காஸாவில் சிக்கியுள்ள இலங்கையர்களின் நிலை என்ன?

0 156

சிங்­க­ளத்தில் : பிரசாத் தனுஷ்க குண­சிங்க
தமிழில் : ஏ.ஆர்.ஏ.பரீல்

‘இஸ்ரேல் எல்­லைக்கு அண்­மை­யி­லுள்ள கிறிஸ்­தவ ஆல­யத்தில் நாங்கள் 700 பேர் தங்­கி­யி­ருக்­கிறோம். 10 நிமி­டங்­க­ளுக்கு ஒரு தடவை இஸ்ரேல் குண்­டுத்­தாக்­குதல் நடத்­து­கி­றது. எங்கள் உயி­ருக்கு ஆபத்து ஏற்­பட்­டுள்­ளது. கழி­வ­றைக்கு செல்­வ­தற்குக் கூட நாங்கள் பயப்­ப­டு­கிறோம்’ என்­கிறார் இலங்­கையைச் சேர்ந்த இசான் பெரேரா.

தொலை­பே­சி­யூ­டாகத் தொடர்­பு­கொண்டு இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த நிலைமை, காஸா­வி­லுள்ள இலங்­கை­யர்­களின் நிலைமை குறித்து வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

சிறிது காலத்­தக்கு முன்பு நான் எனது நெருங்­கிய நண்பர் ஒரு­வரைச் சந்­தித்த போது அவ­ரது சிறு பிள்­ளைகள் இருவர் பற்­றியும் விசா­ரித்தேன்.
‘ஓ அவர்கள் நல­மாக இருக்­கி­றார்கள். இஸ்ரேல் – பலஸ்தீன் போன்று வாழ்­கி­றார்கள்’ என்று நண்பர் பதி­ல­ளித்தார். அவர்­க­ளிடம் சுட்­டித்­தனம் இருந்­தாலும் இஸ்ரேல் பலஸ்தீன் போன்று அடிக்­கடி சண்டை பிடித்­துக்­கொள்­வார்கள் என்­பதே இதன் பொருள்.

எங்கள் சமூ­கத்தின் மத்­தியில் இரு நாடுகள் பற்றி இவ்­வா­றான ஒரு கருத்தே வேரூன்றி உள்­ளது. ஏனென்றால் இரு நாடு­களும் தொடர்ந்து சண்­டை­யிலேயே வாழ்­கின்­றன.

உண்­மையில் இதுதான் நிலைமை. கடந்த காலங்­களில் இருந்து இது­வரை உலகில் அதிகம் யுத்த நிலை­மை­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருக்கும் நாடுகள் இஸ்­ரேலும் பலஸ்­தீ­னு­மாகும் என எவ­ரா­வது கூறு­வார்­க­ளாயின் பெரும்­பா­லானோர் இதற்கு உடன்­ப­டு­வார்கள்.

இரண்­டா­வது உலக யுத்­தத்­துக்கு முன்பு இஸ்ரேல் என்ற பெயரில் ஓர் நாடு உலக வரை­ப­டத்தில் இருக்­க­வில்லை. அப்­போது பலஸ்தீன் என்ற பெயரில் நாடொன்று இருந்­தது. என்­றாலும் இரண்­டா­வது உலக யுத்­தத்­துக்குப் பின்பு இஸ்ரேல் என்ற பெயரில் தனி­யாக யூத நாடொன்று உரு­வா­கி­யது. பலஸ்­தீ­னர்­களின் பூமி­யிலே இந்­நாடு உரு­வாக்­கப்­பட்­டது. இதன்­பின்பு பலஸ்­தீ­னர்­களும் இஸ்­ரே­லர்­களும் பல தட­வைகள் யுத்தம் செய்து கொண்­டனர். அவ்­வாறு அவர்கள் போரிட்­டுக்­கொண்ட சந்­தர்ப்­பங்­களில் எல்லாம் இஸ்­ரேலின் நில ஆக்­கி­ர­மிப்பு அதி­க­ரித்­தது. பலஸ்­தீ­னர்­களின் நிலம் அப­க­ரிக்­கப்­பட்­டதால் அதன் அளவு குறை­வ­டைந்­தது. தற்­போது பலஸ்­தீனம் காஸா பிராந்­தி­யத்­துக்கும், மேற்குக் கரைக்கும் மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இஸ்­ரே­லுக்கும் பலஸ்­தீ­னுக்கும் அண்­மைக்­கா­லங்­களில் சிறு கல­வ­ரங்கள் மூண்­டாலும் பாரிய அளவில் ஒரு­வரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலைமை உரு­வா­க­வில்லை.

