மூடப்பட்டுள்ள மஹர சிறைச்சாலை பள்ளிவாசலை விரைவில் மீளத்திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வர் ரிசாத் பதி­யுதீன் நேரில் விஜயம் செய்து கோரிக்கை

0 123

(ஏ.ஆர்.ஏ.ப­ரீல்)
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல் எனக் கூறி மூடப்­பட்­டுள்ள மஹர சிறைச்­சாலை பள்­ளி­வா­சலை விரைவில் மீளத்­தி­றக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலை­வரும் பராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் பதி­யுதீன் கோரிக்கை விடுத்­துள்­ளார்.

ரிசாத் பதி­யுதீன் கடந்த செவ்­வாய்க்­கி­­ழமை மஹர பள்­ளி­வா­ச­லுக்கு விஜயம் செய்து பார்­வை­யிட்­டார்.அதன் பின்பு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறி­னார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் மஹர சிறைச்­சாலை பள்­ளி­வாசல் இப்­பி­ர­தேச மக்­க­ளுக்­காக 1903இல் நிர்­மா­ணிக்­கப்­பட்­ட­து. நூற்­றாண்­டு­கால வர­லாறு கொண்ட பள்­ளி­வாசல் மூடப்­பட்­டு­ள்­ளதால் இப்­ப­கு­தியில் வாழும் சுமார் 350க்கும் மேற்­பட்ட குடும்­பங்­கள் தங்கள் மார்க்கக் கட­மை­களைத் தொடர முடி­யா­துள்­ள­னர். ஐவேளை தொழு­கை ஜும்ஆ தொழுகை மற்றும் ஜனாஸாத் தொழு­கை­களை நடத்த முடி­யாத நிலைக்­குள்­ளா­கி­யுள்­ள­னர்.இது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் நீதி­ய­மைச்­ச­ரிடம் பேசிய போதும் சாத­க­மான பதில் கிடைக்­க­வில்­லை.இ­த­னாலே இவ்­வி­ட­யத்தில் ஜனா­தி­ப­தியின் தலை­யீட்டைக் கோரு­கி­றோம். மூடப்­பட்­டுள்ள பள்­ளி மீண்டும் திறக்­கப்­பட வேண்டும் இல்­லையேல் புதி­தாக பள்­ளி­வா­சலை நிர்­மா­ணிக்க காணி வழங்­க­ வேண்டும் என ஜனா­தி­ப­தி­யிடம் கோரி­யுள்­ளேன்.

பள்­ளி­வாசல் மீளத்­தி­றக்­கப்­பட வேண்­டு­மென இப்­ப­குதி சிங்­கள மக்­களும் ஆர்ப்­பாட்டம் நட­த்­தி­யி­ருந்­த­னர்.நான்கு வரு­டங்­க­ளாக இப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வில்­லை.இப்­பி­ரச்­சினை அவ­ச­ர­மாகத் தீர்க்­கப்­பட வேண்­டும் என்­றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.