தளர்த்தப்பட்டது ரிஷாத்தின் வெளிநாட்டு பயணத் தடை

0 290

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் மற்றும், வேலைக்கு அமர்த்­தப்­பட்ட ஹிஷா­லினி உடலில் தீ பரவி உயி­ரி­ழந்த சம்­ப­வங்கள் குறித்த விசா­ர­ணை­களில், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு விதிக்­கப்­பட்­டி­ருந்த வெளி­நாட்டு பயணத் தடைகள் தளர்த்­தப்­பட்­டுள்­ளன.

கொழும்பு மற்றும் கோட்டை நீதி­மன்­றங்­களால், நேற்றும் நேற்று முன் தினமும் இதற்­கான உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்­டன.

ஹிஷா­லினி விவ­காரம்
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன் வீட்டில், வீட்டு வேலைக்கு அமர்த்­தப்­பட்ட ஹிஷா­லினி உடலில் தீ பரவி உயி­ரி­ழந்த சம்­பவம் குறித்த வழக்கு விசா­ர­ணைகள் நேற்று முன் தினம் கொழும்பு மேல­திக நீதிவான் ரஜீந்ரா ஜய­சூ­ரிய முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது அவ்­வி­வ­கா­ரத்தில் சந்­தேக நப­ர்களாக பெயர்­க­ள் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்டு பிணையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், அவ­ரது மனைவி உள்­லிட்ட அனை­வரும் மன்றில் ஆஜ­ரா­கினர்.

இதன்­போது முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீ­னுக்­காக ஆஜ­ரா­கிய சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட், ரிஷாத் பதி­யு­தீ­னுக்கு விதிக்­கப்பட்­டுள்ள வெளி­நாட்டு பயணத் தடையை தளர்த்த கோரினார்.

தனது சேவை பெறுநர் சம்பவம் இடம்­பெறும் போது, விளக்­க­ம­றி­யலில் இருந்­த­தா­கவும், அவ­ருக்கு எதி­ராக குற்றம் சுமத்த சாட்­சி­யங்கள் இல்­லாத நிலையில், தொடர்ச்­சி­யாக குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யாது விசா­ர­ணை­களை இழுத்துச் செல்­வது நியா­ய­மற்­றது எனவும் சாட்சி இன்றேல் சந்­தேக நபர்­களை விடு­விக்க வேண்டும் எனவும் அவர் வாதங்­களை முன் வைத்தார்.

இந் நிலையில், சந்­தேக நபர்­க­லுக்கு எதி­ராக குற்றச்­சாட்­டுக்­களை முன் வைப்­பதா என்­பது தொடர்பில் சட்ட மா அதி­ப­ருடன் கலந்­து­ரை­யாடி, அனைத்து விட­யங்­க­ளையும் மன்­றுக்கு அறி­விக்­கு­மாறு பொலி­சா­ருக்கு உத்­தர­விட்ட நீதிவான், ரிஷாத் பதி­யு­தீனின் வெளி­நாட்டு பயணத் தடை­யையும் நீக்கி உத்­த­ர­விட்டார்.

இவ்­வ­ழக்கு எதிர்­வரும் செப்­டம்பர் 20 ஆம் திகதி மீண்டும் விசா­ர­ணைக்கு வர­வுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­குதல் சம்­பவம்
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்பில் விசா­ர­ணை­க­ளுக்கு என, கடந்த 2021 ஏப்ரல் 24 ஆம் திகதி கைது செய்­யப்­பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், 2021 ஒக்­டோபர் 14 ஆம் திகதி பிணையில் விடு­விக்­கப்பட்­டி­ருந்தார். 50 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான இரு சரீரப் பிணை­களில் விடு­விக்­கப்­பட்ட ரிஷாத் பதி­யுதீன் வெளி­நாடு செல்ல தடை விதிக்­கப்­பட்­டது. இந் நிலையில் நேற்று (25) அவ்­வ­ழக்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போது ரிஷாத்தின் சட்டத்தரணிகள் முன் வைத்த கோரிக்கைக்கு அமைய அவரது வெளிநாட்டு பயணத் தடை அடுத்த தவணை வரை தளர்த்தப்பட்டு உத்தரவிடப்பட்டது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.