என்­றாலும் கடந்த அக்­டோபர் 7ஆம் திகதி அதி­காலை எதிர்­பா­ராத வித­மாக அங்கு போர் மூண்­டது. ஆயி­ரக்­க­ணக்­கான ரொக்கட் தாக்­கு­தல்கள் இஸ்­ரேலை நோக்கி ஹமாஸ் போரா­ளி­களால் மேற்­கொள்­ளப்­பட்­டது. இவ்­வாறு 5 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்ட ரொக்­கட் தாக்­கு­தல்கள் ஹமாஸ் போரா­ளி­களால் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இஸ்­ரேலின் எல்­லைக்குள் புகுந்த ஹமாஸ் போரா­ளிகள் சிவில் மற்றும் இரா­ணுவ மத்­திய நிலை­யங்­களைத் தாக்­கி­னார்கள். அவர்கள் 200க்கு மேற்­பட்ட இஸ்­ரே­லி­யர்­களை பணயக் கைதி­க­ளாக காஸா­வுக்குக் கொண்டு சென்­றனர்.

இத­னை­ய­டுத்தே அப்­பி­ராந்­தி­யத்தில் யுத்த நிலை­மை­யொன்று உரு­வா­கி­யுள்­ளது. தற்­போது யுத்த நிலைமை மோச­மான நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளது. வான் வழித்­தாக்­கு­தல்­க­ளுடன் தரை வழித் தாக்­கு­தல்­க­ளையும் இஸ்ரேல் காஸா பிராந்­தி­யத்தை நோக்கி நடத்திக் கொண்­டி­ருக்­கி­றது.

பலஸ்தீன் காஸா பிராந்­தி­யத்தைக் கைப்­பற்றி ஹமாஸ் போரா­ளி­களை பூண்­டோடு அழித்து விடு­வ­தாக இஸ்­ரே­லிய பிர­தமர் சவால் விட்­டி­ருக்­கிறார். இஸ்­ரேலின் காஸா மீதான பயங்­க­ர­மான தாக்­கு­தல்­களின் கார­ண­மாக பலஸ்­தீனில் காஸா பிராந்­தி­யத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான குழந்­தைகள், பெண்கள், வயோ­தி­பர்கள் தினம் கொல்­லப்­பட்டு வரு­கி­றார்கள். உண­வுக்கும், குடி­நீ­ருக்கும் மருந்­து­க­ளுக்கும் அங்கு பெரும் தட்­டுப்­பாடு நில­வு­கி­றது. இந்­நி­லைமை அங்கு வாழும் வெளி­நாட்­ட­வ­ரையும் பாதிப்­புக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

காஸாவில் இலங்­கை­யர்கள்
காஸா பிராந்­தி­யத்தில் 17 இலங்­கை­யர்கள் சிக்­கிக்­கொண்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது பற்றி வெளி­நாட்டு ஊட­கங்கள் செய்தி வெளி­யிட்­டுள்­ளன. இந்­நி­லைமை பற்றி நாம் பலஸ்­தீ­னி­லுள்ள இலங்கை கொன்­சி­யுலர் ஜெனரல் நாவ­லகே பெனட் கூரேயைத் தொடர்­பு­கொண்டு வின­வினோம்.

‘இங்கு தற்­போது மூன்று குடும்­பங்கள் உள்­ளன. நாங்கள் இவர்­களை எகிப்தின் ரபா எல்­லை­யூ­டாக எகிப்­துக்கு அனுப்­பி­வைக்க எதிர்­பார்த்­துள்ளோம். ஐ.நா. அமைப்பு மற்றும் செஞ்­சி­லுவைச் சங்கம் இந்­ந­ட­வ­டிக்­கை­க­ளுக்கு உதவ முன்­வந்­துள்­ளார்கள்.

யுத்தம் மிகவும் கோர­மா­னது . இதில் மாற்றுக் கருத்து இல்லை. யுத்தம் ஒன்று ஏற்­பட்டால் அதனால் பாதிக்­கப்­ப­டு­வது சாதா­ரண பொது மக்­களே. தற்­போது பலஸ்­தீனில் வதியும் இலங்­கையர் ஒரு­வ­ருடன் தொடர்­பு­களை மேற்­கொண்டாம்.

‘நான் இசான் பெரேரா 26 வயது. இலங்­கையில் கண்­டியைச் சேர்ந்­தவன். இவ்­வ­ருடம் மார்ச் மாதம் நான் வேலை­வாய்ப்புப் பெற்று காஸா­வுக்கு வந்தேன். முதலில் நான் மாத்­தி­ரமே வந்தேன். பின்பு எனது மனை­வி­யையும் பிள்­ளைகள் இரு­வ­ரையும் இங்கு அழைத்துக் கொண்டேன். யுத்தம் ஆரம்­பிக்­கப்­பட்­டதும் இங்­கி­ருந்து வெளி­யேற வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டது. தற்­போது இஸ்ரேல் நாட்டின் எல்­லை­யி­லி­ருந்து அமைந்­துள்ள முத­லா­வது நக­ரத்தின் கிறிஸ்­தவ ஆல­யத்தில் நாங்கள் தங்­கி­யி­ருக்­கிறோம். இங்கு சுமார் 700 பேர் வரையில் தங்­கி­யி­ருக்­கி­றார்கள். அண்­மையில் பலஸ்தீன் பள்­ளி­வா­ச­லொன்றின் மீதும் குண்­டுத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டது. 10 நிமி­டங்­க­ளுக்கு ஒரு தடவை இஸ்ரேல் 60 ரொக்கட் தாக்­குதல் வரையில் நடத்­து­கி­றது. எங்கள் உயி­ருக்கு மிகவும் ஆபத்­தான நிலை ஏற்­பட்­டுள்­ளது.

