ஒரே நாடு ஒரே சட்டம் ஏன்? எதற்கு?

0 770

மூலம்: பேராசிரியர் ஜயதேவ உயன்கொட
தமிழில்: எம்.எச்.எம். ஹஸன்

தமது சேதனப் பசளைத் திட்டம் சமூக ரீதி­யாக மோச­மான விளை­வு­களைத் தோற்­று­வித்து இடை நடுவில் ஸ்தம்­பித்­து­விட்ட நிலையில் அதே போன்ற மற்­று­மொரு திட்­டத்தை ஜனா­தி­பதி ஆரம்­பித்­துள்ளார். அது தான் ஒரே நாடு ஓரே சட்டம் என்ற நிலையைத் தோற்­று­விப்­ப­தற்­கான பிரே­ணை­களை முன்­வைக்கும் ஒரு செய­ல­ணியை அமைத்­தி­ருப்­ப­தாகும்.

இந்த யோசனை பெரு­ம­ள­வான விமர்­ச­னங்­க­ளுக்கும், கலந்­து­ரை­யா­ட­லுக்கும் உட்­பட்­டி­ருப்­ப­த­னூ­டாக கேலிக்­கி­ட­மா­ன­தா­கவும் மாறி­யுள்­ளது. மக்­களின் துலங்­கல்கள் அதிகம் வெளிப்­பட்­டி­ருப்­பது அதன் தலை­மைத்­துவம் பற்­றி­யாகும். அப்­ப­த­விக்கு எவ்­வி­தத்­திலும் பொருத்­த­மற்ற ஞான­சார தேரர் தலை­வ­ராக்­கப்­பட்­டி­ருப்­பது குறித்தே அதிகம் விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது. அது விமர்­சிக்­கப்­பட வேண்­டி­யது தான். இது போன்ற சட்ட மூலங்­களின் போது பொறுப்­பற்ற, ஜன­நா­யக விரோத, இனத்­துவ ஆதிக்க அர­சியல் ரீதி­யான நாச­கார இயல்­புகள், நோக்­கங்கள் சாத்­தி­யப்­பா­டு­களை ஜன­நா­ய­கத்தின் கோணத்தில் அல­சு­வதே இக்­கட்­டு­ரையின் நோக்­க­மாகும்.

இன மேலா­திக்க வாதம்
ஒரே நாடு ஒரே சட்டம் என்­பதன் அடிப்­படை, பல்­லின சமூ­கத்தில் காணப்­படும் இன மேலா­திக்க பார்­வையும் அர­சியல் நோக்­க­மு­மாகும். இது இன, மொழி, கலா­சார, சமய பல்­வ­கைமை கொண்ட சமூ­கத்தில் அர­சியல் மேலா­திக்­கத்­தையும் சமூக மேலா­திக்­கத்­தையும் இணைக்­க­வேண்டும் என்ற உந்­து­த­லாகும்.

வலுக்­கட்­டா­ய­மாக ஒரு­மு­கப்­ப­டுத்தல் என்ற இந்த செய­லொ­ழுங்­குக்கு ஒரு வர­லா­றுண்டு. ஒரு நாடு ஓர் இனம் என்ற கோசத்தின் அடிப்­ப­டையில் தான் இது ஐரோப்­பி­யாவில் ஆரம்­ப­மா­னது. பன்­மொழி பேசும் பல மதங்­களைப் பின்­பற்றும் பன்மைக் கலா­சா­ரங்­க­ளையும் கொண்ட மக்­களை உள்­ள­டக்­கிய பெரும் சனத்­தொ­கை­யையும் கொண்ட ஒரு குறிப்­பிட்ட நிலப் பிர­தே­சத்தை அர­சியல் ரீதி­யாக ஒன்­றி­ணைக்கும் செயற்­பாடு 17 ஆம் நூற்­றாண்டில் ஐரோப்­பாவில் ஆரம்­ப­மா­னது. தேசிய அரசு உரு­வாக்­க­வா­திகள் இதன் போது அனைத்து மக்­க­ளையும் அர­சியல் ரீதி­யாக ஒரு அதி­கார வகுப்பின் கீழ் கொண்டு வரு­வ­தற்­காக அவர்­க­ளி­டையே ஒரே அர­சியல் அடை­யா­ளமும், மத, மொழி, கலா­சார அடை­யா­ளத்­தையும் தோற்­று­விப்­ப­தற்கு முனைந்­தனர். “தேசம்” என்ற நவீன அர­சியல் கலா­சார எண்­ணக்­க­ருவின் கீழ் ஐரோப்­பாவில் 17ஆம் நூற்­றாண்டு முதலே தேசி­ய­வாதம் இந்தப் பின்­ன­ணி­யி­லேயே தோன்றி வளர்ந்­தது.

