பத்­தா­யிரம் இலங்­கை­யர்­களை இஸ்ரேலுக்கு தொழி­லுக்­காக அனுப்பும் திட்­டத்தை அர­சாங்கம் கைவிட வேண்­டும்

மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் சபையில் கோரிக்கை

0 87

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இலங்­கை­யர்­க­ளுக்கு தமது நாட்டில் வேலை வாய்ப்­புக்­களை வழங்­க­வுள்ள இஸ்ரேல் அவர்­க­ளுக்கு அங்கு இரா­ணுவப் பயிற்­சியும் வழங்­கு­வ­தற்குத் திட்­ட­மிட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது. அத்­தோடு பலஸ்­தீ­னர்­க­ளி­ட­மி­ருந்து பல­வந்­த­மாக பறித்துக் கொள்­ளப்­பட்ட காணி­க­ளிலேயே இந்த வேலை­வாய்ப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே அர­சாங்கம் இலங்­கை­யர்­களை வேலை­வாய்ப்­புக்­காக இஸ்­ரே­லுக்கு அனுப்­பு­வதை மீள் பரி­சீ­லனை செய்ய வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வ­ரு­மான ரவூப் ஹக்கீம் கோரினார்.

பாரா­ளு­மன்றில் விஷேட உரை­யொன்­றினை ஆற்­று­கை­யிலேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். மேலும் அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், இஸ்­ரே­லுக்கு அனுப்­பப்­படும் தொழி­லா­ளர்­க­ளுக்கு அங்கு உயி­ரி­ழப்­புகள் ஏற்­பட்டால் அது எமது நாட்டில் தேவை­யற்ற பிரச்­சி­னை­களை உரு­வாக்­கலாம். அரபு நாடு­களில் இலட்­சக்­க­ணக்­கான இலங்­கை­யர்கள் தொழில் புரியும் நிலையில் இலங்­கை­யி­லி­ருந்து தொழி­லா­ளர்­களை இஸ்­ரே­லுக்கு அனுப்­பு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இதனால் எமது அரபு நாடு­க­ளு­ட­னான உறவில் விரிசல் ஏற்­ப­டலாம். எமது அர­சாங்­கத்தின் இந்த நட­வ­டிக்கை பிழை­யான நேரத்தில் தவ­றான தீர்­மானம் என என்­னிடம் அரபு நாடு­களின் பல தூது­வர்கள் தெரி­வித்­தார்கள். தென்­னா­பி­ரிக்க மற்றும் பிரேஸில் ஜனா­தி­பதிகள் இஸ்­ரே­லு­ட­னான இரா­ஜ­தந்­திர உற­வு­களை துண்­டித்துக் கொள்ள நட­வ­டிக்கை எடுத்து வரும் நிலையில் நாம் இவ்­வி­டயம் தொடர்பில் உணர்வுபூர்­வ­மாக தீர்­மானம் மேற்­கொள்ள வேண்டும்.

அரபு நாடுகள் இஸ்ரேல் தொட­ர்­பாக கலந்­து­ரை­யாடி வரும் நிலையில் நாங்கள் சந்­தர்ப்­ப­வா­தி­க­ளாக செயற்­படக் கூடாது. ஜேர்­ம­னியில் ஹிட்லர் யூதர்­களை கொலை செய்த போது, அங்கு ஏற்­பட்­ட வெற்­றி­டங்­க­ளுக்கு இலங்­கை­யர்­களை அனுப்பும் நட­வ­டிக்­கை­யா­கவே இதனை நான் கரு­து­கிறேன். அதனால் இலங்­கை­யர்­களை வேலை­வாய்ப்­புக்­காக இஸ்­ரே­லுக்கு அனுப்­பு­வதை அரசு மீள் பரி­சீ­லனை செய்ய வேண்டும்.

மேலும் தொழி­லுக்கு செல்­ப­வர்­க­ளுக்கு அங்கு இரா­ணுவப் பயிற்­சிகள் வழங்­கப்­ப­டு­வதன் மூலம் இந்­நாட்டில் எதிர்­கா­லத்தில் வேறு அசம்­பா­வி­தங்­களும் இடம் பெற வாய்ப்­புண்டு.

அரபு நாடுகள் இலட்­சக்­க­ணக்­கான இலங்­கை­யர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­புக்­களை வழங்கிக் கொண்­டி­ருக்கும் நிலையில் அரபு நாடு­களின் பகைமை நாடாக விளங்கும் இஸ்­ரே­லுடன் உறவு கொள்­வதும், வேலை­வாய்ப்­பிற்கு தொழி­லா­ளர்­களை அனுப்பி வைப்­பதும் உகந்­த­தாக அமை­யாது என்றார்.

அமைச்சர் மனுஷ நாண­யக்­கார
இதே­வேளை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவூப் ஹக்­கீமின் கருத்­துக்கு தொழில் மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாண­யக்­கார பதி­ல­ளிக்­கையில், இலங்­கை­யி­லி­ருந்து பலர் அரபு நாடு­க­ளுக்கு வேலை­வாய்ப்புப் பெற்றுச் செல்­கின்­றனர். ஏதா­வது ஒரு நாடு எம்­மி­ட­மி­ருந்து தொழி­லா­ளர்­களை கோரும் பட்­சத்தில் நாம் இன, மத ரீதி­யாக செயற்­பட முடி­யாது. இஸ்ரேல் -காஸா யுத்தம் ஆரம்­பித்த போது நாம் தொழி­லா­ளர்­களை அங்கு அனுப்­பு­வதை தற்­கா­லி­க­மாக நிறுத்­தி­யி­ருந்தோம். தற்­போது இஸ்­ரே­லுக்கு அனுப்­ப­வுள்ள பத்­தா­யிரம் தொழி­லா­ளர்­க­ளுக்கு இரா­ணுவப் பயிற்சி அளிக்­கப்­ப­டு­மென கூறப்­ப­டு­வதில் எவ்­வித உண்மையுமில்லை. இஸ்ரேலினால் காஸாவில் கைப்பற்றப்பட்ட இடங்களுக்கு இவர்கள் தொழிலுக்காக அனுப்பி வைக்கப்படமாட்டார்கள்.

இலங்கை வெளிநாட்டுக் கொள்கையில் ஒரு அணிசேரா நாடு. இஸ்ரேல் -காஸா யுத்தத்தை நாம் எதிர்க்கிறோம். இதற்காக ஐ.நா.வில் கூட நாம் குரல் கொடுத்துள்ளோம். எனவே இங்கு இனவாத கருத்துக்களை முன்வைக்க வேண்டாம் என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.