள்­ளதா..? இல்­லையே. ஒரே­யொரு பிரச்­ச­னை­யைத்­தானும் இவர்­களால் கையாள முடி­ய­வில்­லையே. அது ஏன், அதற்­கான கார­ண­மென்ன என விசா­ரித்துப் பார்த்­த­போது பல கார­ணங்கள் சொல்­லப்­பட்­டன. குறித்த மதத்­த­லை­மை­களே தமக்­கான தடை­க­ளாக இருப்­ப­தாகச் சொல்­கி­றார்கள். அப்­ப­டி­யாயின் அவர்கள் அதை வெளிப்­ப­டை­யாக மக்­க­ளிடம் சொல்ல வேண்டும்.

இவ்­வாறு சமூக நிறு­வ­னங்கள் வெளிப்­ப­டை­யாகப் பேசாமல் விட­யங்­களை மூடி­ம­றைத்­து­வ­ரு­வதால் எந்தப் பிரச்­ச­னை­களும் தீரப்­போ­வ­தில்லை. தேசிய ரீதியில் மக்­களால் தெரி­வு­செய்­யப்­பட்ட அர­சியல் தலை­மைகள் தமக்­கான பொறுப்­பு­க­ளையும் உரி­மை­க­ளையும் மறந்து ஏதோ குறிப்­பிட்ட சில மார்க்க அறி­ஞர்­களின் கட்­டுப்­பாட்டில் மாத்­திரம் இயங்­கு­வதை அனு­ம­திக்க முடி­யாது. பெரும்­பான்மைத் தலை­மைகள் மல்­வத்தைப் பீடங்­களின் கால்­களில் வீழ்ந்து அர­சியல் செய்­வ­தற்கும் நமது எம்.பிக்கள் உலமா சபையின் கால்­களில் வீழ்­வ­தற்­கு­மி­டையில் என்ன வித்­தி­யாசம் உள்­ளது?

இன்­றைய சூழலில் எழக்­கூ­டிய முக்­கிய பிரச்­ச­னை­யாக உழ்­ஹிய்யா உள்­ளது. எனவே அது குறித்துச் சிந்­திக்­க­வேண்­டி­யுள்­ளது. உழ்­ஹிய்­யா­விற்குப் பதி­லாக அதன் பெறு­ம­தியைக் கொடுத்தல்.

உழ்­ஹிய்­யாவைப் பொறுத்­த­வரை அத­னது பெறு­ம­தியைக் கொடுப்­பதைப் பார்க்­கிலும் அதனை அறுத்துப் பலி­யி­டு­வதே மேலா­னது என்­பதே அநே­க­மான அறி­ஞர்­க­ளது கருத்­தாகும்.

இங்கு யாரும் பெறு­ம­தியைக் கொடுப்­பது கூடாது என்று கூற­வில்லை. அறுத்துப் பலி­யி­டு­வது சிறப்­பா­னது என்ற கருத்­தைத்தான் முன்­வைத்­துள்­ளார்கள்.

ஏற்­கெ­னவே குறிப்­பட்­டது போல இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறுப்புக் கட­மை­யில்லை என்ற கருத்தைக் கொண்­ட­த­னால்தான் காசுக்கு இறைச்­சியை வாங்கி உழ்­ஹிய்யா கொடுத்­தார்கள். எனவே பணப் பெறு­ம­தியைக் கொடுப்­பதும் ஆகு­மா­னதே என்ற கருத்தை அதி­லி­ருந்து எடுக்க முடியும்.

