‘ஹஜ்: தீர்மானம் பொருத்தமானதே’

0 235

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாடு எதிர்­நோக்­கி­யுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­யான சூழலில் இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை இடம்­பெ­ற­மாட்­டாது என்ற தீர்­மானம் பொருத்­த­மா­ன­தாகும் என்­றாலும் தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தற்கு முன்பு சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னங்­களும் தரப்­பி­னரும் மார்க்க அறி­ஞர்­களைக் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இது தொடர்­பான உத்­தி­யோ­க­பூர்­வ­மான அறி­விப்பை அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் நிறை­வேற்றுக் குழுவும்,பத்வா குழுவும் ஒன்று கூடி ஆராய்ந்­ததன் பின்பு வெளி­யிடும் எனவும் அவர் கூறினார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரி­விக்­கையில் “நாட்டின் பொரு­ளா­தார நெருக்­க­டி­யினைக் கருத்­திற்­கொண்டு இத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அறி­கிறோம். ஆனால் மார்க்கம் தொடர்­பான விட­யங்­களில் உல­மாக்­க­ளுடன் ஆராயாமல் மேற்கொள்ளும் தீர்மானம் அல்லாஹ்வுக்குப் பொருத்தமானதாக அமையாது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.