கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது இன்று கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு

கோடீஸ்வரன், வியாழேந்திரன், கருணா ஆகியோரும் பங்கேற்பு

0 649

கல்­முனை வடக்கு பிர­தேச செய­ல­கத்தை உட­ன­டி­யாக தர­மு­யர்த்தக் கோரி நேற்று மூன்­றா­வது நாளா­கவும் உண்­ணா­வி­ரதப் போராட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

குறித்த பிர­தேச செய­லகம் முன்­பாக இடம்­பெற்று வரும் இப்­போ­ராட்­டத்தில் நேற்று திகா­ம­டுல்ல மாவட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் க.கோடீஸ்­வரன் , மட்­டக்­க­ளப்பு மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.வியா­ழேந்­திரன்  மற்றும் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் ஆகி­யோரும் பங்­கேற்­றி­ருந்­தனர்.

கடந்த திங்­கட்­கி­ழமை காலை தொடக்கம் கல்­முனை சுபத்ரா ராமயா விகா­ரா­தி­பதி ரன்­முத்­து­கல சங்­க­ரத்ன தேரர், கல்­முனை முருகன் ஆலய பிர­தம குரு சிவஸ்ரீ க.கு.சச்­சி­தா­னந்தன் குருக்கள் , கிறிஸ்­தவ போதகர் அருட்­தந்தை கிரு­பை­ராஜா, கல்­முனை மாந­கர சபை உறுப்­பி­னர்­க­ளான சந்­தி­ர­சே­கரம் ராஜன், அ.விஜ­ய­ரெத்­தினம் ஆகியோர் சாகும் வரை­யான உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இவர்­க­ளது உண்­ணா­வி­ரத போராட்­டத்­திற்கு ஆத­ர­வாக கல்­முனை மாந­கர சபையின் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­களும் முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னர்­களும் அர­சியல் பிர­மு­கர்­களும் தமிழ் பொது அமைப்­பு­களின் பிர­தி­நி­தி­களும் உண்­ணா­வி­ர­தத்தில் பங்­கேற்று வரு­கின்­றனர். அத்­துடன் பெரும் திர­ளான இளை­ஞர்­களும் பொது மக்­களும் இப்­போ­ராட்­டத்­திற்கு ஆத­ர­வாக அங்கு கூடி­யுள்­ளனர்.

கல்­முனை வடக்கு பிர­தேச செய­லகம் அமைந்­துள்ள பிர­தான வீதியில் கறுப்புக் கொடிகள் கட்­டப்­பட்­டுள்­ளன. பொலிஸார் பாது­காப்பு பணி­களை தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளனர்.

செவ்­வா­யன்று மாலை அம்­பாறை மாவட்ட அர­சாங்க அதிபர் பண்­டா­ர­நா­யக்க இங்கு வரு­கை­தந்து உண்­ணா­வி­ரதம் மேற்­கொள்­கின்­ற­வர்­க­ளுடன் நடத்­திய சம­ரசப் பேச்­சு­வார்த்தை வெற்­றி­ய­ளிக்­காத நிலையில் நேற்று இப்­போ­ராட்டம் கடு­மை­யாக வலு­வ­டைந்­தி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.

இதற்­கி­டையில்  குறித்த உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­திற்கு ஆத­ர­வாக இன்­றைய தினம் கிழக்கில் ஹர்த்­தா­லுக்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கல்­முனை வடக்குப் பிர­தேச செய­ல­கத்தை தர­மு­யர்த்­தக்­கோரி கல்­மு­னையில் மூன்­றா­வது நாளா­கவும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­திற்கு ஆத­ரவு தெரி­விக்கும் வகையில் இன்று கிழக்கு மாகா­ணத்தில் கடை­ய­டைப்பு செய்து ஹர்த்தால் அனுஷ்­டிக்­கு­மாறும் தமிழ் பற்­றா­ளர்­களை உண்­ணா­வி­ரதம் இடம்­பெறும் இடத்தில் ஒன்­று­கூ­டு­மாறும் கிழக்கு மாகாண மாணவர் பேரவை எனும் அமைப்பால் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

உரிய தீர்வு வழங்­கா­விடின் நாட­ளா­விய ரீதியில் போராட்டம் வெடிக்கும்: கருணா

கல்­முனை உப பிர­தேச செய­லக தர­மு­யர்த்தல் குறித்து உரிய தீர்­வினை அர­சாங்கம் வழங்­கா­விடின், நாட­ளா­விய ரீதியில் போராட்டம் வெடிக்­கு­மென முன்னாள் மீள்­கு­டி­யேற்ற பிர­தி­ய­மைச்சர் கருணா அம்மான் என்று அழைக்­கப்­படும் விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் எச்­ச­ரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை முன்­னெ­டுத்து வரும் மத­கு­ரு­மார்­க­ளினால் மேற்­கொள்­ளப்­படும் உண்­ணா­வி­ரதப் போராட்டக் களத்­திற்குச் நேற்று சென்ற அவர், ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும்­போதே இதனை தெரி­வித்­துள்ளார்.

இங்கு மேலும் தெரி­வித்த அவர், “இந்த பிரச்­சினை நீண்­ட­காலப் பிரச்­சி­னை­யாக கிழக்கு மாகா­ணத்தில் இருந்து வரு­கி­றது.

எதிர்க்­கட்சித் தலைவர் மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருக்­கின்ற காலத்தில் இந்த விடயம் குறித்து பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தப்­பட்­டன.

இதன்­போது தீர்­வினை வழங்க அவர் முன்­வந்தார். எனினும், பல முஸ்லிம் அரசியல் தலைவர்களே அதனை தடுத்து நிறுத்தினர்.

கல்முனை பிரதேசத்தை வேறுபடுத்தி இனத்துவேசத்தை இதற்குள் கொண்டுவந்து எங்களை பிரிக்க நினைப்பார்களானால் எதிர்காலத்தில் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

இதற்கு அரசாங்கம் தீர்வினை வழங்கவில்லையெனில் நாட்டில் முற்றுமுழுதாக போராட்டம் வெடிக்க வாய்ப்புள்ளது” என்றார்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.