ஒரே நாடு ஒரே சட்டம்: இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக ஆழமாக வளரும் அரச விரோதம்

0 278

ஆங்கிலத்தில்: அலன் கீனன்
(சர்வதேச நெருக்கடிகள் குழுவின்
சிரேஷ்ட ஆலோசகர்)
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்

ஜனாதிபதியினால் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணியின் தலைவராக கலகொட அத்தே ஞானசார தேரர் நியமிக்கப்பட்டதன் பின்னணி தொடர்பில் சர்வதேச நெருக்கடிகள் குழு கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையின் சுருக்கம்

நாட்டின் சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்­காக ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜபக் ஷ 2021ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 28ஆம் திகதி “ஒரே நாடு ஒரே சட்டம்” என்­றவோர் செய­ல­ணியை நிய­மித்தார். அதன் தலை­வ­ராக கல­கொட அத்தே ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­பட்டார். இந்­நி­ய­மனம் பெரும் எண்­ணிக்­கை­யி­லான இலங்­கை­யரை அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது.

ஞான­சார தேரர் இலங்­கையின் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான பிர­பல குழு­வான பொது­பல சேனா அமைப்பின் செய­லாளர். அவர் சமூ­கங்­க­ளுக்­கி­டையில் பர­வ­லாக இன வன் செயல்­களைத் தோற்­று­வித்தவர். இவர் 2014 ஜூன் மாதத்­திலும் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்­திலும் மிகவும் மோச­மான கல­வ­ரங்­க­ளுக்கு கார­ண­மாக இருந்­தவர்.
நீதி­மன்­றினை அவ­ம­தித்த குற்­றத்­திற்­காக 6 வருடம் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டவர். என்­றாலும் முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் பொது­மன்­னிப்பின் கீழ் விடு­தலை செய்­யப்­பட்­டவர்.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஐ.எஸ். அமைப்பின் ஆத­ர­வா­ளர்கள் என்­று­கூ­றிக்­கொண்ட சிறிய குழு­வொன்­றினால் கிறிஸ்­தவ ஆல­யங்கள் மற்றும் ஹோட்­டல்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து குரு­மார்­களின் முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான உணர்­வுகள் கிளர்ந்­தெ­ழுந்­தன.

அத்­தோடு இலங்­கையில் அர­சியல் அவ­தா­னிகள் மற்றும் சில பெளத்த குரு­மார்கள் ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் ஜனா­தி­பதி செய­ல­ணிக்கு ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­மைக்கு அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளனர்.

ராஜபக் ஷ அர­சாங்கம் தற்­போது மக்கள் மத்­தியில் நன்­ம­திப்­பினை இழந்­துள்­ளது. தவ­றான பொரு­ளா­தார முகா­மைத்­து­வத்­தினால் உரு­வா­கி­யுள்ள நெருக்­கடி நிலைமை கார­ண­மாக சிங்­கள பெளத்த மக்­க­ளதும் நன்­ம­திப்பும் இழக்­கப்­பட்­டுள்­ளது.

முஸ்­லிம்­களின் சமய தீவி­ர­வாதம் தொடர்பில் அச்சம் கொண்­டுள்ள ஜனா­தி­பதிக்கு அதனை அடக்­கு­வ­தற்கு பல வரு­டங்­க­ளாக தூர­மா­கி­யி­ருந்த ஞான­சார தேரரின் ஆத­ரவு தேவைப்­பட்­டது.1983 முதல் 2009 வரை­யான காலப்­ப­கு­தியில் நடை­பெற்ற சிவில் யுத்­தத்­தின்­போது தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களை நடத்­தினர். இதனால் பெரும்­பான்மை சமூகம் பல அச்­சு­றுத்­தல்­க­ளுக்­குள்­ளா­கி­யது. இன்று அதே போன்­ற­தொரு நிலைமை முஸ்­லிம்­களால் அர­சுக்கு ஏற்­ப­டலாம் என இன தீவி­ர­வா­திகள் கரு­து­கின்­றனர்.

