கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகள் இடை நிறுத்தம்!

0 360

கிண்­ணி­யா­வி­லி­ருந்து றிப்தி அலி

2021 நவம்­பரில் எட்டு உயிர்­களை பலி எடுத்த கிண்­ணியா, குறிஞ்­சாக்­கேணி ஆற்றில் நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்ற பாலத்தின் கட்­டு­மானப் பணிகள் உட­ன­டி­யாக பூர்த்தி செய்­யப்­ப­டா­விட்டால் இன்னும் பல உயிர்­களை எதிர்­கா­லத்தில் இழக்க நேரிடும் என 32 வய­தான நிலாம் சுசானா தெரி­வித்தார்.

“நான் பிறந்­தது முதல் இன்று வரை எந்­த­வித மாற்­ற­மு­மின்றி இவ்­வாறு மோச­மா­கவே இப்­பாலம் காணப்­ப­டு­கின்­றது. இதனால் எனது இரண்டு பெண் பிள்­ளை­களை இன்று நான் இழந்து தவிக்­கின்றேன்” என அழு­த­வாறு அவர் கூறினார்.

பல கன­வு­க­ளுடன் வாழ்ந்த எனது பிள்­ளைகள் இன்று உயி­ரு­ட­னில்லை. இதற்­கான முழுப் பொறுப்­பி­னையும் அர­சி­யல்­வா­திகளே ஏற்க வேண்டும் எனவும் சுசானா குற்­றஞ்­சாட்­டினார்.

சுசா­னாவின் இரண்டு பிள்­ளைகள் உட்­பட எட்டு உயிர்கள் (பார்க்க அட்டவணை) பலியெ­டுக்­கப்­பட்ட அனர்த்தமொன்று கடந்த நவம்பர் 23ஆம் திகதி குறிஞ்­சாக்­கேணி பாலத்­திற்கு அரு­கி­லுள்ள வாவியில் இடம்­பெற்­றது.

கிண்­ணியா நகர சபை­, கிண்­ணியா பிர­தேச சபை­க்கு உட்பட்ட பகுதிகளை இணைக்­கின்ற 100  மீற்றர் நீள­மான பாவ­னைக்கு உத­வாத  இப்­பா­லத்­தினை பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் பல்­வேறு சிர­மங்­க­ளுக்கு மத்­தியில் தின­சரி பயன்­ப­டுத்தி வந்­தனர்.

இதற்கு பதி­லாக புதிய பால­மொன்­றினை மூன்று கட்­டங்­க­ளாக நிர்­மா­ணிக்க நெடுஞ்­சா­லைகள் அமைச்சின் ஆலோ­ச­னையின் பிர­காரம் வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை நட­வ­டிக்கை எடுத்­தது.

பால நிர்­மாணம் 

முதற்­கட்­ட­மாக இப்­பா­லத்தின் 26 மீற்றர் நீள­மான பகு­தியின் நிர்­மாணப் பணிக்­கான விலை­மனுக் கோரல் கடந்த 19.02.2021 ஆம் திகதி கோரப்­பட்டு V.V. Karunaratne & Company யிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.

இப்­பால நிர்­மா­ணத்­திற்­கான அடிக்கல் அப்­போ­தைய கிரா­மிய வீதிகள் மற்றும் ஏனைய உட்­கட்­ட­மைப்பு வச­திகள் இரா­ஜாங்க அமைச்சர் நிமல் லான்­சா­வினால் கடந்த 2021.04.10ஆம் திகதி நடப்­பட்­டது.

சுமார் 226 மில்­லியன் ரூபா பெறு­ம­தி­யான முதற்­கட்ட நிர்­மா­ணத்தில் 50.5 மில்­லியன் ரூபா ஒப்­பந்­தக்­கா­ர­ருக்கு ஏற்­க­னவே வழங்­கப்­பட்­டுள்­ள­தாக வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை தெரி­வித்­தது.

எனினும், “நாட்டில் பொருட்­க­ளுக்கு நில­வு­கின்ற தட்­டுப்­பாட்­டி­னாலும், ஒப்­பந்­தக்­கா­ரரின் நிதி நில­மை­யி­னாலும் இதன்  நிர்­மாணப் பணி­களை உரிய காலப் பகு­திக்குள் நிறைவு செய்ய முடி­ய­வில்லை” என வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பைக்கு மேற்­கொள்­ளப்­பட்ட தகவல் அறியும் விண்­ணப்­பத்­திற்­கான பதிலில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான நிலையில், பழைய பாலம் சிறந்த முறையில் காணப்­ப­டா­மை­யி­னாலும்,  புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கின்ற பாலத்­தினை வீதி­யுடன் இணைக்கும் நோக்­கிலும், இப்­பால நிர்­மாணப் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்ட பின்னர் அதன் ஒரு பகுதி உடைக்­கப்­பட்­ட­தா­கவும் வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை கூறு­கின்­றது.

