சவூதி அரேபியா, துனிசியாவுக்கு 830 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

0 551

சவூதி அரே­பியா துனி­சி­யா­வுக்கு 830 மில்­லியன் டொலர் நிதி­யு­தவி வழங்­கு­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ள­தாக துனி­சியப் பிர­தமர் யூசெப் சாஹெட் தெரி­வித்­துள்ளார்.

சவூதி அரே­பி­யா­வுக்­கான விஜ­யத்தின் பின்னர் கடந்த சனிக்­கி­ழமை ஊட­க­வி­யா­ல­ளர்கள் மத்­தியில் கருத்துத் தெரி­வித்த சாஹெட் மேற்­படி தக­வலை வெளி­யிட்டார்.

வரவு செலவுத் திட்­டத்­திற்­காக 500 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி­யு­த­வி­யினை எதிர்­பார்ப்­ப­தா­கவும், வெளி­நாட்டு வர்த்­தக நிதி­யு­த­வி­யாக 230 மில்­லியன் அமெ­ரிக்க டொலரும், நிதித் திட்­டங்­க­ளுக்கு 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் நிதி­யு­த­வியும் எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்த பிர­தமர் அதன் விப­ரங்­களை வெளி­யி­ட­வில்லை.

சவூதி அரே­பிய ஊட­க­வி­ய­லாளர் ஜமால் கசோக்ஜி கொல்­லப்­பட்­ட­தை­ய­டுத்து கடந்த மாதம் துனி­சிய மக்கள் சவூதி அரே­பிய பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் துனி­சி­யா­வுக்கு விஜயம் செய்­வ­தற்கு எதிர்ப்புத் தெரி­வித்து ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்­டனர்.

நூற்­றுக்­க­ணக்­கான துனி­சிய மக்கள் வீதி­களில் இறங்கி சவூதி அரே­பிய பட்­டத்­திற்­கு­ரிய இள­வ­ரசர் மொஹமட் பின் சல்மான் துனி­சி­யா­வுக்கு விஜயம் செய்யக் கூடாது எனக் கோரி­ய­தோடு யெமன் யுத்­தத்தில் சவூதி அரே­பி­யாவின் வகி­பா­கத்­தையும் கண்­டித்­தனர்.

எனினும் பொரு­ளா­தாரம் மற்றும் நிதி, முத­லீட்டு ஊக்­கு­விப்பு மற்றும் தீவி­ர­வாதம் மற்றும் பங்­க­ர­வா­தத்தை தோற்­க­டிப்­ப­தற்­கான பாது­காப்பு மற்றும் இரா­ணுவ உத­வி­களை மேம்­ப­டுத்­து­வ­தற்­காக இள­வ­ரசர் துனி­சிய ஜனா­தி­பதி பீஜி கெய்ட் எசெப்­ஸியை சந்­தித்தார் என ஜனா­தி­பதி அலு­வ­ல­கத்­தினால் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

வரவு செல­வுத்­திட்ட துண்டு விழும் தொகை­யினை சமா­ளிப்­ப­தற்கும், தளர்­வ­டைந்­து­வரும் வெளி­நாட்டு நாணயக் கையி­ருப்­பினை உறு­திப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும் சர்­வ­தேசத் தலை­வர்­களின் எதிர்­பார்ப்­புகளைப் பூர்த்தி செய்­வ­தற்கும், பொதுச் செலவு மசோ­தாவில் திருத்­தங்கள் மேற்­கொள்­வது போன்ற மறு­சீ­ர­மைப்பு கோரிக்­கைகளை எதிர்­கொள்­வது போன்ற விட­யங்­களில் துனி­சியா திண­றி­வ­ரு­கின்­றது.

வேலை­யில்லா திண்­டாட்டம், வறுமை மற்றும் வரலாறு காணாத பணவீக்கம் என்பவற்றினால் ஏற்பட்ட ஆத்திரம் காரணமாக உருவான எழுச்சியினால் 2011 ஆம் ஆண்டு சர்வாதிகாரி ஸைனுல் ஆப்தீன் பென் அலி பென் அலி பதவி கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்தது.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.