அதி­க­ரிக்கும் முஸ்லிம் எதிர்ப்பு அரசியல்
2019 ஆம் ஆண்டு கோத்­தா­பய ராஜபக் ஷ ஜனா­தி­பதி தேர்­தலில் “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற சுலோ­கத்தை முதன்­மைப்­ப­டுத்­தியே போட்­டி­யிட்டார். இந்தச் சுலோகம் 2019 ஏப்­ரலில் மேற்­கொள்­ளப்­பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு மிகவும் பிர­ப­ல­மா­னது.
இலங்கை முஸ்­லிம்கள் பல வரு­டங்­க­ளாக தேசிய ரீதி­யி­லான விட­யங்­களை விட தமது சொந்த விட­யங்­க­ளிலே ஆர்­வ­முள்­ள­வர்­க­ளாக இருக்­கி­றார்கள் என்ற கருத்து பெரும்­பா­லான சிங்­க­ள­வர்­க­ளிடம் இருந்து வந்­துள்­ளது.

சிவில் யுத்­தத்­தின்­போது முஸ்­லிம்கள் அர­சுக்கு ஆத­ர­வா­கவே செயற்­பட்­டார்கள். முஸ்­லிம்கள் தமது சொந்த பொரு­ளா­தார நன்மை கரு­தியே அர­சுக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக சிங்­க­ள­வ­ரி­ட­மி­ருந்து மாத்­தி­ர­மல்ல தமி­ழர்­க­ளி­ட­மி­ருந்தும் முறை­ப்பா­டு­களைக் கேட்க முடிந்­தது.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பாரா­ளு­மன்­றத்தில் இரு பெரும்­பான்மை சிங்­கள கட்­சி­க­ளுக்கு மத்­தியில் அதி­கா­ரத்தை தீர்­மா­னிப்­ப­தற்கு கார­ண­மா­ன­வர்­க­ளாக இருந்­தார்கள். முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஒரு கட்சி ஆட்­சி­ய­மைப்­பதை தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக இருந்து தங்­க­ளது சமூ­கத்­துக்கு சலு­கை­களை பெற்­றுக்­கொள்­ப­வர்­க­ளாக செயற்­ப­டு­வ­தாக சிங்­க­ள­வர்கள் சுட்­டிக்­காட்­டி­னார்கள்.

2000ஆம் ஆண்டு ஆரம்ப காலப்­ப­கு­தியில் முஸ்­லிம்கள் குறிப்­பாக முஸ்லிம் பெண்கள் அணியும் கலா­சார ஆடை மற்றும் சமய பக்தி என்­பன அவர்கள் பெரும்­பான்மை சமூ­கத்­தி­லி­ருந்தும் தூரப்­ப­டுத்­து­வ­தாக கரு­தினர். 2012 இல் பொது­பல சேனா அமைப்பின் வரு­கை­யுடன் சிங்­கள அடிப்­ப­டை­வாத குழுக்­க­ளான சிங்­கள ராவய, ராவணா பல­காய என்­பன இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தமது செயற்­பா­டு­களை அதி­க­ரித்­தன.
2013 மற்றும் 2014களில் பொது­ப­ல­சே­னாவின் ஊடக சந்­திப்­புகள், பேர­ணிகள் என்பன அர­சியல் நிகழ்ச்சி நிர­லுக்கு உத­வின. ஊடக சந்­திப்­பு­களில் இடம் பெற்ற உரைகள் மற்றும் எச்­ச­ரிக்­கை­யுடன் கூடிய நட­வ­டிக்­கைகள் என்­பன முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கவே அமைந்­தி­ருந்­தன. முஸ்­லிம்கள் நாட்டில் தீவி­ர­வா­தத்தைப் பரப்­பு­வ­தாக அவர்கள் குற்றம் சுமத்­தி­னார்கள்.

பொது­பல சேனா மற்றும் அதன் கொள்­கைகள் சார்ந்த அமைப்­புகள் இணைய வழி மூலம் வெறுப்புப் பேச்­சு­களை வெளி­யிட்­டன. நாட்டில் முஸ்­லிம்­களின் சனத்­தொகை அதி­க­ரித்து வரு­வ­தா­கவும் முஸ்­லிம்­களின் சனத்­தொகை பெரும்­பான்­மை­யான சிங்­க­ள­வர்­களின் சனத்­தொ­கையை விட விஞ்­சி­வி­டு­ம் எனவும் பிர­சாரம் செய்­யப்­பட்­டது.
முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான வர்த்­தக நிறு­வ­னங்கள் சிங்­க­ள­வர்­களின் சனத்­தொகை அதி­க­ரிப்பை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக இர­க­சி­ய­மான முறையில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு கருத்­தடை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான பொருட்­களை விநி­யோ­கிப்­ப­தா­கவும் குற்றம் சுமத்­தினர்.