இதனால், அப்­பி­ர­தேச மக்கள் பல கிலோ மீற்றர் தூரம் பய­ணித்தே கிண்­ணியா நகரை அடைய வேண்­டி­யி­ருந்­தது. இதனால், 2021.03.09ஆம் திகதி கிண்­ணியா பிர­தேச செய­ல­கத்தில் நடை­பெற்ற கூட்­ட­மொன்­றின்­போது படகுப் பாதை சேவை­யினை முன்­னெ­டுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­ட­துடன் கிண்­ணியா நகர சபை மற்றும் பிர­தேச சபை ஆகி­ய­வற்றின் அப்­போ­தைய தவி­சா­ளர்­களே இதற்­கான பொறுப்­பினை ஏற்றுக்கொண்டார்கள் எனவும் வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை தெரி­வித்­தது.

இதனைத் தொடர்ந்து கட்­டணம் செலுத்தி பாது­காப்­பற்ற படகுப் பாதை சேவை­யொன்று ஆரம்­பிக்­கப்­பட்­டது. இந்த படகுப் பாதை சேவைக்­காக எந்­த­வொரு நிதியும் வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினால் ஒதுக்­கப்­ப­ட­வில்லை. இதில் பய­ணித்த பாட­சாலை மாணவர்கள் உட்­பட எட்டுப் பேரே குறித்த அனர்த்தத்தில் உயி­ரி­ழந்­தனர்.

“இந்த அனர்த்தத்­தினால் இன்று நான் மனை­வி­யையும் நான்கு வயது குழந்­தை­யி­னையும் இழந்து தவிக்­கின்றேன்” என  36 வய­தான உது­மா­லெப்பை சலீம் தனது வருத்­தத்தை பகிர்ந்­து­கொண்டார்.

“பாலர் பாட­சா­லையில் கல்வி கற்­பித்துக் கொடுப்­ப­தற்­காக குழந்­தை­யுடன் சென்ற போதே எனது மனைவி இந்த விபத்தில் சிக்­கினார். இந்த பாலத்­தினை நிர்­மா­ணித்து முடிப்­பார்கள் என்­பதில் எனக்கு ஒரு சொட்டு நம்­பிக்­கை­யு­மில்லை” என அவர் கூறினார்.

இத­னை­ய­டுத்து, குறித்த தினத்­தன்று கிண்­ணி­யாவில் அசா­தா­ரண சூழ்­நிலை ஏற்­பட்­டது. இதன்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ். தௌபீக்கின் இல்லம் உட்­பட பல இடங்­களில் தாக்­கு­தல்கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.

இந்த தாக்­கு­த­லுடன் சம்­பந்­தப்­பட்ட 15 பேர் கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். அதே­வேளை, பாது­காப்­பற்ற படகுப் பாதை சேவையில் ஈடு­ப­டு­வ­தற்கு அனு­மதி வழங்­கிய அப்­போ­தைய கிண்­ணியா நகர சபை தவி­சாளர் எஸ்.எச்.எம். நளீம் மற்றும் பாதையின் உரி­மை­யாளர், செலுத்­துநர் மற்றும் கட்­டணம் வசூ­லிப்­பவர் ஆகி­யோரும் கைது செய்­யப்­பட்டு பிணையில் விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

நஷ்­ட­ஈடு

இந்த சம்­ப­வத்­தினால் மர­ண­மா­னவர்களின் மரணச் சடங்­கிற்­காக அர­சாங்­கத்­தினால் தலா 25,000 ரூபா வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்கு மேல­தி­க­மாக எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தாச, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான ரவூப் ஹக்கீம், றிசாத் பதி­யுதீன் மற்றும் எம்.எஸ். தௌபீக் ஆகி­யோ­ரி­னாலும், சமூக அமைப்­புக்­க­ளி­னாலும் பாதிக்­கப்­பட்­டவர்களுக்கு நிதி­யு­தவி வழங்­கப்­பட்­டுள்­ளது.

எனினும், அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட வேண்­டிய 200,000 ரூபா நஷ்­ட­ஈடு இன்னும் வழங்­கப்­ப­ட­வில்லை என பாதிக்­கப்­பட்­டவர்கள் குற்­றஞ்­சாட்­டு­கின்­றனர்.

