ஆப்­கா­னிஸ்தான் ஜனா­தி­பதித் தேர்தல் ஜூலை 20 வரை ஒத்­தி­வைப்பு

0 506

எதிர்­வரும் ஏப்ரல் மாதம் நடத்­து­வ­தற்குத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த ஆப்­கா­னிஸ்தான் ஜனா­தி­பதித் தேர்தல் ஜூலை மாதம் 20 ஆம் திகதி வரை பிற்­போ­டப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

ஒக்­டோபர் மாத பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது ஏற்­பட்ட தொழில்­நுட்பப் பிரச்­சி­னை­களைச் சீர் செய்­வ­தற்கு கால அவ­காசம் வழங்­கு­வ­தற்­காக தேர்தல் பிற்­போ­டப்­பட்­டுள்­ள­தாக கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை சுதந்­திர தேர்தல் ஆணைக்­கு­ழுவின் பிரதிப் பேச்­சாளர் அப்துல் அஸீஸ் இப்­ரா­ஹீமி தெரி­வித்தார்.

தேர்தல் மோச­டி­களைக் குறைப்­ப­தனை நோக்­க­மாகக் கொண்ட பயோ­மெற்றிக் அடை­யா­ளப்­ப­டுத்தல் முறை­மையின் அடிப்­ப­டையில் வாக்­காளர் பட்­டி­யலை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கும், தேர்தல் பணி­யா­ளர்­க­ளுக்கு பயிற்­சி­ய­ளிப்­ப­தற்கும் நீண்ட காலம் தேவைப்­ப­டு­கின்­றது. பாரா­ளு­மன்றத் தேர்­தலின் போது வாக்குச் சாவ­டி­களில் பயோ­மெற்றிக் அடை­யா­ளப்­ப­டுத்தல் முறைமை குறைந்த எண்­ணிக்­கை­யான பயிற்­றப்­பட்ட பணி­யா­ளர்கள் ஈடு­ப­டுத்­தப்­பட்­ட­மை­யினால் தேர்தல் முடி­வுகள் தாம­த­மா­கின.

பதிவு செய்­யப்­பட்ட வாக்­கா­ளர்­களுள் அநே­க­மா­னோரின் பெயர்கள் வாக்­காளர் பட்­டி­யலில் காணப்­ப­ட­வில்லை.

வாக்குச் சாவ­டிகள் சில மணி­நே­ரங்கள் கழித்து திறக்­கப்­பட்­ட­தனால் இரண்டாம் நாளும் வாக்­கெ­டுப்பு நடத்­தப்­பட வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. பெறு­பே­றுகள் தொடர்பில் பல்­வேறு சட்ட ரீதி­யான முறைப்­பா­டுகள் முன்­வைக்­கப்­பட்­டன. அதி­க­மான தேர்தல் முடி­வுகள் இது­வரை அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

2014 ஆம் ஆண்டு இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் தாமதமானமையினால் பல்வேறு சர்ச்சைகளும் மோசடி தொடர்பான பரவலாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.