ஹலால் சான்­றிதழ் விநி­யோ­கிப்­பதன் மூலம் பெற்­றுக்­கொள்­ளப்­படும் நிதி இஸ்­லா­மிய தீவி­ர­வா­தி­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வ­தா­கவும் தெரி­வித்­தனர். இதனால் இஸ்­லா­மிய தீவி­ர­வாதம் ஏனைய சமூ­கங்­க­ளுக்கு அச்­சு­றுத்­த­லாக அமைந்­துள்­ளது எனவும் ஞான­சார தேரர் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் சகோ­த­ர­ரான மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சிக் காலத்தில் (2005 – 2015) முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள் பாரி­ய­ளவில் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டன. இந்தக் கால­கட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்கள் மோச­மாகத் தாக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­களின் வர்த்­த­கத்­துக்கு எதி­ரான சிங்­கள வர்த்­த­கர்கள் இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருந்­த­தாக பலர் குற்றம் சுமத்­தி­னார்கள்.

2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஞான­சா­ர­தேரர் அளுத்­க­மயில் கூட்டம் ஒன்­றினை ஏற்­பாடு செய்து அங்கு உரை நிகழ்த்­தினார். முஸ்லிம் தீவி­ர­வாதம் கார­ண­மாக அச்­சு­றுத்தல் நில­வு­வ­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது. இந்தக் கூட்­டத்தில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான பெரும்­பான்மை இனத்­தவர் கலந்து கொண்­டனர்.

கூட்­டத்தில் ஞான­சார தேரர் ‘இந்­நாட்டில் தொடர்ந்தும் சிங்­கள பொலி­ஸாரும், சிங்­கள இரா­ணு­வத்­தி­ன­ருமே இருக்­கி­றார்கள். சிங்­க­ளவர் ஒருவர் மீதேனும் கை வைக்­கப்­பட்டால் அது முஸ்­லிம்கள் அனை­வ­ரதும் அழிவாக அமையும்’ என உரை­யாற்­றினார்.

இந்த உரை­யி­னை­ய­டுத்து சில நிமி­டங்­களில் நூற்­றுக்­க­ணக்­கான அவ­ரது ஆத­ர­வா­ளர்கள் அங்­கி­ருந்தும் முஸ்­லிம்கள் வாழும் அயல் பகு­தி­க­ளுக்கு பேர­ணி­யாகச் சென்­றார்கள். அங்கு வன்முறை வெடித்­தது. இரண்டு நாட்­க­ளாக நடந்த வன்­செ­யல்­களில் மூன்று முஸ்­லிம்­களும், தமிழ் பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் ஒரு­வரும் பலி­யா­னார்கள். அப்­ப­கு­தி­யி­ல்­வெளி­யி­லி­ருந்து வந்த சிங்­கள காடை­யர்கள் தாக்­கு­தலை நடத்­தி­னார்கள். முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான கடைகள் மற்றும் வீடுகள் தாக்­கப்­பட்டு எரி­யூட்­டப்­பட்­டன. தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்கு பொலிஸார் ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டது.

இந்த வன்­செ­யல்­களின் பின்­ன­ணியில் அர­சாங்­கத்­துக்கு எவ்­வித தொடர்­பு­மில்லை என அர­சாங்கம் மறுத்­தாலும் சுயா­தீ­ன­மான கண்­கா­ணிப்­பா­ளர்கள் அப்­போ­தைய மஹிந்த ராஜ­ப­க்ஷவின் அர­சாங்கம் பொது­ப­ல­சே­னா­வுக்கு ஆத­ரவு வழங்­கி­ய­தாக சர்­வ­தேச நெருக்­க­டிகள் குழு­வுக்குத் தெரி­வித்­தனர். அக்­கா­ல­கட்­டத்தில் கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவே பாது­காப்பு செய­லா­ள­ராக கட­மையில் இருந்தார். கோத்­தா­பய இந்தக் குழுக்­களின் சிரேஷ்ட பெளத்த குரு­மார்­க­ளுடன் தொடர்பில் இருந்­த­வ­ராக அறி­யப்­பட்டார்.

