பேரீத்தம் பழ இறக்குமதிக்கான கட்டுப்பாடு நீக்கப்படவில்லை

0 379

(றிப்தி அலி)
பேரீத்தம் பழ இறக்­கு­ம­திக்கு விதிக்­கப்­பட்ட கட்­டுப்­பா­டுகள் இன்னும் நீக்­கப்­ப­ட­வில்லை என நிதி அமைச்சின் உயர் அதி­கா­ரி­யொ­ருவர் விடி­வெள்­ளிக்கு நேற்று தெரி­வித்தார். குறித்த கட்­டுப்­பாட்டை நீக்­கு­வது தொடர்பில் நிதி அமைச்­சினால் இது­வரை எந்­த­வொரு தீர்­மா­னமும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார். பேரீத்­தம்­பழம் உட்­பட 367 பொருட்­களை இறக்­கு­மதி செய்ய கடந்த மார்ச் 9ஆம் திகதி முதல் கட்டுப்பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் நிதி அமைச்சர் பஷில் ராஜ­ப­க்ஷ­வினால் 2270/18ஆம் இலக்க அதி­வி­சேட வர்த்­த­மானி அறி­வித்­தலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்த கட்­டுப்­பா­டி­னை­ய­டுத்து பல பொருட்­களின் விலைகள் திடீரென அதி­க­ரிக்­கப்­பட்­டன. புனித ரமழான் மாதத்­திற்கு இன்னும் 15 நாட்­களே உள்ள நிலையில் இறக்­கு­மதி கட்­டுப்­பாடு கார­ண­மாக பேரீத்தம் பழங்­களின் விலைகள் சுமார் 100 சத­வீ­தத்­தினால் அதி­க­ரிக்­கப்­பட்­டன.

இந்த திடீர் அதி­க­ரிப்பு தொடர்பில் சமூக ஊட­கங்­களில் பாரிய விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இவ்­வா­றான நிலையில் பேரீத்தம் பழங்­க­ளுக்கு விதிக்­கப்­பட்ட தடை­யினை நீக்­கு­மாறு 20 ஆவது திருத்தச் சட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்த முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

நீதி அமைச்சர் அலி சப்ரி, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இஷாக் ரஹ்மான், எம்.எஸ்.தௌபீக், அலி சப்ரி ரஹீம், எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், மர்ஜான் பழீல் மற்றும் எம். எம்.முஷர்ரப் ஆகியோர் கடந்த வெள்­ளிக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் பிர­தமர் மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினை சந்­தித்து இந்த கோரிக்­கை­யினை முன்­வைத்­துள்­ளனர்.
இந்த கோரிக்­கை­யினை அடுத்து சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­க­ளுக்கு பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ உட­ன­டி­யாக பணிப்­புரை வழங்­கி­ய­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மர்ஜான் பழீல் ஊட­கங்­க­ளுக்கு அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டி­ருந்தார்.

அத்­தோடு பள்­ளி­வா­சல்­க­ளுக்­காக தரு­விக்­கப்­படும் பேரீத்தம் பழத்­துக்­கான வரி­யி­னையும் அற­வி­டா­தி­ருக்­கு­மாறும் கோரிக்கை விடுக்­கப்­பட்­ட­தாக தெரி­வித்த மர்ஜான் பழீல், அதற்கும் உடன்­பாடு காணப்­பட்­ட­தாக குறிப்­பிட்டார்.
எனினும், குறித்த சந்­திப்பு இடம்­பெற்று ஒரு வாரம் கழிந்­துள்ள நிலை­யிலும், பேரீத்தம் பழ இறக்­கு­ம­திக்­கான கட்­டுப்­பா­டுகள் நீக்கம் தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்தல் இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இறக்­கு­மதி கட்­டுப்­பாட்­டா­ளரின் உத்­தி­யோ­க­பூர்வ அனு­ம­தி­யின்றி பேரீத்தம் பழ இறக்­கு­ம­திக்கு சுங்கத் திணைக்­களம் ஒரு­போதும் அனு­ம­திக்­காது.
இதே­வேளை, பேரீத்தம் பழம், அப்பிள், ஒரேஞ் மற்றும் மாஜரின் உள்­ளிட்ட 9 வகை­யான பொருட்­களின் இறக்­கு­ம­திக்கு விசேட சுங்க வரியொன்று நிதி அமைச்சின் கீழுள்ள வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தினால் கடந்த மார்ச் 9ஆம் திகதி விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒரு கிலோ பேரீத்தம் பழத்திற்கு 200 ரூபா விசேட சுங்க வரி அறவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.