முஸ்லிம் தனியார் சட்ட திருத்த முன்மொழிவுகள்: நல்ல விடயங்கள் அமுல்படுத்தப்படும்

புதிய நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச கூறுகிறார்

0 210

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள நல்ல விட­யங்கள் அமுல் நடத்­தப்­படும். நான் அமைச்­சுப்­பொ­றுப்­பினை ஏற்று சில தினங்­களே கடந்­துள்­ளன. இச்­சட்­டத்தில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்ள திருத்­தங்­களை நான் முதலில் படித்­துப்­பார்க்க வேண்டும்.

அதன்­பின்பே தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ள­வேண்டும் என நீதித்­துறை, சிறைச்­சா­லைகள் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம் அமைச்சர் விஜே­தாஸ ராஜ­பக்ஷ விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்; ‘முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக ஏற்­க­னவே அமைச்­ச­ர­வைப்­பத்­திரம் சமர்ப்­பிக்­கப்­பட்டு கடந்த காலங்­களில் விவா­திக்­கப்­பட்­டுள்­ளன.இவற்­றினை நான் படித்துப் பார்க்க வேண்டும் என்றார்.

இதே வேளை கடந்த 21.02.2022 ஆம் திகதி நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அப்­போ­தைய நீதி­ய­மைச்சர் அலி­சப்­ரி­யினால் முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் சில திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக சமர்ப்­பிக்­கப்­பட்ட அமைச்­ச­ர­வைப்­பத்­திரம் அமைச்­சர்கள் சிலரின் பலத்த எதிர்­பார்ப்­பி­னை­ய­டுத்து நிரா­க­ரிக்­கப்­பட்­டது.
இத­னை­ய­டுத்து அமைச்­ச­ரவைக் கூட்­டத்­துக்கு தலைமை வகித்த ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ “ஒரே நாடு ஒரே சட்டம்” செய­ல­ணியின் சிபா­ரி­சுகள் கிடைக்கும் வரை முஸ்லிம் விவாக விவா­க­ரத்து சட்­டத்தில் எவ்­வித திருத்­தங்­க­ளையும் செய்­வ­தில்லை எனத் தெரி­வித்தார்.

காதி­நீ­தி­மன்ற முறையை இல்­லா­தொ­ழிக்­காது குடும்ப சம­ரசம் (Family Conciliate) என்ற பெயரில் அதனை இயங்கச் செய்­ய­வேண்டும். முஸ்லிம் ஆண்­க­ளுக்கு பல­தார மணம் கடு­மை­யான நிபந்­த­னை­க­ளுடன் அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்டும். குடும்ப சம­ர­சத்­துக்­கென ஆலோ­சனைச் சபை­யொன்று நிய­மிக்­கப்­பட வேண்டும். அங்கு தீர்க்க முடி­யாத பிரச்­சி­னைகள் மாவட்ட நீதி­மன்­றுக்கு அனுப்பி வைக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதே குறிப்­பிட்ட அமைச்­ச­ர­வைப்­பத்­தி­ரத்தில் உள்­ள­டங்­கி­யி­ருந்­தன.

அப்­போ­தைய அமைச்­சர்கள் சரத் விர­சே­கர, விமல் வீர­சங்க, உதய கம்­மன்­பில ஆகியோர் அமைச்­ச­ர­வைப்­பத்­தி­ரத்தை கடு­மை­யாக எதிர்த்­த­னாலே முன்னாள் நீதி­ய­மைச்சர் அலி சப்­ரியின் அப்­பத்­திரம் நிரா­க­ரிக்­கப்­பட்­டது என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.
ஆனால் 2021 மார்ச் மாதம் 8 ஆம் திகதி நடை­பெற்ற அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் அமைச்­ச­ரவை உப­குழு முன் வைத்த பிரே­ர­ணைக்கு அமை­வாக முஸ்லிம் ஆண்­களின் பல­தார மணத்தை தடை செய்­வ­தற்கும், காதி நீதி­மன்ற முறை­மையை இல்­லாமற் செய்­வ­தற்கும் முஸ்லிம் பெண்­களின் திரு­மண வய­தெல்­லையை 18 ஆக அதி­க­ரிப்­ப­தற்கும் அமைச்­ச­ரவை அங்­கீ­காரம் வழங்கியிருந்தது.

இத்திருத்தங்களுக்கு முஸ்லிம் சமூகத்தில் பலத்த எதிர்ப்பு நிலவியதால் முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரி சில திருத்தங்களுக்கான அமைச்சரவைப்பத்திரத்தை கடந்த பெப்ரவரி மாதம் சமர்ப்பித்தார். இவ்வமைச்சரவைப்பத்திரமே எதிர்ப்புக்குள்ளாகி நிராகரிக்கப்பட்டது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.