பொது­பல சேனா மற்றும் அத­னோடு ஒத்த கொள்­கை­களைக் கொண்ட குழுக்­க­ளுக்கு பேர­ணி­களை நடாத்­து­வ­தற்கு பொலிஸ் அனு­மதி வழங்­கி­யது. ஆனால் இவ்­வா­றான சமய ரீதி­யி­லான பேர­ணி­க­ளுக்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­மாட்­டாது என அர­சாங்கம் தெரி­வித்­தி­ருந்­தது. முஸ்­லிம்­களின் வீடுகள், வர்த்­தக நிலை­யங்கள், உட­மைகள் தாக்­கப்­பட்டு தீ வைக்­கப்­பட்­ட­போது கட­மை­யி­லி­ருந்த பொலிஸார் செய­லி­ழந்து நின்­றார்கள்.
இந்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் எவரும் தண்­டிக்­கப்­ப­ட­வில்லை என சர்­வ­தேச நெருக்­க­டிகள் குழு­வுக்கு பல தரப்­பினர் தெரி­வித்­தார்கள். இந்தச் சந்­தர்ப்­பத்தில் பிரதி சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் அநுர சேனா­நா­யக்க கோத்­தா­பய ராஜ­ப­க்ஷ­வுடன் நெருங்கிச் செயற்­பட்­ட­தா­கவும் தெரி­விக்­கப்­பட்­டது.

2015 ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் நடை­பெற்ற தேர்­தலில் மஹிந்த ராஜ­பக்ஷ தோற்­க­டிக்­கப்­பட்ட பின்பு, இந்த வன்­செ­யல்­களின் பின்­ன­ணியில் பெளத்த தீவி­ர­வா­திகள் மற்றும் இரா­ணுவ புல­னாய்வு பிரிவு செயற்­பட்­ட­தற்­கான ஆதா­ரங்கள் உள்­ள­தாக அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். இது ஏற்­க­னவே முஸ்லிம் சமூ­கத்­த­லை­வர்கள் சர்­வ­தேச நெருக்­க­டிகள் குழு­வுக்கு தெரி­வித்­தி­ருந்த தக­வலை உறு­திப்­ப­டுத்­து­கி­றது.

2015 இல் ராஜ­ப­க்ஷவின் ஆட்சி தோல்­வி­யுற்று மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் கூட்­ட­ணி­யான நல்­லாட்சி அர­சாங்கம் பதவிக்கு வந்தது. இவ்­வ­ர­சாங்­கத்­துக்கு தமிழ் மற்றும் முஸ்­லிம்­களின் பல­மான ஆத­ரவு கிடைத்­தது. பொது­ப­ல­சேனா அமைப்பின் அச்­சு­றுத்­தல்­க­ளுக்கு முடிவு கட்­டு­வ­தாக உறுதி மொழி­ வ­ழங்கியே புதிய அரசு பத­விக்கு வந்­தது.
புதிய நிர்­வாகம் சாது­ரி­ய­மாக முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான வன்­மு­றை­க­ளையும், வெறுப்­புப்­பேச்­சையும் நிறுத்­தி­யது. பொலிஸ் மற்றும் உளவுப் பிரி­வி­னரின் ஒத்­து­ழைப்­புடன் பெளத்த தீவி­ர­வாத குழுக்கள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன.

சிறி­து­கால அமை­தியின் பின்பு முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான நட­வ­டிக்­கைகள் சிறிய அளவில் மீண்டும் முன்­னெக்­கப்­பட்­டன. 2016 மற்றும் 2017 ஆம் ஆண்­டு­களில் முஸ்­லிம்­களின் வர்த்­தக நிலை­யங்கள் மீது சிறிய தாக்­கு­தல்கள் இனந்­தெ­ரி­யா­தோ­ரினால் மேற்­கொள்­ளப்­பட்­டன. சமூ­க­வ­லைத்­த­ளங்­களில் வெறுப்புப் பேச்சு பிர­சா­ரங்கள் முன்­னெடுக்­கப்­பட்­டன. 2018 ஆம் ஆண்டு பெப்­ர­வ­ரியில் பெளத்த தீவி­ர­வா­தி­களால் அம்­பா­றையில் பள்­ளி­வா­ச­லொன்று தாக்­கப்­பட்டு சேத­மாக்­கப்­பட்­டது. முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான கடை­களும் தாக்­கப்­பட்­டன. முஸ்­லிம்­களின் ஹோட்­ட­லொன்றும் தாக்கி சேத­மாக்­கப்­பட்­டது. அவை­ய­னைத்தும் பொலி­ஸாரின் முன்­னி­லை­யிலேயே அரங்­கே­றின. குறிப்­பிட்ட முஸ்லிம் ஹோட்­டலில் சிங்­க­ள­வர்­க­ளுக்கு கருத்­தடை இர­சா­ய­னங்கள் கலந்த உணவு பரி­மா­றப்­ப­டு­வ­தாக சமூக வலைத்­த­ளங்­களில் வதந்தி பரப்­பப்­பட்­ட­தை­ய­டுத்தே இத்­தாக்­குதல் இடம்­பெற்­றது.

