ஓய்விலிருக்க வேண்டிய நிலையிலும் கடமைக்குச் சென்று உயிர்நீத்த டாக்டர் பாஹிமா

0 849

ஏ.ஆர்.ஏ.பரீல்

உயர் இரத்த அழுத்தம் கார­ண­மாக தனது இல்­லத்தில் ஓய்வு எடுத்­துக்­கொண்­டி­ருந்த டாக்டர் பாஹிமா தான் சேவை­யாற்றும் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வந்த 2 மாத குழந்­தைக்கு அவ­சர சிகிச்­சைக்­காக சென்று கட­மை­யாற்­றிய நிலையில் உயர் இரத்த அழுத்தம் மேலும் அதி­க­ரித்த நிலையில் அவ­ரது தலையில் நரம்­பொன்று வெடித்து இரத்தக் கசி­வு ஏற்­பட்­ட நிலையில் கால­மானார்.

இந்தச் துயரச் சம்­பவம் கண்டி தேசிய வைத்­தி­ய­சா­லையில் இடம் பெற்­றுள்­ளது. இச்­சம்­பவம் பற்றி தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது: “ டாக்டர் பாஹிமா உயர் இரத்த அழுத்தம் கார­ண­மாக தனது வீட்டில் ஓய்வு எடுத்­துக்­கொண்­டி­ருந்­த­போது, கண்டி தேசிய வைத்­தி­ய­சா­லையில் 4 ஆம் இலக்க வார்ட்டில் தங்கி சிகிச்­சை­பெற்று வந்த இரண்­டு­மாத குழந்­தை­யொன்றின் உடல் நீல நிற­மாக மாறி வரு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

டாக்டர் பாஹிமா தனது உயர் இரத்த அழுத்த நிலை­மை­யையும் பொருட்­ப­டுத்­தாது உட­ன­டி­யாக வைத்­தி­ய­சா­லைக்குச் சென்­றுள்ளார். அங்கு அவ­சர சிகிச்­சையை மேற்­கொண்டு குழந்­தையை அபாய நிலை­யி­லி­ருந்தும் காப்­பாற்­றி­யுள்ளார் பாஹிமா சஹப்தீன்.
இந்­நி­லையில் டாக்­டரின் உயர் இரத்த அழுத்தம் மேலும் அதி­க­ரித்­து பாதிக்­கப்­பட்டு அதி தீவிர சிகிச்­சை­ப் பி­ரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். அதி தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் 10 தினங்­களின் பின்பு அவர் கால­மா­கி­யுள்ளார்.

அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனு­ம­திக்­கப்­பட முன்பு அவ­ரது இரத்த அழுத்தம் பரி­சோ­திக்­கப்­பட்­ட­போது அது 200 க்கும் அதி­க­மாக இருந்­த­தாக கண்டி தேசிய வைத்­தி­ய­சாலை டாக்டர் ஜனக ஜய­சூ­ரிய கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்தார்.

கடந்த வார இறு­தியில் இச்­சோக சம்­பவம் இடம் பெற்­றுள்­ளது. டாக்டர் பாஹிமா இறக்­கும்­போது அவ­ரது வயது 52. அதி­க­ரித்த உயர் இரத்த அழுத்தம் கார­ண­மாக தலையில் நரம்­பொன்று வெடித்­த­தனால் இரத்தம் வெளி­யேறி இம்­ம­ரணம் சம்­ப­வித்­துள்­ள­தாக பரி­சோ­த­னை­களில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் டாக்டர் ஜனக ஜய­சூ­ரிய தெரி­வித்தார்.
ஓய்வில் இருக்க வேண்­டிய டொக்டர் ஒரு ­கு­ழந்­தையை காப்­பாற்­று­வ­தற்­காக கடு­மை­யாக பணி­யாற்­றி­யதால் அவ­ரது இரத்த அழுத்தம் அதி­க­ரித்து இந்­நி­லைமை ஏற்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார். இவர் தனது சேவைக்காலத்தில் இரவு பகல் பாராது நோயா­ளர்­க­ளுக்­காக பணி­பு­ரிந்­தவர் என்றும் டாக்டர் ஜனக ஜய­சூ­ரிய தெரி­வித்தார்.

டாக்டர் பாஹி­மாவின் கணவர் சப்­ர­க­முவ பல்­க­லைக்­க­ழ­கத்தின் விரி­வு­ரை­யாளராவார். அத்­தோடு டாக்­ட­ரின் மூத்த சகோ­த­ரியும் ஒரு டாக்­ட­ராவார். இவரின் மூத்த மகள் அண்­மையில் வெளி­வந்த உயர்­தர பரீட்சைப் பெறு­பே­று­க­ளின்­படி வைத்­தி­ய­பீ­டத்­துக்கு தெரி­வா­கி­யுள்ளார். மகன் பாட­சாலைக் கல்­வியைத் தொடர்ந்து வரு­கிறார்.

டாக்டர் பாஹிமா கண்டி அனி­வத்­தையில் வசித்து வந்­த­வ­ராவார்.
நாட்டில் பெரும் எண்ணிக்கையிலான வைத்தியர்கள் நாட்டிலிருந்தும் வெளியேறி வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்துகொண்டிருக்கும் நிலையில் டாக்டர் பாஹிமா ஓர் உதாரண பெண்மணி ஆவார்.

இவரது இழப்பு கண்டி வைத்தியசாலைக்கு மாத்திரமல்ல முழு சமூகத்துக்கும் பேரிழப்பாகும்.

Leave A Reply

Your email address will not be published.