கட்சியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடினார் முஷாரப்

0 279

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எஸ்.எஸ்.எம்.முஷாரப் தான் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வி­யி­லி­ருந்து கட்­சி­யினால் நீக்­கப்­பட்­ட­மைக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் கடந்த திங்­கட்­கி­ழமை வழக்கு தாக்கல் செய்­துள்ளார். தான் கட்­சி­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டமை இயற்கை நீதிக்கு முர­ணா­னது என தனது மனுவில் குறிப்­பிட்­டுள்ளார்.

கட்­சியின் யாப்­புக்கு எதி­ரா­கவும் அதன் தீர்­மா­னங்­க­ளுக்கு எதி­ரா­கவும் செயற்­பட்டார் என்ற குற்­றச்­சாட்டு கட்­சி­யினால் அவர் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. கட்சி மேற்­கொண்ட ஒழுக்­காற்று விசா­ர­ணையின் பின்பே அவர் நீக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­பட்­டமை தொடர்பில் அது பற்றி பாரா­ளு­மன்ற செய­லாளர் நாய­கத்­திற்கும் தேர்­தல்கள் ஆணை­யா­ள­ருக்கும் அறி­விக்­கப்­பட்­டது.

குறித்த பதவி நீக்கம் பாரா­ளு­மன்ற செய­லாளர் நாய­கத்­துக்கு கட்­சி­யினால் அறி­விக்­கப்­பட்டு அத்­தி­க­தி­யி­லி­ருந்து ஒரு மாத­கா­லத்­துக்குள் அந்த நீக்­கத்­திற்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்யும் உரிமை அவ­ருக்கு அர­சி­ய­ல­மைப்பின் பிர­காரம் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஷாரப் சார்­பாக சிரேஷ்ட ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ரொமேஷ் டிசில்வா ஆஜ­ரா­கி­யுள்ளார்.

முஷாரப் எம்.பி.கட்­சி­யி­லி­ருந்தும் நீக்­கப்­பட்­டமை தொடர்பில் அவ­ரிடம் விடி­வெள்ளி கருத்து வின­வி­ய­போது அவர் பின்­வ­ரு­மாறு தெரி­வித்தார்.

“இது ஒரு தனிப்­பட்ட பழி­வாங்­க­லாகும். நான் கட்­சியில் இணைந்த காலத்­தி­லி­ருந்து கட்­சியில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிலே இருந்தேன். விசு­வா­ச­மா­கவே இருந்தேன். ஆனால் ஆரம்ப காலத்­தி­லி­ருந்தே என்னை கட்­சி­யி­லி­ருந்தும் நீக்க வேண்டும் என்ற நிலைப்­பாடே இருந்­தது.

ஒழுக்­காற்று விசா­ரணை ஒரு கண் ­துடைப்­பாகும். எமது கருத்தை சொல்­வ­தற்கு எனக்கு சந்­தர்ப்பம் வழங்­கப்­ப­ட­வில்லை.எப்­ப­டியும் என்னை நீக்­க­வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரலே இருந்­தது. கட்­சியின் உயர் பீடமே விசா­ர­ணைக்­கு­ழு­வாக மாறி தீர்­மானம் மேற்­கொண்டு நான் நீக்­கப்­பட்­டி­ருக்­கிறேன்.நான் நீதிக்­காக இறுதி வரை போரா­டுவேன் என்றார்.

இதே வேளை முஷாரப் எம்.பி தனது பத­வி­நீக்­கத்­துக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் மனு தாக்கல் செய்திருப்பது தொடர்பில் அகில இலங்கை காங்கிரஸின் பொதுச் செயலாளர் எஸ்.சுபைர்தீனிடம் விடிவெள்ளி கருத்து வினவிய போது குறிப்பிட்ட மனுவுக்கு எதிராக கட்சி உயர் நீதிமன்றில் விரைவில் மனுதாக்கல் செய்யவுள்ளது என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.