அத­னை­ய­டுத்து மத்­திய மலை நாட்டின் கண்டி மாவட்­டத்தில் நான்கு நாட்கள் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்கள் நடந்­தே­றின. சிங்­க­ளவர் ஒருவர் நான்கு முஸ்லிம் இளை­ஞர்­களால் தாக்­கப்­பட்டு ஒரு­வா­ரத்தின் பின்பு உயி­ரி­ழந்த சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு கண்டி மாவட்­டத்தில் வன்­செ­யல்கள் சிங்­க­ள­வர்­களால் மேற்­கொள்­ளப்­பட்­டன.

உயி­ரி­ழந்­த­வரின் வீட்­டுக்கு ஞான­சார தேரர் விஜயம் மேற்­கொண்டார். பின்பு ஏனைய தீவி­ர­வாத தலை­வர்­க­ளுடன் இணைந்து போராட்­டத்தில் ஈடு­படும் மக்கள் மத்­தியில் அவர் உரை­யாற்­று­வ­தற்­கி­ருந்த நிலையில் ஒரு மணித்­தி­யா­லத்­துக்கு முன்பே வன்­செ­யல்கள் ஆரம்­ப­மா­கின. இந்த வன்­செ­யல்­களில் ராஜ­ப­க்ஷவின் அர­சியல் கட்­சி­யான ஸ்ரீலங்கா பொது­ஜ­ன­பெ­ர­மு­னவின் உள்ளூர் அர­சி­யல்­வா­திகள் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­மையை வீடியோ பதி­வுகள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.

வன்­செ­யல்­களில் இருவர் கொலை செய்­யப்­பட்­டார்கள். அநேகர் காயங்­க­ளுக்­குள்­ளா­னார்கள். முஸ்­லிம்­க­ளுக்குச் சொந்­த­மான நூற்­றுக்­க­ணக்­கான வீடுகள், கடைகள் தாக்­கப்­பட்டு சேத­மாக்­கப்­பட்­டன. டசின் கணக்­கான பள்­ளி­வா­சல்­களும் தாக்கி சேத­மாக்­கப்­பட்­டன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால அவ­ச­ர­கால சட்­டத்தை பிறப்­பித்தார். இந்த அவ­ச­ர­கால சட்ட நிலை­மையில் இரா­ணுவம் நிலை­மையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் சிரேஷ்ட அமைச்­சர்கள் அனை­வரும் வன்­செ­யல்­களை வன்­மை­யாகக் கண்­டித்­தார்கள். சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்­கெ­தி­ராக கடு­மை­யாக நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும் என உறு­தி­ய­ளித்­தார்கள். சில பிர­பல பெளத்த செயற்­பாட்­டா­ளர்கள் உட்­பட நூற்­றுக்­க­ணக்­கானோர் கைது செய்­யப்­பட்­டனர். ஆனால் ஒரு­வ­ரேனும் இந்தச் சம்­ப­வங்­க­ளுக்குப் பொறுப்­பா­ன­வ­ராக இனங்­கா­ணப்­ப­ட­வில்லை. அது திட்­ட­மி­டப்­பட்ட தாக்­கு­த­லாகும். ஞான­சார தேரர் இந்த தாக்­கு­தல் தொடர்­பிலோ முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஏனைய செயற்­பா­டு­களின் பேரிலோ சட்ட நட­வ­டிக்­கைக்கு உள்­ளாக்­கப்­ப­ட­வில்லை.

