‘தலிபான்மயமாகும் பௌத்தம்’

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரின் கருத்துக்கு மங்கள பதில்

0 694

09 ஒன்­றி­ணைய வேண்­டு­மென நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

“அனைத்து உயிர்கள் மீதான அமைதி மற்றும் அன்பு தொடர்­பான எமது சிறந்த தத்­து­வத்தை தலி­பான்­ம­யப்­ப­டுத்­து­வ­தற்கு எதி­ராக உண்­மை­யான பௌத்­தர்கள் தற்­போது  ஒன்­றி­ணைய வேண்டும். மற்­றொரு மனி­தரை கல்­லெ­றிந்து கொல்­லு­மாறு கூறு­வதை எந்­த­வொரு பௌத்­தரும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது” என நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர தனது டுவிட்­டரில் நேற்று தெரி­வித்­துள்ளார்.

அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்க தேர­ரான வரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கருத்து வெளி­யிட்­டி­ருந்த நிலையில், அதற்குப் பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே அமைச்சர் மக்­கள சம­ர­வீர இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்க தேர­ரான வரக்­கா­கொட ஞான­ரத்ன தேரர் கண்டி, யட்­டி­நு­வர, திய­கெ­லி­னாவ கித்­சி­ரி­மெவன் ரஜ­மகா விகா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை நிகழ்த்­து­கையில்  “சிங்­க­ள­வர்கள் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்­களைப் பகிஷ்­க­ரி­யுங்கள். முஸ்லிம் கடை­க­ளுக்கு செல்­லா­தீர்கள். அந்தக் கடை­களில் உண்­ணவோ, அருந்­தவோ வேண்டாம். முஸ்­லிம்கள் சிங்­கள மக்­களை அழிப்­ப­தற்கு எடுத்­த­செ­யற்­பா­டுகள் இப்­போது வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளன. சிங்­கள மக்கள் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்டும். சிங்­கள பெண்­க­ளுக்கு கருத்­தடை சத்­திர சிகிச்சை செய்த முஸ்லிம் டாக்டர் ஒருவர் தொடர்பில் ஊட­கங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யுள்­ளன. அந்த முஸ்லிம் டாக்­டரை கல்­லெ­றிந்து கொல்ல வேண்­டு­மென பலர் என்­னிடம் கூறி­னார்கள். இவ்­வா­றான இனத்­து­ரோ­கி­களை சுதந்­தி­ர­மாக விடக்­கூ­டாது என சீலம் இருக்கும் (சில்) பெண்கள் என்­னிடம் கூறி­னார்கள். அவரை கல்லால் அடித்­துக்­கொல்ல வேண்டும் என்­றார்கள். நான் அப்­ப­டிக்­கூற மாட்டேன். ஆனால் செய்­யப்­பட வேண்­டி­யது அதுதான்”  எனவும் அஸ்­கி­ரிய பீட மகா­நா­யக்க தேரர் தெரி­வித்­தி­ருந்தார்.

இக்­க­ருத்து தொடர்பில் இது­வரை சிங்­கள பௌத்த சமூ­கத்தின் தலை­வர்கள் எவரும் கண்­ட­னங்­களை தெரி­விக்­காத நிலை­யி­லேயே, நிதி­ய­மைச்சர் மங்­கள சம­ர­வீர மாத்­திரம் இதற்கு பதி­ல­ளித்­துள்ளார்.

இதற்கு முன்­ன­தாக, முஸ்லிம் அமைச்­சர்­களை இரா­ஜி­னாமா செய்ய வலி­யு­றுத்தி அது­ர­லியே ரதன தேரர் முன்­னெ­டுத்த உண்­ணா­வி­ரதம் குறித்தும் குறித்த உண்ணாவிரதத்திற்கு ஆதரவு தெரிவித்த கத்தோலிக்க பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மீதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.