நெருக்கடி நிலையில் அச்சமடைய வேண்டாம்

தைரியத்துடன் சவால்களை எதிர்கொள்ளுமாறு முஸ்லிம் கவுன்சில் வேண்டுகோள்

0 714

உரு­வா­கி­யுள்ள நெருக்­கடி நிலையில் முஸ்­லிம்கள் அநா­வ­சி­யமாக அச்சம் கொள்­ளாது தைரி­ய­மாக சவால்­களை எதிர்­கொள்ள வேண்­டு­மென முஸ்லிம் இயக்­கங்­களின் கூட்­ட­மைப்­பான முஸ்லிம் கவுன்சில் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.

முஸ்லிம் கவுன்­சிலின் தலைவர் என்.எம். அமீன் இது குறித்து விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் குறிப்­பிட்­டி­ருப்­ப­தா­வது,

அண்­மையில் இடம்­பெற்ற தற்­கொலைத் தாக்­கு­தல்­களைத் தொடர்ந்து நாட்டின் சில பகு­தி­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இனத்­து­வேச செயற்­பா­டுகள் இடம் பெற்­றுள்­ள­மையும் முஸ்­லிம்கள் பல­வா­றான நெருக்­க­டி­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வருகின்­றமையும் கண்­டிக்­கத்­தக்­க­தாகும். பொது இடங்கள், பேருந்­துகள், புகை­யி­ரதம், தொழில் நிலை­யங்கள், வைத்­தி­ய­சா­லைகள் மற்றும் வர்த்­தக நிலை­யங்கள் என்­ப­ன­வற்றில் முஸ்­லிம்கள் இவ்­வா­றான இன்­னல்­க­ளையும் இனத்­து­வேச செயற்­பா­டு­க­ளையும் சந்­தித்து வரு­கின்­றமை குறித்து எமக்குத் தக­வல்கள் கிடைத்து வரு­கின்­றன.

இன்­றைய நெருக்­கடி நிலையைப் பயன்­ப­டுத்திக் கொண்டு ஒரு­சில தீய­சக்­திகள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பொய்ப் பிர­சா­ரங்­களை கட்­ட­விழ்த்து விட்­டுள்­ள­துடன் தமது காழ்ப்­பு­ணர்ச்­சி­களை கொட்­டித்­தீர்த்தும் வரு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது . இதன்­மூலம் இனக் குரோ­தங்­களை ஏற்­ப­டுத்த முயற்­சிக்­கின்­றமை கண்­ட­னத்­திற்­கு­ரி­ய­தாகும்.

தேசிய பாது­காப்­பினை பலப்­ப­டுத்­தவும் தீவி­ர­வா­தத்தை துடைத்­தெ­றி­யவும் பாது­காப்புத் தரப்­பினர் மேற்­கொண்­டு­வரும் செயற்­பா­டு­க­ளுக்கு முஸ்­லிம்கள் தமது பூரண ஒத்­து­ழைப்­பினை வழங்கி வரு­கின்­றனர்.

சோதனை நட­வ­டிக்­கை­க­ளின்­போது பள்­ளி­வா­சல்கள், புனித அல்­குர்ஆன்  மற்றும் ஹதீஸ் கிரந்­தங்கள் என­ப­ன­வற்றின் கண்­ணி­யத்­திற்கு பங்கம் விளை­விக்கும் சில சம்­ப­வங்கள் குறித்தும் எமக்கு முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன.

முஸ்லிம் சமூ­கத்தை மாத்­திரம் இலக்­கு­வைத்து சோதனை நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தோடு இதன்­போது இன்­னல்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­படும் சில சம்­ப­வங்­களும் இடம்­பெற்­றுள்­ளன.

தீவி­ர­வாத ஒழிப்பு நட­வ­டிக்­கை­க­ளின்­போது முஸ்லிம் சமூ­கத்தை மாத்­திரம் இலக்கு வைக்­காது ஏனைய தரப்­பினர் மத்­தி­யி­லுள்ள தீவி­ர­வாத கடும்­போக்கு அமைப்­புக்­க­ளையும் உள்­வாங்­கு­வதன் மூல­மா­கவே தேசிய பாது­காப்­பிற்கு தற்­போது ஏற்­பட்­டுள்ள அச்­சு­றுத்­தலை முழு­மை­யாக  அகற்ற முடியும் .

இலத்­தி­ர­னியல் மற்றும் அச்சு ஊட­கங்­களும் சமூ­க­வலைத் தளங்­களும் ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தையும் குற்­ற­வா­ளி­யாக சித்­தி­ரித்து ஏனைய சமூ­கங்கள் மத்­தியில் வீண் சந்­தே­கங்­களை ஏற்­ப­டுத்தும் வித­மாக செய்­தி­களை வெளி­யி­டா­ம­லி­ருப்­ப­தோடு ஊடக தர்­மத்தின் அடிப்­ப­டையில் செயற்­பட வேண்­டு­மெ­னவும் வின­ய­மாக கேட்டுக் கொள்­கிறோம்.

இத்­த­கைய பின்­ன­ணியில் முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் குறித்தும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் உட­னடி கவ­னத்­திற்கு கொண்டு வந்­துள்­ள­தோடு இவை தொடர்பில் உரிய நட­வ­டிக்­கை­களை எடுப்­ப­தாக உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இன்­றைய நெருக்­க­டி­யான நிலையில்  முஸ்­லிம்கள் மன­மு­டைந்து எதிர்­காலம் குறித்து நம்­பிக்கை இழக்­காது நாட்டின் சுபீட்சத்திற்கும் இன ஐக்கியத்திற்கும் தஙகளது உச்சகட்ட பங்களிப்புக்களை வழங்கவேண்டும்.

அதேநேரம், பல சவால்களுக்கும் இனத்துவேச செயற்பாடுகளுக்கும் மத்தியிலும் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம் சமூகம் மேற்கொள்ளும் இதய சுத்தியுடனான செயற்பாடுகளுக்கு ஏனைய சகோதர சமூகங்களில் இருக்கும் நடுநிலையாக சிந்திப்பவர்கள் பகிரங்கமாகத் தங்களது நல்லாதரவினை வெளிப்படுத்த வேண்டும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.