பெறு­ம­தியைக் கொடுக்­காது உழ்­ஹிய்­யாவைக் கொடுக்க வேண்டும் என வலி­யு­றுத்­தி­ய­வர்கள் அனை­வரும் அறுத்துப் பலி­யிடும் சுன்னா இல்­லாமல் போய்­விடக் கூடாது என்ற நியா­யத்­தைத்தான் முன்­வைத்­துள்­ளார்கள். கலா­நிதி யூஸுப் கர்­ளாவி அவர்­களின் அபிப்­பி­ரா­யப்­படி ஒருவர் தனக்­காக உழ்­ஹிய்யா வணக்­கத்தை நிறை­வேற்ற நாடினால் அறுத்துப் பலி­யி­டு­வதே மிகவும் சிறந்­தது. ஆனால் மர­ணித்த ஒரு­வ­ருக்குப் பக­ர­மாக உழ்­ஹிய்யா கொடுக்­கும்­போது பெறு­ம­தியைக் கொடுப்­பது சிறந்­தது என அவர் கூறு­கிறார்.

நாம் சிறு­பான்­மை­யாக வாழும்­போது எமது நாட்டின் சட்ட திட்­ட­கங்­களை அனு­ச­ரித்துப் போக வேண்­டி­யுள்­ள­தாலும் ஜீவ­கா­ருண்யம் பற்றிக் கூடு­த­லாகப் பேசு­கின்ற நாடு­களில் ஒன்­றாக இலங்கை இருப்­ப­தாலும் சில நிபந்­த­னை­க­ளுடன் பெறு­ம­தியைக் கொடுப்­ப­தற்­கான முடிவைத் தெரிவு செய்­வது மிகப் பொருத்­த­மா­ன­தாக அமை­யலாம்.

உழ்­ஹிய்யா விவ­கா­ரத்தில் முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் நாடு­களில் உள்ள சட்­டத்­தீர்ப்­புக்­களை நாம் அச்­சொட்­டாகப் பின்­பற்ற வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அவ்­வாறே குறித்த ஒரு மத்­ஹபின் எல்­லைக்குள் இருந்து மாத்­திரம் சிந்­திக்க வேண்­டிய தேவையும் இல்லை. சிந்­த­னை­க­ளுக்குச் சுவர் எழுப்­பு­வதன் மூலம் காலத்தின் தேவையை நிவர்த்தி செய்யும் தீர்­வு­களை வெளிக்­கொ­ணர முடி­யாது.

நாம் வாழும் காலத்தில் உழ்­ஹிய்யா கட­மையை நிறை­வேற்ற அதன் பெறு­ம­தியைத் தர்­ம­மாகக் கொடுப்­பது உழ்­ஹிய்­யாவின் இலக்­கு­களை அடை­வ­தற்குப் போது­மாயின் அதனை அனு­ம­திக்­கலாம். அதனால் அறுத்துப் பலி­யிடும் சுன்னா இல்­லாமல் போகாது. காரணம் இது ஒரு காலத்தின் தேவை மட்­டுமே. நாட்டின் அனைத்துப் பிராந்­தி­யங்­களும் இதனைப் பின்­பற்ற வேண்­டிய அவ­சி­யமும் கிடை­யாது. மிகுந்த கெடு­பி­டி­யுள்ள பிர­தே­சங்­சளில் மாத்­திரம் பெறு­ம­தியைக் கொடுப்­ப­தற்­கான நடை­மு­றைய அமுல் படுத்­தலாம்.

அசா­தா­ரண ஒரு சூழ்­நி­லையில் உழ்­ஹிய்யா தொடர்­பாக எப்­படிச் சிந்­திப்­பது என்­ப­தற்குச் சிரியா நாட்டின் உலமா சபை ஒரு முன்­னு­தா­ர­ண­மாகும். அவர்கள் உழ்­ஹிய்­யாவின் பெறு­ம­தியை சிரியா மக்­களின் துயர் துடைப்­ப­தற்­காக ஸதகா செய்­வது உழ்­ஹியா கட­மையை நிறை­வேற்­று­வதை விடச் சிறந்­தது எனக் குறிப்­பிட்­டுள்­ளனர்.

