கொட்டாரமுல்லையில் ஒருவர் தாக்கி படுகொலை

25 வீடுகள் மீது தாக்குதல்

0 515

நாத்­தாண்­டிய – கொட்­டா­ர­முல்ல பிர­தே­சத்தில் நேற்­று­முன்­தினம் இரவு இன­வா­திகள் மேற்­கொண்ட தாக்­கு­தலில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்ளார்.
நேற்­று­முன்­தினம் இரவு நாடு முழு­வதும் ஊர­டங்குச் சட்டம் அமுலில் இருந்­த­போது, முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்கள், வீடுகள், கடைகள் மற்றும் வாக­னங்கள் மீது வன்­மு­றை­யா­ளர்கள் தாக்­குதல் நடத்­தி­ய­தோடு, சில இடங்­களில் தீ வைத்­து­முள்­ளனர்.

இந்த நிலை­யி­லேயே கொஸ்­வத்த பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கொட்­டா­ர­முல்லை முஸ்லிம் கிரா­மத்தில் இன­வாத வன்­மு­றை­யா­ளர்­களின் தாக்­கு­தல்கள் கார­ண­மாக, கொட்­டா­ர­முல்­லயின் எல்லை கிரா­ம­மொன்றில் தச்சுத் தொழிலில் ஈடு­பட்டு வந்த 4 பிள்­ளை­களின் தந்­தை­யான 45 வய­து­டைய பௌசுல் அமீர் கொல்­லப்­பட்டார். இவரின் வீடு உட்­பட, கொட்­டா­ர­முல்ல பகு­தியில் சுமார் 25 வீடுகள் நேற்று முன்­தி­ன­மி­ரவு தாக்­கப்­பட்­டுள்­ளன.

கொட்­டா­ர­முல்லை எல்லை கிரா­மத்தில் இருக்கும் அமீரின் வீட்­டுடன் இணைந்­த­தாக தச்­சுத்­தொழில் நட­வ­டிக்­கை­யையும் அவர் மேற்­கொண்­டு­வந்தார். நேற்­று­முன்­தினம் இரவு 11 மணி­ய­ளவில் அவர் குடும்­பத்­துடன் வீட்­டினுள் இருந்­த­போது 40 பேர்­கொண்ட கும்­ப­லொன்று வீட்­டுக்கு வந்து தாக்­கு­தலில் ஈடு­பட்­டுள்­ளனர். இதன்­போது கூரிய வாளால் வெட்­டப்­பட்டே பெளசுல் அமீர் படு­கொலை செய்­யப்­பட்­டுள்­ள­தாக பிர­தே­ச­வா­சிகள் தெரி­வித்­தனர்.
அங்­குள்ள வர்த்­தக நிலை­யங்கள் தாக்­கப்­பட்டு கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தா­கவும் 4 வீடு­க­ளுக்கு தீ வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.
அத்­துடன், நாத்­தாண்­டிய பிர­தேச சபை உறுப்­பினர் ரிழ்வான் மற்றும் கொட்­டா­ர­முல்ல பள்­ளி­வாசல் செய­லாளர் ஆகி­யோரின் வீடுகள் மீதும் தாக்­குதல் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இதே­வேளை, கொட்­டா­ர­முல்­ல­யி­லி­ருந்து சில கிலோ­மீட்டர் தொலைவில் அமைந்­துள்ள தும்­மோ­தர பகு­தி­யிலும் இரண்டு பள்­ளி­வாசல் மீது தாக்­குதல் நடத்­தப்­பட்­டுள்­ள­தோடு, வீடு­களும் தாக்­கப்­பட்டு, தீவைப்பு சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன. அத்துடன், இனவாததாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அமீரின் ஜனாஸா நேற்று மாலை கொட்டாரமுள்ளை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதன்போது, அமைச்சர் ரிசாட் பதியுதீன் உள்ளிட்ட பலரும் ஜனாஸா நல்லடக்கத்தில் கலந்துகொண்டனர்.

vidivelli

Leave A Reply

Your email address will not be published.