”வென்னப்புவவில் இன வெறிச் செயல்”

மங்கள சமரவீர காட்டம்

0 518

வென்­னப்­புவ பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­வதை தடை செய்ய மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தை வன்­மை­யாகக் கண்­டித்­துள்ள நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர, அதனை ஓர் ‘இன­வெறிச் செயல்’ என்றும் வர்­ணித்­துள்ளார்.

”வென்­னப்­பு­வவில் இன­வெறி; முஸ்லிம் வர்த்­த­கர்கள் வாராந்த சந்­தையில் வர்த்­தக நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட மஹிந்த ராஜ­பக்ச தரப்பின் கட்­டுப்­பாட்டில் உள்ள உள்­ளூ­ராட்சி சபை தடை விதித்­துள்­ளது” என அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தங்கொட்டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை

வென்­னப்­புவ – தங்­கொட்­டுவ பிர­தேச வாராந்த சந்­தையில் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட முஸ்லிம் சமூ­கத்­த­வர்­க­ளுக்கு தற்­கா­லிக தடை விதிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கு­மாறும், வென்­னப்­புவ பகு­தியின் பாது­காப்­பினை பலப்­ப­டுத்­து­மாறும் வென்­னப்­புவ பிர­தேச சபை தலைவர் தங்­கொட்­டுவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரிக்கு எழுத்து மூல­மாக அறி­வித்­துள்ளார்.

அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

தங்­கொட்­டுவ வாராந்த சந்தை தற்­போது வென்­னப்­புவ பிர­தேச சபையின் பொறுப்பின் கீழ் செயற்­ப­டு­கின்­றது. அடிப்­ப­டை­வாத தாக்­கு­தலை தொடர்ந்து நாட்டில் பல்­வேறு பிர­தே­சங்­களில் இனக் கல­வ­ரங்கள் தோற்­றம்­பெற்­றன. இந்­நி­லையில் தங்­கொட்­டுவ வாராந்த சந்­தையில் பல்­லி­னத்­த­வர்­களும் வியா­பார நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­டு­கின்­றார்கள். இச்­சந்­தையில் முஸ்லிம் இனத்­த­வர்­களும் உள்­ள­மை­யினால் பல மாறு­பட்ட கருத்­துக்­களும், முரண்­பா­டான சூழ்­நி­லை­களும் தற்­போது காணப்­ப­டு­கின்­றன. இந்­நி­லைமை தொட­ரு­மாயின் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வர முடி­யாத விளை­வுகள் தோற்றம் பெறும்.

முரண்­பா­டு­களை தீர்த்து அமை­தி­யான சூழலை ஏற்­ப­டுத்தி இப்­பி­ர­தேச பாது­காப்­பினை உறு­திப்­ப­டுத்த வேண்டும். ஆகவே நிலை­மை­யினை கருத்­திற்­கொண்டு தங்­கொட்­டுவ வாராந்த சந்தையில் முஸ்லிம் சமூகத்தவர் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தற்காலிக தடைவிதிக்கும் நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

vidivelli 

Leave A Reply

Your email address will not be published.