ஒரு காலத்தில் ஸகாதுல் பித்ர் பண­மாக வசூ­லிக்க முடி­யாது என்ற கருத்து வலுப்­பெற்­றி­ருந்­தது. இன்று இலங்­கையில் இருந்து கடல்­க­டந்த தேசத்­திற்குச் சென்று அதனை வசூ­லித்து மக்கள் பய­ணடையச் செய்­கின்றோம். இது கால­மாற்றம் வேண்­டி­நிற்கும் சிறந்த தீர்வின் விளை­வாக வந்த பய­னாகும்.

அவ்­வாறே கொஞ்ச காலத்­திற்கு முன்பு ஹஜ் காலத்தில் அறுத்துப் பலி­யிடும் மாமி­சத்தை வெளியே கொண்டு போக முடி­யாது என இறுக்­க­மான சட்டம் காணப்­பட்­டது. அது ஹராம் என்ற பத்வா சிந்­த­னைக்கு முடிச்­சாகக் காணப்­பட்­டது. அதன் விளை­வாகப் புனித மக்கா நக­ரமே துர்­நாற்றம் எடுத்­தது.

தேவைக்­க­தி­க­மான குர்­பானி இறைச்சி கழிவுப் பொரு­ளாகக் குவிந்து மலை­க­ளாகக் காட்சி தந்­தன. சுற்றுச் சூழல் மாச­டைந்து ஆரோக்­கியம் பாதிப்­ப­டைய ஆரம்­பித்த போதுதான் பொருத்­த­மான தீர்ப்புக் கிடைத்­தது. இன்று ஹஜ் காலத்தின் உழ்­ஹிய்யா இறைச்சி உலக மக்கள் யாவரும் பய­ன­டையும் பாரிய திட்­ட­மாக மாறி­யுள்­ளது.

கால மாற்­றங்கள், நிர்ப்­பந்­தங்­களைத் தரும்­போது மனிதன் இன்­னொரு தீர்வை நோக்கித் தள்­ளப்­ப­டு­கின்றான். சட்­டத்தின் வரம்­ப­ுகளை மீறாமல் பாரம்­ப­ரிய சிந்­த­னையை உடைத்துக் கொண்டு வெளி­யே­று­வது தவ­றல்ல.
உழ்­ஹிய்­யாவின் பிர­தான இலக்கை அடைந்து கொள்ளும் வகையில் பெறு­ம­தியைக் கொடுப்­பது சிறந்­த­தாயின் அந்த தீர்­மா­னத்தைத் தெரிவு செய்­வது நன்­மை­க­ளையே கொண்­டு­வரும். தேவை­யான நிபந்­த­னை­க­ளுடன் அந்தத் தெரிவு அமு­லுக்கு வந்தால் நிச்­ச­ய­மாக இஸ்­லா­மிய சிந்­த­னையை முன்­வைப்­ப­தற்குப் புதிய வாயில்கள் திறக்­கப்­ப­டலாம்.

ஐரோப்­பிய நாடு­களில் சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளுக்கு உழ்­ஹிய்யா கட­மையை நிறை­வேற்­று­வ­தற்குப் பல தடைகள் இருந்­தன. குர்பான் காலம் வரும் போது கால்­ந­டை­க­ளுக்­கான விலை­யேற்றம், அறுப்­ப­தற்கு முன்பு பலி­யிடும் மிரு­கத்தைக் கட்­டாயம் மயக்க வேண்டும் என்ற அரச கட்­டளை, சில அமைப்­புக்கள் இது மிரு­க­வதை என கூப்­பாடு போடு­வதால் வரும் அசௌ­க­ரி­யங்கள் எனப் பல வழி­களில் உழ்­ஹிய்யா வணக்­கத்தை நிறை­வேற்­று­வதில் தடைகள் இருந்­தன. எனவே நாட்டுக்கு வெளியே அதன் பெறு­ம­தியைக் கொடுத்து அந்த சுன்­னாவை அவர்கள் செய்­வ­தற்கு இஸ்­லா­மிய அறி­ஞர்கள் தீர்ப்பு வழங்­கி­னார்கள். அதனால் தேவை­யு­டை­ய­வர்கள் நன்மை பெற்­றார்கள். இதுவும் பாரம்­ப­ரிய பிக்ஹ் என்ற வேலியை தாண்டிச் சிந்­திக்­கின்­ற­போது மக்கள் பெறும் நல­னாக அமைந்­தது என்­பதை நாம் மனங்­கொள்ள வேண்டும்.

