மூன்றாவது வருடமாகவும் இலங்கையர்களுக்கு ஹஜ் வாய்ப்பில்லை

டொலர் நெருக்கடியால் பயண ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாத நிலையில் முகவர் நிறுவனங்கள் தீர்மானம்; சவூதிக்கும் அறிவிப்பு

0 223

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

நாட்டில் நிலவும் பொரு­ளா­தார நெருக்­கடி மற்றும் டொலர் தட்­டுப்­பாடு கார­ண­மாக இவ்­வ­ருடம் இலங்­கை­யர்கள் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்­வ­தில்லை எனத் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ஹஜ் யாத்­தி­ரையை முன்­னெ­டுப்­ப­தற்கு தேவைப்­படும் பெருந்­தொகை டொலர்­களை வழங்­கு­வ­தற்கு மத்­திய வங்­கி­யினால் முடி­யா­துள்­ளதால், நாடு எதிர்­கொண்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து மீள்­வ­தற்கு ஒத்­து­ழைப்பு வழங்கும் நோக்கில் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­க­ளி­லி­ருந்தும் ஹஜ் முக­வர்கள் தவிர்ந்து கொள்­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. இம்முறை வழங்­கப்­பட்­டுள்ள கோட்­டா­வுக்கு அமைய சுமார் 1600 பேர் இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரையை முன்­னெ­டுப்­ப­தாயின் சுமார் 6 மில்­லியன் முதல் 10 மில்­லியன் வரை­யான அமெ­ரிக்க டொலர்கள் தேவைப்­படும் எனக் கணிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அத்­தி­ய­ாவ­சியப் பொருட்­க­ளான உணவு, எரி­பொருள் இறக்­கு­ம­திக்கே டொலர்­களை ஒதுக்க முடி­யாத நிலையில், ஹஜ் யாத்­தி­ரைக்­கென பெருந்­தொகை டொலர்­களை மத்­திய வங்­கி­யினால் வழங்க முடி­யாது என்­பதன் கார­ண­மா­கவே இத் தீர்­மா­னத்தை முகவர் சங்­கங்கள் எடுத்­துள்­ளன.

ஹஜ் முகவர் சங்­கங்கள் எடுத்­துள்ள இத் தீர்­மானம் குறித்து, முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் புத்­த­சா­சன மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்­சுக்கும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து இத்­தீர்­மானம் இலங்கை வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சின் ஊடாக சவூதி அரே­பி­யாவின் ஹஜ் விவ­கார அமைச்­சுக்கும் உத்­தி­யோ­க­பூர்­­வ­மாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்­கென சவூதி அரே­பிய ஹஜ் அமைச்சு இலங்­கைக்கு 1585 கோட்டா வழங்­கி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நி­லையில் ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் ஆராய்­வ­தற்­கென முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் ஹஜ் முகவர் சங்­கங்­களின் உறுப்­பி­னர்கள் ஒன்று கூடி­னார்கள்.

இக்­கூட்­டத்­திலே இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்­கான முன்­னெ­டுப்­பு­களை மேற்­கொள்­வ­தில்லை என ஏக­ம­ன­தாகத் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இத்­தீர்­மானம் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்­ஸா­ருக்கு எழுத்து மூலம் அறி­விக்­கப்­பட்­டது.

முஸ்­லிம்கள் தங்­க­ளது புனி­த­மான கட­மையை நாட்­டி­னதும் நாட்டு மக்­க­ளி­னதும் நலன் கருதி தியாகம் செய்­துள்­ளமை முன்­மா­தி­ரி­மிக்க செயல் என இதன்­போது முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களப் பணிப்பாளர் இப்றாஹிம் அன்சார் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஹஜ் யாத்திரைக்கான முன்னெடுப்புக்கள் முன்னெடுக்கப்பட்டால் இது இனவாதத்தைத் தூண்டும் விஷமிகளுக்கு சாதகமாக அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.