ஒரு­மு­கப்­ப­டுத்தல் வர­லாறு
ஒரு­மு­கப்­ப­டுத்தல் ஐரோப்­பா­வுடன் மட்­டுப்­பட்ட ஒன்­றல்ல. குடி­யேற்­ற­வா­தத்தின் பெறு­பே­றாக ஐரோப்­பா­வுக்கு வெளி­யே­யுள்ள நாடு­க­ளிலும் இச்­சிந்­தனை பர­வி­யது. ஐரோப்­பிய நாடு­களின் குடி­யேற்­றங்­க­ளாக மாறிய சமூ­கங்கள் அனைத்தும் போல இன, மொழி, கலா­சார, சட்ட, அர­சியல், நிர்­வாக ரீதி­யான பன்­முகத் தன்மை கொண்ட வெவ்­வேறு இன,மொழி, பிர­தேச, தனித்­தன்­மை­களைக் கொண்­ட­தா­கவே நில­வின. குடி­யேற்­ற­வா­தி­களின் ஒரு முக்­கிய கொள்­கை­யாக இந்த ஒரு­மு­கப்­ப­டுத்தல் காணப்­பட்­டது. ஒரே ஆட்சி முறையின் கீழ் கொண்டு வரு­வது அவர்­களின் கொள்­கை­யாக இருந்­தது. இலங்­கையை எடுத்துக் கொண்டால் 1815 இல் முழு­நாட்­டையும் குடி­யேற்­றத்தின் கீழ் கொண்டு வந்­தமை. 1815 இல் கொண்டு வரப்­பட்ட நிர்­வாக ஒரு­மைப்­பா­டுத்­திட்டம், 1833 கோல்­புரூக் கமரன் நிர்­வாகச் சீர்­தி­ருத்தம் என்­பன குறிப்­பி­டத்­தக்­கன.

இவற்றின் அடிப்­ப­டையில் ஒரு நாடு, ஓர் அர­சியல் முறை, ஒரு நிர்­வாகம், ஒரு சட்டம், ஒரு நீதி­மன்ற முறை என்­ற­வாறு ஒரு­மு­கப்­ப­டுத்தல் படிப்­ப­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­டது. இவை எமது நாட்டில் பாரம்­ப­ரி­ய­மாக வந்த நீதி, நிர்­வாக முறை­களின் வளர்­சிக்­கட்­டங்கள் அல்ல. மாறாக ஐரோப்­பிய குடி­யேற்ற நாட்­ட­வர்­களால் தன்­னிச்­சை­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டவை. இவை எமது நாட்டு கலா­சா­ரத்தில் இருந்து பிறந்த சிந்­த­னை­க­ளன்று.

குடி­யேற்­ற­வா­தி­களின் நட­வ­டிக்­கைகள் ஒரு பரிபூரண ஒரு­மைப்­பாட்டைக் கொண்டு வர­வில்லை. நிர்­வாக, ஆட்சி, பாது­காப்பு விட­யங்­க­ளி­லான ஒரு­மைப்­பாட்­டி­லேயே அவர்கள் கவனம் செலுத்­தினர். சமய, கலா­சார, மொழி, மற்றும் சட்ட அமு­லாக்கம் போன்­ற­வற்றின் பன்­மைத்­துவம் தொடர்ந்தும் அனு­ம­திக்­கப்­பட்­டது. இந்­திய இலங்கை குடி­யேற்­ற­வாத வர­லாற்றில் இந்தப் பொதுத் தன்­மையை காண முடியும்.

