மஜ்மா நகருக்கு வெளியே முதலாவது ஜனாஸா மாளிகாவத்தையில் நல்லடக்கம்

கண்டி, அநுராதபுரத்திலும் நல்லடக்கங்கள் இடம்பெற்றன

0 265

கொவிட் தொற்றால் உயி­ரி­ழக்கும் நபர்­களின் சட­லங்­களை அந்­தந்த பிர­தே­சத்தின் மைய­வா­டி­களில் நல்­ல­டக்கம் செய்ய முடியும் என சுகா­தார அமைச்சு அறி­வித்­த­தை­ய­டுத்து மாளி­கா­வத்தை மைய­வா­டியில் முதலாவது ஜனாஸா கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டது.

இதே­வேளை, இது­வரை மூன்று ஜனா­ஸாக்கள் மஜ்மா நகருக்கு வெளியேயுள்ள மைய­வா­டி­களில் நல்­ல­டக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் அதன்­படி, கண்டி மற்றும் அநு­ராதபுரத்­திலும் இவ்­வாறு ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளன செய­லாளர் அஸ்லம் ஒத்மான் தெரிவித்தார்.

எந்தவொரு மையவாடியிலும் நல்லடக்கம் செய்யும் பணிகள் கடந்த மார்ச் 5 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை முதல் அனுமதிக்கப்பட்டது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள EPID/400/2019/n- CoV எனும் சுற்று நிருபம் ஊடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.