அல்லாஹ், இஸ்லாத்தை அவமதித்த இரு வழக்குகளில் மன்னிப்பு கேட்பார் ஞானசார தேரர்

0 282

(எம்.எப்.எம்.பஸீர்)
அல்லாஹ்வையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்து வெளியிட்டதன் ஊடாக இனங்களுக்கு இடையே, நல்லிணக்கத்தை பாதிக்கும் விதமாக நடந்துகொண்டமை தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி தலைவரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலருமான கலகொட அத்தே ஞானசார தேரர், அவை குறித்து தொடரப்பட்டுள்ள இரு வழக்குகளில் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராகி வருவதாக அறிய முடிகிறது.

இஸ்லாமியர்கள் ஏக இறைவனாக வழிபடும் அல்லாஹ்வை தூற்றும் விதமாக கருத்து வெளியிட்டு, மத உணர்வுகளை தூண்டியதாக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபர் தொடர்ந்துள்ள  எச்.சி.1948/20 எனும்  வழக்கிலும்,  கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள பீ.58559/3/22 எனும் வழக்கிலும்  இவ்வாறு பகிரங்க மன்னிப்பு கேட்க அவர் தயாராகி வருவதாக அறிய முடிகின்றது.

மேல் நீதி­மன்ற வழக்கு :
இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக கருத்து வெளி­யிட்­டமை தொடர்பில் குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனா­தி­பதி செய­லணி தலை­வரும், பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­ல­ரு­மான கல­கொட அத்தே ஞான­சார தேர­ருக்கு எதி­ரான சாட்சி விசா­ர­ணை­களை எதிர்­வரும் 2022 செப்­டம்பர் 20 ஆம் திகதி ஆரம்­பிக்க கொழும்பு மேல் நீதி­மன்றம் தீர்­மா­னித்­தது. இது குறித்த எச்.சி.1948/20 எனும் வழக்கு நேற்று முன் தினம் (28)கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி ஆதித்ய பட்­ட­பெந்­திகே முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

குற்றம் சாட்­டப்­பட்­டுள்ள, கல­கொட அத்தே ஞான­சார தேரர் இதன்­போது மன்றில் ஆஜ­ரா­க­வில்லை. நாட்டில் நிலவும் எரி­பொருள் தட்­டுப்­பாட்­டுடன் கூடிய போக்­கு­வ­ரத்து சிக்கல் கார­ண­மாக, அவர் மன்றில் ஆஜ­ரா­கா­த­போதும் பிடி­யாணை எதுவும் பிறப்­பிக்­கப்­ப­டாமல் வழக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டது.

நேற்று முன் தினம் குறித்த வழக்கில் சாட்­சியம் அளிக்க பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகி­யோ­ருக்கு அறி­வித்தல் அனுப்­பப்­பட்ட நிலையில், அவர்கள் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் தலை­மை­யி­லான சட்­டத்­த­ரணி வசீமுல் அக்ரம் உள்­ளிட்ட குழு­வி­ன­ருடன் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். இந் நிலையில் அவர்­க­ளுக்கு மீள சாட்­சி­ய­ளிக்க செப்­டம்பர் மாதம் 20 ஆம் திகதி மன்றில் ஆஜ­ரா­கு­மாறு அறி­விக்­கப்­பட்­டது.

2016 ஆம் நவம்பர் மாதம் முதலாம் திக­திக்கும் 16 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலத்தில், கொழும்பு – கிரு­லப்­ப­னையில் ஊடக சந்­திப்­பொன்­றினை நடாத்தி, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மான வெறுப்­பூட்டும் கருத்­துக்­களை வெளி­யிட்­ட­தாக ஞான­சார தேரர் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. தண்­டனை சட்டக் கோவையின் 291( அ) பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை அவர் புரிந்­த­தாக சட்ட மா அதி­பரால் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. வர­லாற்று சிறப்பு மிக்க பலாங்­கொடை ஜெய்­லானி பள்­ளி­வாசல் விவ­காரம் குறித்து ஊடக சந்­திப்பில் கருத்து வெளி­யிடும் போது, கூர­கல பெளத்த புரா­தன சின்­னங்­களை முஸ்­லிம்கள் ஆக்­கி­ர­மிப்­ப­தா­கவும், இஸ்­லா­மி­யர்கள் ஏக இறை­வ­னாக வழி­படும் அல்­லாஹ்வை கேவ­ல­மான வச­னங்­களைக் கொண்டு தூற்றும் வித­மாக கருத்து வெளி­யிட்டு, மத உணர்­வு­களை தூண்­டி­ய­தா­கவும் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் பொலிஸில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமைய இடம்­பெற்ற விசா­ர­ணை­களை மையப்­ப­டுத்தி, மேல் நீதி­மன்றில் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக சட்ட மா அதி­பரால் இந்த குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்டு அது கைய­ளிக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே அவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு வந்­தி­ருந்­தது.

இதன்­போது கல­கொட அத்தே ஞான­சார தேரர் சார்பில் சட்­டத்­த­ரணி சஞ்­சய ஆரி­ய­தாச ஆஜ­ரானார்.

இந்த வழக்கை சுமு­க­மாக முடித்­துக்­கொள்ள கல­கொட அத்தே ஞான­சார தேரர் முயற்­சிக்கும் நிலையில், அது குறித்து, குற்றப் பத்­தி­ரிகை கைய­ளிக்­கப்­பட்ட பின்னர் ஆராய முறைப்­பாட்­டா­ளர்கள் தீர்­மா­னித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

நீதிவான் நீதி­மன்ற வழக்கு :
இஸ்லாம் ஒரு புற்று நோய் என ஞான­சார தேரர் வெளி­யிட்ட கருத்­துக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும்ஆ பள்­ளி­வாசல் நிர்­வாக சபை உறுப்­பினர் ரிகாஸ் முன் வைத்த முறைப்­பாட்­டுக்கு அமைய, கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் மேல­திக நீதிவான் ( 3 ஆம் இலக்க அறை) முன்­னி­லையில் வழக்குப் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

இந்த வழக்கில் கடந்த 8 ஆம் திகதி சாட்சி விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. அதன்­படி முறைப்­பாட்­டாளர் தரப்பின் முதல் சாட்­சி­யாளர் நீதி­மன்றில் சாட்­சி­ய­ம­ளித்­துள்ளார்.
இவ்­வா­றான நிலையில், குறித்த வழக்கை சுமுகமாக முடித்துக்கொள்ளும் நோக்கில் தனது சேவை பெறுநர் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்பு கோர தயாராக இருப்பதாக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
இந் நிலையில் இது குறித்த வழக்கு எதிவரும் ஜூலை முதலாம் திகதி மீள விசாரணைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.