இந்தப் பூரண­மற்ற குடி­யேற்­ற­வாத ஒரு­மு­கப்­ப­டுத்தற் செய­லொ­ழுங்கு சுதந்­தி­ரத்தின் பின்­னரும் கைவி­டப்­ப­ட­வில்லை அவற்றைத் தொடர்ந்து முன்­கொண்டு செல்­லவே நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டன. சுதந்­தி­ரத்­துக்குப் பிந்­திய உள்­நாட்டு ஆட்­சி­யா­ளர்­களின் முக்­கிய இலக்கு, மற்றும் சுதந்­தி­ரத்­துக்குப் பிந்­திய தேசத்­தையும் அர­சையும் கட்­டி­யெ­ழுப்­புதல் என்ற எண்ணக் கருவின் நோக்கம் கலா­சார ஒரு­மைப்­பாடு பற்­றி­ய­தாகும். சமய, கலா­சார, மொழி, ஒரு­மைப்­பாடு அதன் முக்­கிய பேசு­பொ­ரு­ளாக அமைந்­தன. அரச, சமய, அர­ச­க­ரும மொழி என்ற எண்­ணக்­க­ருக்கள் கருத்­தா­டல்கள் முக்­கி­யத்­துவம் பெற இதுவே கார­ண­மாக அமைந்­தது. அந்த கலா­சார ஒரு­மைப்­பாடு தேசிய ஒரு­மைப்­பாட்டின் அதா­வது இனப்­பன்­மைத்­து­வத்­தினை ஒரே அர­சியல் தனித்­து­வத்­துக்குள் கொண்டு வரும் ஒரு முன் நிபந்­தினை என்ற நம்­பிக்­கையும் கருத்­தா­டலும் சுதந்­தி­ரத்­துக்குப் பிந்­திய குடி­யேற்ற நாடு­களின் அதி­கார பீட உயர் வர்க்­கத்­தி­ன­ரி­டை­யிலும் படித்த புத்­தி­ஜீ­வி­க­ளுக்­கி­டை­யிலும் விரை­வாக பர­வு­வ­தற்கு இது கார­ண­மாக அமைந்­தது. சிங்­கள சமூ­கத்தில் (ஜாதிக்க சிந்­த­னைய) தேசிய சிந்­தனை என்ற பெயரில் பிர­பல்யம் பெற்­றதும் இதுவே.

இந்தியாவில் பிஜேபி (BJP) ஆட்சியில் பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெறுவதும் ராஜபக்ச குடும்ப ஆட்சியின் கீழ் இலங்கையில் நடப்பதும் இந்த கட்டாய அடிபணிய வைக்கும் முயற்சியேயாகும். இந்த இரண்டு ஆட்சியாளர் தரப்பினரதும் மேலாதிக்கவாதத் தாக்குதலுக்குப் பலியாகி இருப்பவர்கள் சிறுபான்மை முஸ்லிம்கள் என்பது ஒரு தற்செயல் நிகழ்ச்சியன்று.

ஐரோப்­பா­விலும் குடி­யேற்ற நாடு­க­ளிலும் ஒரு­மைப்­பாட்டுச் செய­லொ­ழுங்கில் மற்­று­மொரு ஒற்­று­மையைக் காண முடிந்­தது. அதா­வது தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­புதல் தேசிய ஒரு­மைப்­பாடு தேசிய தனித்­து­வத்தைக் கட்­டி­யெ­ழுப்­புதல் ஆகிய எண்ணக் கருக்­களால் கூறப்­பட்ட ஒரு­மைப்­பாட்டுச் செயற்­திட்டம் இனத் தேசி­ய­வாதம் மற்றும் அதன் ஆதிக்­க­வா­தத்தின் அர­சியல் செயற்­திட்­ட­மாக மாற்­ற­ம­டைந்­த­மை­யாகும், இலங்­கையில் சுதந்­தி­ரத்­திற்குப் பின்­ன­ரான சிங்­கள இனத்­தே­சி­ய­வாதம் இதற்­கான சிறந்த உதா­ர­ண­மாகும். சிங்­க­ள­வர்கள் தமி­ழர்கள் ஆகிய இனங்­க­ளுக்­கி­டையில் தேசிய வாதம் அர­சியல் பர­வ­லுக்குச் சமாந்­த­ர­மாக சிங்­கள இனத் தேசி­ய­வாதம் ஒரு அர­சியல் செயற்­திட்­ட­மாக (Political project)மாற்­ற­ம­டைந்­தது. அதன் விளைவு சிங்­கள ஆளும் வர்க்­கத்­தினர் தலைமை தாங்­கிய “தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­தல்”­ என்ற செயற்­பாடு சிங்­கள பௌத்­தர்­க­ளுக்­கான கலா­சார ஆதிக்­கத்தை நிலை­நாட்டும் ஒரு செயற்­திட்­ட­மாக மாற்றம் பெற்­ற­மை­யாகும்.
ஆதிக்க தேசி­ய­வா­தத்தின் இரண்­டா­வது கட்டம்
கோட்­டா­பய ராஜ­பக்­சவின் “ஒரே நாடு ஒரே சட்­டம்”­என்ற கருத்து முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருப்­பது. குடி­யேற்­ற­வா­தத்­திற்குப் பின்­ன­ரான சிங்­கள ஆதிக்­க­வாத தேசி­ய­வாதச் செயற்­திட்­டத்தின் ஒரு நிகழ்ச்சித் திட்­ட­மா­கவும் அதன் இரண்­டா­வது கட்­ட­மா­க­வுமே ஆகும். பன்­மைத்­துவ சமூ­கத்தில் மேலா­திக்க இனத்­துவ தேசி­ய­வா­தத்தின் மூலம் சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளுக்கு எதி­ராக தோற்­று­வித்த புதிய போக்­குகள் இன்­றைய இலங்­கை­யிலும் இந்­தி­யா­விலும் காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. அதா­வது மேலா­திக்க பெரும்­பான்மை இனத்­துவ தேசி­ய­வா­தத்­தினர் தம்­வசம் வைத்­துள்ள ஆட்­சியில் பணிந்து நடக்க வேண்­டி­ய­வர்­க­ளாக சிறு­பான்­மை­யினர் வலுக்­கட்­டா­ய­மாக மற்­றப்­ப­டு­வ­தாகும்.