உள­வியல் நெருக்கடிகள்:

இந்த அனர்த்தத்­தினால் பாதிக்­கப்­பட்­டவர்கள் இன்று வரை குறித்த சம்­ப­வத்­தினை மறக்க முடி­யாமல் சிர­மப்­ப­டு­வதை நேர­டி­யாக அவ­தா­னிக்க முடிந்­தது.

இவர்களுக்கு தேவையான எந்த­வொரு உள­வியல் ஆலோ­ச­னை­களும் அர­சாங்­கத்­தி­னாலோ அல்­லது தொண்டர் நிறு­வ­னங்­க­ளி­னாலே இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை என்­பது சுட்­டிக்­காட்­டத்­தக்­க­தாகும்.

கடற்­ப­டையின் படகுச் சேவை

இந்த சம்­ப­வத்­தினை அடுத்து கடற்­ப­டை­யி­னரால் படகுச் சேவை­யொன்று உட­ன­டி­யாக ஆரம்­பிக்­கப்­பட்­டது. ஒரு தட­வையில் 25 பேர் பய­ணிக்கக் கூடிய இந்த படகுச் சேவை கடந்த பெப்­ர­வரி 19ஆம் திக­தி­யுடன் இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளது.

“படகுச் சேவை­யினை பொது­மக்கள் பயன்­ப­டுத்­து­வது மிகக் குறை­வாக காணப்­பட்­ட­மை­யி­னா­லேயே நிறுத்­தப்­பட்­டது” என கடற்­படை பேச்­சாளர் கேப்டன் இந்­திக டி சில்வா தெரி­வித்தார்.

ஆளு­நரின் அச­மந்த போக்கு

இதே­வேளை, கடந்த 11ஆம் திகதி குறிஞ்­சாக்­கேணி பிர­தே­சத்­திற்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் அனு­ராதா யகம்பத், படகுச் சேவையைப் பயன்­ப­டுத்­து­கின்­றவர்களுக்­கான பாது­காப்பு அங்­கி­களை அன்­ப­ளிப்பு செய்­துள்ளார். படகுச் சேவை நிறுத்­தப்­பட்ட பின்­னரே இந்த அங்­கிகள் வழங்­கப்­பட்­டுள்­ளதாக தெரி­ய­வ­ரு­கி­றது.

இல­வச பஸ் சேவை 

வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யினால் இல­வச பஸ் சேவை­யொன்று தற்­போது ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. சுமார் 35 பேர் பய­ணிக்கக் கூடிய இந்த பஸ் காலை 6.30 மணி முதல் இரவு 7.00 மணி வரை 12 இரு வழிப் பய­ணங்­களை கிண்­ணியா தொடக்கம் குறிஞ்­சாக்­கேணி வரை மேற்­கொள்­கின்­றது.

12 கிலோ மீற்றர் நீள­மான இந்த சேவைக்­காக தின­சரி 12,000 ரூபா வீதம் வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பை­யினால் பஸ் உரி­மை­யா­ள­ருக்கு வழங்­கப்­ப­டு­கின்­றது. எனினும் எரி­பொருள் விலை அதி­க­ரிப்­பினை அடுத்து 10 இரு வழிப் பய­ணங்­க­ளாக இச்­சேவை குறைக்­கப்­ப­டுள்­ளது.

டிசம்பர் 20ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்ட இந்த பஸ் சேவைக்கு ஒரு மாதத்­திற்­கான பணம் மாத்­தி­ரமே அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பூச்­சாண்டி காட்டல்

நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் 750 மில்­லியன் ரூபா செலவில் நிர்­மா­ணிக்­கப்­ப­ட­வி­ருந்த இப்­பா­லத்­திற்­கான அடிக்கல் அப்­போ­தைய பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அப்­துல்லா மஹ்­றூபின் அழைப்பில் அப்­போ­தைய பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் 2019.07.14ஆம் திகதி நடப்­பட்­டது.

எனினும், அடிக்­கலை தவிர வேறு எந்த நிர்­மா­ணமும் இடம்­பெ­ற­வில்லை. இதே­வேளை, கடந்த ஆட்­சியில் இப்­பா­லத்­திற்­காக நடப்­பட்ட அடிக்கல்   தொடர்பில் தமக்கு எதுவும் தெரி­யாது என வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை தெரி­வித்­தது. எவ்­வா­றா­யினும், இந்­நி­கழ்வில் வீதி அபி­வி­ருத்தி அதி­கா­ர­ச­பையின் உயர் அதி­க­ரிகள் பலரும் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

இந்த பாலத்­தினை நிர்­மா­ணிப்­ப­தற்­கா­கவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தீர்­மா­னத்­தி­னையும் மீறி 20ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்­த­தாக இப்­பி­ர­தேச பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ். தௌபீக் கூறி வரு­கின்றார்.

