ஐ.தே.க.வுடன் ஐ.ம.ச இணைந்தால் ஸ்திரமான அரசாங்கத்தை அமைக்கலாம்

பாராளுமன்ற உறுப்பினர் ஹலீம் வலியுறுத்தல்

0 142

(எம்.வை.எம்.சியாம்)
ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டால் அதி­க­மான கட்சி தாவல்­களை எதிர்­பார்க்க முடியும். இந்­நி­லையில் ஐக்­கிய மக்கள் சக்தி ஐக்­கிய தேசிய கட்சி இணைந்தால் ஸ்திர­மான அர­சாங்­க­மென்றை அமைக்­கலாம். இதுவே பல­ரது எதிர்­பார்ப்­பாகும் என கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரி­வித்தார்.

தேர்­த­லொன்­றுக்கு முகம்­கொ­டுக்க கட்­சிகள் தயா­ராகிக் கொண்­டி­ருக்­கின்­றன. இந்­நி­லையில் ஜனா­தி­பதி தேர்­தலில் ரணில் விக்­ர­ம­சிங்­க­வுக்கு ஆத­ரவு தெரி­வித்து, பொதுத் தேர்­தலில் சஜித் பிரே­ம­தாஸவை பிர­தம­ராக்­கு­வது குறித்து பேச்­சு­வார்­தை­களை ஆரம்­பிக்க வேண்டும் என்றும் அவர் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது,
ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்டால் அதி­க­மான கட்சி தாவல்­களை எதிர்­பார்க்க முடியும் என நினைக்­கிறேன். நாட்டின் அனைத்து கட்­சி­களும் தேர்தல் ஒன்­றுக்கு தயா­ரா­கிக்­கொண்­டி­ருக்­கின்­றன. குறிப்­பாக தற்­போ­தைய சூழ்­நி­லையில் ஜனா­தி­பதி தேர்தல் ஒன்று இடம்­பெற்றால் அதி­க­மாக வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கு­வார்கள். இவ்­வாறு அதி­க­ள­வி­லான வேட்­பா­ளர்கள் கள­மி­றங்­கினால் யாராலும் 50 வீதத்­துக்கும் அதி­க­மான வாக்­குகளை பெற்றுக் கொள்ள முடி­யாமல் போகும். இந்­நி­லையில் இரண்­டா­வது விருப்பு வாக்­கு­க­ளுக்கு செல்ல வேண்டி ஏற்­படும். பாரா­ளு­மன்ற தேர்­தலை காட்­டிலும் ஜனா­தி­பதி தேர்­தலில் கட்சி தாவல்­களை குறை­வா­கவே எதிர்­பார்க்­கலாம்.

எனவே ஐக்­கிய மக்கள் சக்தி ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் இணைந்து தேர்­த­லுக்கு செல்ல வேண்டும் என பலரும் எதிர்­பார்க்­கின்­றனர். நானும் அதையே விரும்­பு­கிறேன். இருப்­பினும் இந்த இரண்டு கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து பய­ணிப்­பதை தடுக்கும் வகையில் இரு கட்­சி­க­ளிலும் சில குழு­வினர் செயற்­ப­டு­கின்­றனர்.

ஐக்­கிய மக்கள் சக்­தியும் ஐக்­கிய தேசிய கட்­சியும் இணைந்து பய­ணித்தால் மாத்­தி­ரமே ஸ்திர­மான அர­சாங்­க­மொன்றை அமைக்க முடியும். அத்­தோடு நீண்ட நாட்­க­ளுக்கு நாட்டில் குழப்­ப­மில்­லாத ஆட்­சியை நடத்தி செல்­லலாம். ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவில் பலர் ஆத­ர­வாக செயற்­ப­டு­கி­றார்கள்.ஒரு சிலர் தமது கட்சி இல்­லாமல் போய் விடும் என அச்­சத்தில் இருக்­கின்­றனர். எவ்­வா­றா­யினும் அந்த கட்­சிக்குள் குழப்ப நிலை ஒன்று காணப்­ப­டு­கி­றது. ஜனா­தி­பதி தேர்தல் இடம்­பெ­று­மாயின் நிச்­சயம் அவர்­களில் பலர் ரணி­லுக்கு ஆத­ரவு வழங்­குவர்.

மேலும் ஐக்­கிய தேசிய கட்­சி­யுடன் ஐக்­கிய மக்கள் சக்தி இணைந்து செயற்­ப­டு­மாயின் பொது­ஜன பெர­முன கூட்­ட­ணி­யி­லி­ருந்து தானா­கவே வில­கிக்­கொள்ளும்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க நன்கு அனு­ப­வமிக்க முதிர்ச்­சி­யான தலைவர். சகல துறை­க­ளிலும் அவ­ருக்கு நிபு­ணத்­துவம் இருக்­கி­றது. எமது கட்­சியின் தலைவர் சஜித் பிரே­ம­தாஸ இளம் துடிப்­புள்ள அர­சி­யல்­வாதி. மக்­க­ளுக்கு தானாக முன்­வந்து சேவை செய்­யக்கூடிய ஆளுமைமிக்­கவர்.

எனவே இந்த இர­ண்டு பேரும் ஒரு நிலைப்­பாட்டின் கீழ் வரு­வார்கள் என்றால் மாற்றம் ஒன்றை ஏற்­ப­டுத்த முடியும். இவர்­க­ளுக்கு இடையில் புரிந்­து­ணர்­வுடன் செயற்­பட்டு ஜனா­தி­ப­தி­யான ரணில் விக்கிரமசிங்கவை நியமித்து பின்னர் பொது தேர்தலில் நாட்டின் பிரதமராக சஜித் பிரேமதாஸவை நியமிக்க வேண்டும். மேலும் ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிந்த பின்னர் அடுத்த தேர்தலில் நாட்டின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸ பொறுப்பேற்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.