மனி­த­வள, தொழில் திணைக்­க­ளத்தின் மேல­திக பணிப்­பாளர் நாய­க­மாக அஷ்ரப் நியமனம்

0 246

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் இலங்கை நிர்வாக சேவையின் விஷேட தரத்­துக்கு தர­மு­யர்த்தப்பட்­டுள்ளார்.அவர் இளைஞர் விவ­காரம் விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் கீழுள்ள மனி­த­வள மற்றும் தொழில் திணைக்­க­ளத்தின் மேல­திக பணிப்­பாளர் நாய­க­மாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

ஏ.பி.எம்.அஷ்ரப் கடந்த வாரம் தனது பத­வி­யினைப் பொறுப்­பேற்று கட­மையில் ஈடு­பட்­டார். இந்தப் பதவி உயர்வு 2021.07.01ஆம் திகதி முதல் அமு­லுக்கு வந்­துள்­ளது.கடந்த ஜன­வரி 11ஆம் திகதி இவ­ருக்கு பொரு­ளா­தார கொள்­கைகள் மற்றும் திட்­ட­மிடல் அமைச்சின் கீழுள்ள தேசிய திட்­ட­மிடல் திணைக்­க­ளத்தில் மேல­திகப் பணிப்­பா­ள­ராக நிய­மனம் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில் அந்­நி­ய­மனம் இரத்துச் செய்­யப்­பட்டு புதிய நிய­மனம் வழங்­கப்­பட்­டுள்­ளது. முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் கட­மை­யாற்­றிய அஷ்ரப் கடந்த 7 மாதங்­க­ளுக்கு முன்பு தலை­மைத்­துவ மேம்­பாட்­டுக்­கான மையத்தின் பணிப்­பா­ள­ராக பதவி வகித்த காலத்தில் அவ­ரது முயற்­சியால் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு தலை­மைத்­துவ பயிற்­சிகள் வழங்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.வவு­னி­யா பல்­க­லைக்­க­ழக மாண­வர்கள் 153 பேர் இப்­ப­யிற்­சியைப் பூர்த்தி செய்தனர்.

அத்தோடு தற்போது ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் 225 பேருக்கு தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.