இந்­தி­யாவில் பிஜேபி (BJP) ஆட்­சியில் பிர­தமர் மோடியின் தலை­மையில் நடை­பெ­று­வதும் ராஜ­பக்ச குடும்ப ஆட்­சியின் கீழ் இலங்­கையில் நடப்­பதும் இந்த கட்­டாய அடி­ப­ணிய வைக்கும் முயற்­சி­யே­யாகும். இந்த இரண்டு ஆட்­சி­யாளர் தரப்­பி­ன­ரதும் மேலா­திக்­க­வாதத் தாக்­கு­த­லுக்குப் பலி­யாகி இருப்­ப­வர்கள் சிறு­பான்மை முஸ்­லிம்கள் என்­பது ஒரு தற்­செயல் நிகழ்ச்­சி­யன்று. ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயற்­திட்­டத்தின் பிர­தான இலக்கு இலங்கை முஸ்­லிம்­களின் கலா­சாரத் தனித்­துவம் என்­பது தெளிவு. வடக்கு கிழக்கு தமிழ் மக்­களின் கலாசா­ரமும் இந்த இலக்கில் வர முடியும்.

இலங்­கையின் மேலா­திக்க சிங்­கள தேசி­ய­வா­தத்­திற்கும் சிறு­பான்மை தமிழ் முஸ்லிம் தேசிய வாதத்­திற்­கு­மி­டை­யே­யுள்ள அதி­காரச் சம­நி­லையை மாற்­றி­ய­மைக்க கடந்த இரண்டு வரு­டங்­க­ளாக ராஜ­பக்ச அரசு ஒரு நிகழ்ச்­சித்­திட்­டத்­துடன் வேலை செய்­கி­றது. அந்தப் பட்­டி­யலில் இப்­போது கத்­தோ­லிக்­கமும் இணைக்­கப்­பட்­டி­ருப்­பது தெரி­கி­றது. அந்த நிகழ்ச்சி நிரலில் (agenda) ராஜ­பக்­சாக்கள் சேர்த்­துள்ள புதிய அம்சம் சிறு­பான்மை இன மக்­களைப் பூரண­மாக பணிய வைக்கும் திட்­ட­மாகும்.

புலி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தில் வெற்றி பெற்­றாலும் இலங்கைத் தமிழ் மக்­களை அர­சியல் ரீதி­யாக அடி­மைப்­ப­டுத்த சிங்­கள தேசி­ய­வாத அர­சி­யலால் முடி­ய­வில்லை. இதற்­கி­டையில் 2019 ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்னர் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஒரு கலா­சாரத் தாக்­கு­தலை கட்­ட­விழ்த்­து­விட சிங்­களத் தேசி­ய­வாதம் தீர்­மா­னித்­ததன் நோக்கம் அவர்­களை அர­சியல் ரீதி­யாக அடி­ப­ணிய வைப்­ப­தாகும். இனங்­க­ளுக்­கி­டை­யி­லான போரை வேறு வழி­களில் தொட­ரு­வ­தற்கும் ஒரே நாடு ஒரே சட்டம் செயற்­திட்­டத்­திற்­கான ஜனா­தி­பதி செய­ல­ணியின் தலை­மைத்­து­வத்­திற்கு ஞான­சார தேரரை நிய­மித்­த­மைக்­கான அர­சியல் அர்த்­தமும் இது தான்.