அதேபோல் ரோஹிங்­கிய முஸ்­லிம்கள் முகாம்­களில் பட்­டி­னியால் சாகும் போதும், சிரியா மக்கள் இருப்­பி­ட­மில்­லாமல் ஐரோப்­பிய நக­ரங்­களில் நாதி­யற்­ற­வர்­க­ளாகத் திரி­யும்­போதும், இன்னும் பல நாடு­களில் முஸ்­லிம்கள் வறுமையில் வாடும்போதும் உழ்ஹிய்யாவிற்கு முன்னுரிமை வழங்காமல் அந்தப் பணத்தை வறுமைக்கு தருமாறு பல சட்ட அறிஞர்கள் அறைகூவல் விடுத்தனர்.

இது காலத்தின் தேவையை உணர்ந்து நபிலான ஒரு வணக்கத்தை நிறைவேற்ற முன்பு கடமையைச் செய்ய வேண்டுமென்ற நபிகளாரின் வழிகாட்டல்களை மிகக் கவனமாக உள்வாங்கியதால் ஏற்பட்ட மாற்றங்களாகும். இன்று இலங்கையிலும் இப்படிச் சிந்திக்க வேண்டிய தேவை அதிகமாகவே உள்ளது.

ஏப்ரல் 21 பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில்தான் நாம் உழ்ஹிய்யா வணக்கத்தை நிறைவேற்றும் பருவகாலம் வருகிறது. பலர் சிறைச்சாலைகளில் வீணாக அடைக்கப்பட்டுள்ளனர். அதனால் ஏற்பட்ட பெரும் பொருளாதாரச் சுமை அந்தக் குடும்பங்களின் வழமையான வாழ்வில் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் உழ்ஹிய்யாவின் பெறுமதிகளை வழங்குவதற்கான கருத்துப் பற்றி யோசிப்பதே பொருத்தமானது. அறிஞர்கள், சிவில் சமூக நிறுவனங்கள் இதன் சாதக பாதங்களையும் நாட்டுச் சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு ஆரோக்கியமான கருத்தாடல்களை மேற்கொண்டு ஒரு சாதகமான முடிவுக்கு வருவது பயனுள்ளதாக அமையும்.

முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத் திருத்தத்திலும் இப்போது ஓரளவு இணக்கப்பாட்டு நிலையொன்று ஏற்பட்டுள்ளது. பெண் காதிகள் நியமனம் ஏற்கப்படவில்லை. திருமண வயது பதினெட்டாக உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தேவைப்படும் போது காதியின் முன்னனுமதியோடு பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட பெண்களும் திருமணம் செய்து கொள்ளலாம் எனும் விதிவிலக்கு வாசகத்தையும் சேர்த்துத் திருத்தம் செய்துவிட்டால் அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.