பலஸ்­தீ­னி­லுள்ள இலங்கை தூது­வ­ரா­ல­யத்தின் அதி­கா­ரிகள் ஒவ்­வொரு நாளும் காலையில் எங்­களைத் தொடர்பு கொண்டு எங்­க­ளது நிலைமை குறித்து அறிந்து கொள்­கி­றார்கள். தினம் இரு தட­வைகள் எங்­க­ளுக்கு உணவு வழங்­கப்­ப­டு­கி­றது’ என்றார்.

பலஸ்தீன் தூது­வ­ரா­லயம் இவர்கள் தொடர்பில் கரி­ச­னை­யுடன் செயற்­ப­டு­வது பாராட்­டத்­தக்­க­தாகும்.

மீண்டும் இரண்டு தினங்­களின் பின்பு நாங்கள் இசான் பெரே­ராவைத் தொடர்பு கொண்டோம். ஆனால் அவரைத் தொடர்பு கொள்­வது இலே­சா­ன­தாக இருக்­க­வில்லை. தொலை தொடர்பு கட்­ட­மைப்பில் சில தடைகள் இருப்­பதை எம்மால் ஊகிக்க முடிந்­தது.

‘உண்­மையில் நீங்கள் என்­னுடன் பேசி­ய­தற்­கா­கவே நான் தொடர்பில் இருக்­கிறேன். நாங்கள் இங்கு பயத்­து­டனே இருக்­கிறோம். நான் இரண்டு தினங்­க­ளுக்கு முன்பு உங்­க­ளுடன் பேசிய போது இருந்த நிலைமை இன்று இங்கு இல்லை. தற்­போது இங்கு முன்பை விட அதி­க­மாக வான்­வ­ழித்­தாக்­கு­தல்கள் நடத்­தப்­ப­டு­கின்­றன. இப்­போது நீங்கள் பேசிக்­கொண்­டி­ருக்கும் போது கூட குண்­டுத்­தாக்­குதல் சத்தம் உங்­க­ளுக்கு கேட்­கி­ற­தல்­லவா?

எனது கைய­டக்கத் தொலை­பே­சி­யூ­டாக போட்­டோக்­களை அனுப்­பு­வது கூட சவா­லாக உள்­ளது.. பய­மாக இருக்­கி­றது. போனில் லைட் எரி­வ­துக்கும் பயப்­பட வேண்­டி­யுள்­ளது. அந்த வெளிச்­சத்தை இலக்­காகக் கொண்டு தாக்­குதல் நடத்­தப்­ப­டலாம். உண்­மையில் கழி­வ­றைக்குச் செல்­வ­தற்குக் கூட நாங்­கள் பயப்­ப­டு­கிறோம்.

அவர் கூறி­யது உண்மை. அவ­ருடன் தொடர்பில் இருந்த போது பல தட­வைகள் தாக்­குதல் நடத்­தப்­படும் சப்தம் எமக்குக் கேட்­டது. அதனால் அவ­ரது உயி­ருக்கு ஆபத்து ஏற்­படும் என்­பதால் நாம் தொடர்­பினைத் துண்­டித்­துக்­கொண்டோம்.
நானும் மனை­வியும் பிள்­ளை­களும் எகிப்­துக்கு இடம்­பெ­ய­ரவே எதிர்­பார்த்­துள்ளோம். முடியாவிட்டால் எப்படியாவது மனைவியையும் பிள்ளைகள் இருவரையுமாவது எகிப்துக்கு அனுப்பி வைப்பதற்கே முயற்சிக்கிறேன். என்றாலும் எகிப்தின் ‘ரபா’ எல்லை இதுவரை திறந்து விடப்படவில்லை.
அப்பாவி மனித உயிர்கள் உத்தரவாதமின்றி அல்லலுறும் நிலையில் மனித நேயம் இல்லாத தாக்குதல்கள் தொடர்கின்றன. இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இலங்கையில் அருகம்பே பகுதியில் தங்கியுள்ள இஸ்ரேல் உல்லாசப் பயணிகளை நாட்டிலிருந்தும் வெளியேறுமாறு சிலர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான நிலைமைகள் தவிர்க்கப்பட வேண்டும். அது எமது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும்.

நன்றி : ஞாயிறு மவ்பிம

–Vidivelli

Leave A Reply

Your email address will not be published.