“ஒரே நாடு ஒரே சட்­டம்” அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தது செயலணி

0 223

“ஒரே நாடு ஒரே சட்­டம்”­ ஜ­னா­தி­பதி செய­ல­ணியின் தலை­வ­ரான பொது­பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேர­ரினால் செய­ல­ணியின் அறிக்கை நேற்று ஜனா­தி­பதி மாளி­கையில் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­விடம் கைய­ளிக்­கப்­பட்­டது.

அறிக்கை 43 சிபா­ரி­சு­களை உள்­ள­டக்­கி­ய­தா­கவும் 8 அத்­தி­யா­யங்­க­ளையும் இரண்டு பாகங்­க­ளையும் கொண்­ட­தாக அமைந்­தி­ருந்­தது. இவ்­வ­றிக்கை அர­ச­சார்­பற்ற அமைப்­புகள், மத­கு­ழுக்கள், பல்­வேறு இன­ரீ­தி­யான மக்கள் பிரி­வுகள், பல்­க­லைக்­க­ழக சமூகம், சட்­டத்­து­றையின் பிர­ப­லங்கள் ஆகி­யோர்கள் உள்­ள­டங்­க­ளாக நாட்டின் அனைத்துப் பகு­தி­க­ளையும் பிர­தி­நிதித்­து­வப்­ப­டுத்தி 1200 பேருக்கும் மேற்­­பட்­ட­வர்­களின் வாக்கு மூலங்கள், சாட்­சி­யங்கள் பெறப்­பட்டு தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அறிக்­கையைப் பெற்­றுக்­கொண்ட ஜனா­தி­பதி அறிக்­கையை அமைச்­ச­ர­வைக்கும், பாரா­ளு­மன்­றத்­துக்கும் சமர்ப்­பிப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­யும்­படி ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

இலங்­கையில் “ஒரே நாடு ஒரே சட்டம்” எனும் எண்­ணக்­க­ருவை அமுல்­ப­டுத்­து­வ­தற்­காக பல­த­ரப்­பட்­ட­வர்­களின் கருத்­துகள் மற்றும் கருத்து வேறு­பா­டு­களை கவ­னத்தில் கொண்டு அவற்றை ஆராய்ந்து இலங்­கைக்குப் பொருத்­த­மான வரை­பொன்­றினை உரு­வாக்­கு­வ­தற்­கான சிபா­ரி­சு­களை முன்­வைப்­ப­தற்கு இச்­செ­ய­லணி ஜனா­தி­ப­தி­யினால் நிய­மிக்­கப்­பட்­டது.

2021 ஆம் ஆண்டு அக்­டோபர் மாதம் 26 ஆம் திகதி மற்றும் 2021 நவம்பர் மாதம் 6 ஆம் திக­திய விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் இச்­செ­ய­லணி நிய­மிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

பேரா­சி­ரியர் சாந்தி நந்­தன விஜே­ய­சிங்க, சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் வீர­வர்­த­ன­லாகே சுமேத மன்­ஜுலை, டாக்டர் என்.ஜி.சுஜீவ பண்­டி­த­ர­தன, சட்­டத்­த­ரணி இரேஷ் சென­வி­ரத்ன, சட்­டத்­த­ரணி டப்­ளியூ.பி.ஜே.எம்.ஆர்.சஞ்­சய பண்­டா­ர­மா­ரபே, ஆர்.எ.எரன்த குமார நவ­ர­தன,பானி வெவல, மெள­லவி எம்.எ.எஸ். மொஹமட் (பாரி) யோகேஸ்­வரி பத்­கு­ண­ராஜா மற்றும் ஐயம்­பிள்ளை தயா­னந்­த­ராஜா ஆகியோர் இச்­செ­ய­ல­ணியின் உறுப்­பி­னர்­க­ளாக செயற்­பட்­டனர். ஜனா­தி­பதி சிரேஷ்ட உதவி செய­லாளர் ஜீவன்தி சேன­நா­யக்க செய­ல­ணியின் செய­லா­ள­ராக கட­மை­யாற்­றினார்.

அறிக்கை கைய­ளிக்கும் நிகழ்வில் ஜனா­தி­பதி செய­லாளர் காமினி செனரத், ஜனா­தி­ப­தியின் பிர­தம ஆலோ­சகர் லலித் வீர­துங்க, ஜனா­தி­பதி செய­ல­கத்தின் பிர­தானி அநுர திசநாயக்க ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர்.

அறிக்கையை பெற்றுக்கொண்ட ஜனாதிபதி “ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணி சமர்ப்பித்துள்ள அறிக்கையின் சிபாரிசுகள் அமைச்சரவைக்கும், பாராளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றார். -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.