மத்ரஸாக்கள் குறித்த வாத விவாதங்கள் சாதகமான முடிவுகளுக்கே இட்டுச்செல்லும். எல்லாவற்றையும் அவநம்பிக்கை, சந்தேகம், அச்சத்தோடே பார்க்க வேண்டியதில்லை. ஆக்கபூர்வமாக விடயங்களை ஆலோசிப்போம், ஒத்­து­ழைப்போம். எல்லா விட­யங்­க­ளையும் எங்­க­ளுக்குத் தேவை­யான முறை­களில் மட்­டுமே நூற்­றுக்கு நூறு­வீதம் செய்­து­கொள்ள வேண்டும் என நினைப்­பதும் பொருத்­த­மா­ன­தல்ல. நாட்டின் தேசிய நலன், தேசிய ஒரு­மைப்­பாடு குறித்தும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்னும் சில மாதங்­களில் முக்­கி­ய­மான தேர்­தல்கள் வரு­கின்­றன. அது­வ­ரைக்கும் இந்தக் கல­வர – குளப்ப நிலையைத் தொடர்ந்தும் வைத்­துக்­கொள்­ளவே எல்லா அர­சியல் சக்­தி­களும் விரும்பும். எல்லா அர­சியல் சக்­தி­களும் எந்­த­வி­த­மான அர­சியல் நிகழ்ச்சித் திட்­டங்­களும் இல்­லா­ம­லேயே இருக்­கின்­றன. எல்­லோ­ருக்கும் வாக்­குக்­கொள்­ளைக்கு இருக்கும் ஒரே துரும்புச் சீட்டு ஏப்ரல் 21, இஸ்­லா­மிய தீவி­ர­வாதம், இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம், வஹா­பிஸம், அர­பு­ம­ய­ம­ய­மாக்கம், சனத்­தொகைப் பெருக்கம் போன்ற சொற்­றொ­டர்கள் மட்­டும்தான். தேர்­தல்கள் முடிந்­த­வுடன் இக்­கோ­ஷங்­களும் ஓய்­வுக்குப் போகும். மீண்டும் இன்­னொரு தேர்தல் வரும்­போது மீண்டும் இக்­கோ­ஷங்கள் வீதிக்கு வரும். இந்த யதார்த்­தத்தை நாம்தான் புரிந்து கொண்டு புத்­தி­சா­லித்­த­ன­மாகக் காய்­களை நகர்த்த வேண்டும்.

முதலில் நமது அர­சியல் தலை­மைகள் எல்­லா­வற்­றுக்கும் உலமா சபையின் பின்னால் கண்­களை மூடிக்­கொண்டு போவதை உடனே நிறுத்­தி­யாக வேண்டும் அண்­மைக்­கா­ல­மாக முஸ்லிம் சமூ­கத்­திற்கு ஏற்­பட்­டு­வரும் முக்­கால்­வாசிப் பிரச்­சி­னை­க­ளுக்கும் மூல­கா­ரணம் உலமா சபை­தானா என்ற கேள்வி எழு­வதைத் தவிர்க்க முடி­ய­வில்லை.

தமக்குள் ஒரு கருத்து, ஊட­கங்­க­ளுக்கு முன்னால் இன்­னொரு கருத்து, ஆபத்து நிலையில் ஒரு கருத்து, ஆபத்து நீங்­கி­யதும் வேறொரு கருத்து என்று ஒட்­டு­மொத்தச் சமூ­கத்­தையும் குழப்­பிக்­கொண்­டி­ருக்­கி­றது ஜம்­இய்­யத்துல் உலமா சபை. அண்­மைய தெஹி­வளை மாநாடு, கால – சூழ­லுக்குப் பொருத்­த­மற்ற ஒரு முயற்சி என்­பதைச் சொல்லி வைக்க விரும்­பு­கிறோம்.

முஸ்லிம் சமூ­கத்தின் ஒட்­டு­மொத்த விவ­கா­ரங்­க­ளையும் முழுக்க முழுக்க உலமா சபையோ வியா­பார அர­சியல் தலை­மை­களோ கையாள்­வது மிகவும் ஆபத்­தா­னது. நமக்குத் தேவை நிதானமும் அறிவும் சிந்தனைத் தெளிவும் கொண்ட ஒரு ”புத்திஜீவிகள் தலைமைத்துவ சபை” யே. அதன் கீழ் தான் உலமா சபையும் அரசியல் தலைமைகளும் இயங்க வேண்டும்

அஜாஸ் முஹம்மத்

vidivelli

Leave A Reply

Your email address will not be published.