ஹலீமும் கபீரும் மீண்டும் பதவியேற்பு

0 517

அண்­மையில் தங்­க­ளது பத­வி­களை இரா­ஜி­னாமா செய்­து­கொண்ட 9 முஸ்லிம் அமைச்­சர்­களில் இருவர் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன முன்­னி­லையில் மீண்டும் தங்­க­ளது முன்­னைய அமைச்­சுப்­ப­த­வி­களைப் பொறுப்­பேற்­றுக்­கொண்­டனர்.

நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி, பெற்­றோ­லிய வள அபி­வி­ருத்தி அமைச்­ச­ராகப் பதவி வகித்த ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவிசாளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான கபீர் ஹாசீம் தனது முன்­னைய அமைச்­சுப்­ப­த­வியைப் பொறுப்­பேற்­றுக்­கொண்டார். மேலும் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்­ச­ராகப் பதவி வகித்த ஐக்­கிய தேசியக் கட்சி ஹாரிஸ்பத்துவ தொகுதி பிரதான அமைப்பாளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினருமான எம்.எச்.ஏ.ஹலீம் தனது முன்­னைய அமைச்சுப் பத­வியைப் பொறுப்­பேற்­றுக்­கொண்டார். இரு­வரும் நேற்றுக் காலை ஜனா­தி­ப­தியின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் ஜனா­தி­பதி முன்­னி­லையில் பத­விப்­பி­ர­மாணம் செய்­து­கொண்­டனர்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்ற கட்­ட­டத்­தொ­கு­தியில் ஒன்­று­கூடி இரா­ஜி­னாமா செய்து கொண்ட அமைச்சுப் பத­வி­களை மீண்டும் பொறுப்­பேற்றுக் கொள்­வதா? இல்­லையா? என்­பது தொடர்பில் கலந்­து­ரை­யா­டி­னார்கள்.

கலந்­து­ரை­யா­ட­லின்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கபீர் ஹாசீமும், எம்.எச்.ஏ.ஹலீமும் மீண்டும் பத­வி­களைப் பொறுப்­பேற்றுக் கொள்­ளு­மாறு தங்­க­ளிடம் கோரிக்கை விடுக்­கப்­ப­டு­வ­தாகத் தெரி­வித்­தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் என்­ப­வற்றின் உறுப்­பி­னர்கள் கட்சி உயர் பீடத்தில் கலந்­து­ரை­யாடி இறு­தித்­தீர்­மானம் எட்­டு­வ­தாகத் தெரி­வித்­தனர். இந்­நி­லையில் கட்சித் தலை­மைத்­து­வங்­களின் தீர்­மா­னத்­துக்கு அமை­வாக தீர்­மா­னங்கள் மேற்­கொள்­வ­தாக தீர்­மா­ன­மொன்­றினை மேற்­கொண்­டனர்.

இதற்­க­மை­வா­கவே ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மைத்­து­வத்தின் தீர்­மா­னத்­தின்­படி நேற்று இரு­வரும் தமது முன்­னைய அமைச்சுப் பொறுப்­புக்­களைப் பொறுப்­பேற்றுக் கொண்­டனர்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அத்­து­ர­லி­ய­ரதன தேரர் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் மற்றும் ஆளு­நர்கள் அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்­புல்லாஹ் ஆகிய மூவ­ரையும் பதவி விலக்­கக்­கோரி அல்­லது அவர்­க­ளா­கவே பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொள்­ளு­மாறு கோரி சாகும் வரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்டம் ஒன்­றினை மேற்­கொண்­டி­ருந்­தார்.

இத­னை­ய­டுத்து கடந்த 3 ஆம் திகதி திங்­கட்­கி­ழமை பகல் 12 மணி­வரை அவரால் கால அவ­கா­சமும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இல்­லையேல் நாடு முழு­வதும் திரு­விழா காண வேண்­டி­யேற்­படும் என பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரரும் எச்­ச­ரித்த நிலையில் முஸ்­லிம்­களின் பாது­காப்பு கருதி சில கோரிக்­கை­களை முன்­வைத்து 9 முஸ்லிம் அமைச்­சர்கள் தங்கள் பத­வி­களை கடந்த 3 ஆம் திகதி இரா­ஜி­னாமா செய்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

இவர்­களில் 4 அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்­களும், 4 இராஜாங்க அமைச்சர்களும் ஒரு பிரதியமைச்சரும் அடங்குகின்றனர்.

தற்போது எஞ்சியுள்ள 2 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 4 இராஜாங்க அமைச்சர்களும் ஒரு பிரதியமைச்சரும் தங்கள் அமைச்சுப் பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக் கொள்வது தொடர்பில் இதுவரை எதுவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.