2019இல் இடம்­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு இலங்கை அர­சாங்கம் முதற் தட­வை­யாக முஸ்லிம்களுக்கு எதிரான சில தீர்­மா­னங்­களை எடுத்­தது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டில் அவ­சர கால நிலை­மையை அமுல்­ப­டுத்தி முஸ்லிம் பெண்கள் அணியும் நிகாபை தடை செய்தார். நாட்டின் பாது­காப்பு கரு­தியே இத்­தடை அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இதே­வேளை அவ­சர கால நிலைமை 2019 ஆகஸ்டில் நீக்­கப்­பட்­டதன் பின்பு இத்­தடை நீக்­கப்­பட்­டது.

அரச பெண் ஊழி­யர்கள் அபாயா அணி­வதும் தடை செய்­யப்­பட்­டது. குறிப்­பாக முஸ்லிம் பெண் ஆசி­ரி­யை­களே அபாயா அணிந்­தனர். இந்த தடை மனித உரி­மைகள் ஆணைக்­கு­ழு­வினால் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­பட்­டதன் பின்பு வாபஸ் பெறப்­பட்­டது.
2019 நவம்­பரில் ஜனா­தி­பதி தேர்தல் அண்­மித்­த­போது மைத்­தி­ரி­பால சிறி­சேன ஞான­சார தேர­ருக்கு பொது மன்­னிப்பு வழங்­கினார். அதன்­பின்பு ஞான­சார தேரர் உட்­பட பெளத்த தேரர்கள் முஸ்லிம் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் மற்றும் அசாத்­சாலி பதவி விலக வேண்டும் என்று கோரி எதிர்ப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டனர். இவர்­க­ளுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பி­ருப்­ப­தாக குற்றம் சுமத்­தியே எதிர்ப்பு நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

பெரும் எண்ணிக்கையிலான சிங்களவர்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள் மற்றும் சில தமிழர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இஸ்லாமிய தீவிரவாதம் மேலோங்குவதை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தனர். இது ஆரம்ப எச்சரிக்கை யாக அமைந்துள்ளதாக கூறினர். இதனை யடுத்து அதிகாரிகள் செயலில் இறங்கினர்.

பொலிஸார் அவசரகால மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ்
இரண்டாயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம்களைக் கைது செய்தனர். தற்கொலை குண்டுதாக்குதலுடன் தொடர்புபட்டதற்கான எவ்வித ஆதாரங்கள் மற்றும் அச்சுறுத்தல் செயற்பாடுகளைக் கொண்டிராத பலரும் இக்கைதில் அடங்கினர்.

வீடுகளில் குர் ஆன் அல்லது அரபு மொழியிலான சமய ஆவணங்கள் நூல்கள் வைத்திருந்தவர்களைக் கூட பொலிஸார் வீடுகளிலிருந்து அழைத்துச் சென்றார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம் பெற்று சில தினங்களில் கோத்தாபய ராஜபக்ஷ தனது ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானத்தை அறிவித்தார். சமய ரீதியிலான தீவிரவாதத்தை அடியோடு துடைத்தெறிவதாக அவர் உறுதியளித்தார். தான் பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமையை நினைவுபடுத்தி அதனைப்போன்று சமய தீவிரவாதத்தையும் அழிப்பதாகக் கூறினார்.

கோத்தாபய ராஜபக்ஷவுக்கு சிங்கள சமூக வாக்காளர்களின் அமோக வரவேற்பும் ஒத்துழைப்பும் கிடைத்தது. முன்பு கோத்தாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்க எதிர்பார்த்திராத அநேக கத்தோலிக்கர்களும் அவருக்கு ஆதரவு வழங்கினார்கள்.
இவ்வாறான சூழ்நிலையில் கோத்தாபய ராஜபக்ஷ பாரியளவில் வெற்றி பெற்று ஜனாதிபதியானார்.

அவர் தான் ஜனாதிபதியானதும் தனது கன்னி உரையை பெளத்த விகாரையிலிருந்து ஆற்றினார்.
“நான் சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரம் வெற்றிபெறுவேன் என்பதை அறிந்திருந்தேன். சிங்களே மக்களே எனக்கு வாக்களித்தார்கள்” என்று தனது உரையில் அவர் குறிப்பிட்டார். (தொடரும்) – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.