இதே­வேளை, “கைவி­டப்­பட்ட குறிஞ்­சாக்­கேணி பால வேலைகள் புதிய கம்­பெ­னி­யூ­டாக இம்­மாத இறு­தியில் மீண்டும் ஆரம்­பிக்­கப்­படும்” என கடந்த 12ஆம் திகதி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ் தௌபீக் முகநூலில் பதி­வொன்­றினை மேற்­கொண்­டி­ருந்தார். எனினும், இன்று (31) வரை குறித்த பாலத்தின் நிர்­மாண வேலைகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வில்லை.

புறாத் தீவு பாலம்

நாட்டின் புகழ்­பெற்ற பாலங்­களில் ஒன்­றான மாத்­தறை கடற்­கரைப் பூங்­காவை ஒட்­டி­யுள்ள தங்கத் தீவுக்குச் செல்­வ­தற்­கான புறாத் தீவு பாலம் கடந்த மார்ச் 4ஆம் திகதி சரிந்து வீழ்ந்­தது.

ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவின் பணிப்­பு­ரைக்­க­மைய குறித்த தீவுக்கு செல்­வ­தற்­கான புதிய பாலத்தின் நிர்­மாணப் பணி­களை 06 மாதங்­க­ளுக்குள் நிறைவு செய்ய எதிர்­பார்ப்­ப­தாக நெடுஞ்­சா­லைகள் அமைச்சின் செய­லாளர் ஆர்.டபிள்யு.ஆர். பேம­சிறி தெரி­வித்தார்.

இவ்­வா­றான நிலையில், புறாத் தீவில் இரா­ணு­வத்­தி­னரால் தற்­கா­லி­க­மாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட பாலம் கடந்த மார்ச் 12ஆம் திகதி திறக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

பாலத்தின் எதிர்­காலம் 

இதே­வேளை, ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­ப­க்ஷவின் ஆலோ­ச­னையின் பிர­காரம் அடுத்த ஒன்­பது மாதத்­திற்குள் குறிஞ்­சாக்­கேணி பாலத்தின் நிர்­மாணப் பணிகள் நிறை­வு­செய்­யப்­படும் என ஜனா­தி­பதி ஊடக மையத்தில் கடந்த நவம்பர் 25ஆம் திகதி நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் நெடுஞ்­சா­லைகள் அமைச்­சினால் அறி­விக்­கப்­பட்­டது.

இந்த அறி­விப்பு மேற்­கொள்­ளப்­பட்டு நான்கு மாதங்கள் கழிந்­துள்ள நிலை­யிலும், இப்­பா­லத்தின் நிர்­மாணப் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.  இதனால் பாதுகாப்பற்ற குறித்த பாலத்தினை பொதுமக்கள் பயன்படுத்துவதனையும், இதனால் சிலர் மோட்டார் சைக்கிளுடன் இந்த ஆற்றினுள் வீழ்ந்ததையும் எமது நேரடி விஜயத்தின் போது அவதானிக்க முடிந்தது.

எவ்வாறாயினும், இப்பாலத்தின் முதற் கட்ட நிர்மாணம் அடுத்த ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்கப்படுவதுடன், 2ஆம் மற்றும் 3ஆம் கட்டத்திற்கான விலைமனு கோரலும் கோரப்படவுள்ளது என நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் பேமசிறி தெரிவித்தார்.

இப்பால நிர்மாணத்தில் காணப்பட்ட சில பிரச்சினைகளினால் ஏற்பட்ட கால தாமதம் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டு விட்டது எனவும் அவர் கூறினார்.

நாட்டில் தற்­போது நில­வு­கின்ற பொரு­ளா­தார பிரச்­சி­னைக்கு மத்­தியில் இப்­பால நிர்­மாணம் மேற்­கொள்­ளப்­ப­டுமா? என நெடுஞ்­சா­லைகள் அமைச்சின் செய­லா­ள­ரிடம் வின­வி­ய­தற்கு, “மிகவும் அத்­தி­ய­வ­சி­ய­மான குறிஞ்­சாக்­கேணி பாலத்­தினை அவ­ச­ர­மாக நிர்­மா­ணிக்­கு­மாறு ஜனா­தி­பதி உத்­த­ர­விட்­டுள்ளார். இதனால் அமைச்­சி­ட­முள்ள நிதி­யினைக் கொண்­டா­வது இப்­பால நிர்­மா­ணத்­தினை விரைவில் நிறை­வு­செய்வோம். இதில் எந்தப் பிரச்சினையுமில்லை” என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.