சுபீட்­சத்தின் நோக்கு
ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயற்­திட்­டத்தின் உண்­மை­யான கருத்து பற்றி ஆழ­மாக நோக்கும் எவ­ருக்கும் பய­ன­ளிக்கும் ஒரு முக்­கிய ஆவ­ண­முண்டு. கோட்­டா­பய ராஜ­பக்ச ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக முன்­வைத்த தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மான “சுபீட்­சத்தின் நோக்கு” என்ற வெளி­யீடே அது. மிக அழ­காக வடி­வ­மைக்­கப்­பட்டு அச்­சி­டப்­பட்­டுள்ள ஒரு பிர­க­ட­ன­மாக இது உள்­ளது. “பண்­பா­டுள்ள, கட்­டுப்­பா­டுள்ள, சட்­டத்தை மதிக்கும் ஒரு சமூ­கத்தை நோக்கி” என்று பெய­ரி­டப்­பட்­டுள்ள ஒன்­ப­தா­வது அத்­தி­யா­யத்தில் பின்­வரும் வாக்­கி­யங்­களைக் காண முடியும்.

“குடி­மக்­களைப் போன்றே ஆட்­சி­யா­ளனும் சட்­டத்தின் ஆட்­சிக்கு உட்­பட வேண்டும் என்­ப­துடன் ஒரு நாட்டில் ஒரு சட்­டமே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும். சட்டம் அனை­வ­ருக்கும் சம­மா­ன­தாக இருக்க வேண்டும். பிரஜை சட்­டத்­துக்கு பயப்­பட வேண்­டுமே தவிர சட்­டத்தை அமுல் நடத்தும் நிறு­வ­னங்­க­ளுக்கோ நபர்­க­ளுக்கோ பயப்­ப­டா­ததும் சட்­டத்தை அமுல் நடத்தும் நிறு­வ­னங்­களும் ஆட்­களும் சட்­டத்­துக்குக் கட்­டுப்­ப­டு­வ­து­மான ஒரு சூழலை உட­ன­டி­யாக உரு­வாக்க வேண்டும்.”

இந்த கூற்­று­க­ளி­லி­ருந்து தெளி­வா­வது ஜனா­தி­பதி பத­விக்குப் போட்­டி­யிடும் போது “ஒரே நாடு ஒரே சட்­டம்”­என்ற கூற்­றிற்கு வழங்­கப்­பட்ட கருத்­தி­லி­ருந்து முற்­றிலும் முரண்­பட்ட ஒரு கருத்தை நோக்கி இப்­போது நகர்ந்­துள்­ள­மை­யாகும். மேற்­படி கூற்றின் மூலம் கரு­தப்­பட்­டது ஆளு­வோரும் ஆளப்­ப­டு­வோரும் வேறு­ப­டுத்தி நோக்­கப்­படும் இரண்டு வகை­யான சட்­டங்கள் அல்­லது சட்­டத்தை அமுல் நடத்­து­வதில் உள்ள இரண்டு வகைகள் அல்­லது சட்­டத்தை அமுல் நடத்தும் நிறு­வ­னங்கள் மற்றும் அதி­கா­ரிகள் அந்த சட்­டத்­திற்கும் கட்­டுப்­படும் ஒரு சூழலை தமது சுபீட்­சத்தின் பாதையின் போது உரு­வாக்­கட்டும் என்­ப­தாகும். அந்­தக்­க­ருத்து சட்ட ஆட்சி என்ற எண்ணக் கரு­வு­டனும் தொடர்­பு­ப­டுத்­தப்­பட்­டி­ருப்­பது மேற்­படி கூற்­று­களில் காணப்­படும் மற்­று­மொரு சிறப்­பம்­ச­மாகும். சட்­டத்தின் மேலா­திக்கம் (Rule of law) அல்­லது சட்­டத்தின் ஆட்சி என்­பது தெளி­வா­கவே தாராண்மை வாத ஜன­நா­யக எண்­ணக்­கரு என்­பது இங்கு தெளி­வா­கின்­றது.

இதன் மூலம் கூறப்­ப­டு­வது பத­விக்கு வரும் எந்­த­வொ­ரு­வரும் தான்­தோன்­றித்­த­ன­மான, அடக்­கு­மு­றை­யான, மக்­களைத் துன்­பு­றுத்தும் சட்­டங்­க­ளுக்கு குடி­மக்கள் அடி­ப­ணிய வேண்டும் அல்­லது அத்­த­கை­ய­தொரு கருத்தை எவ்­வா­றா­வது கொண்­டி­ருந்தால் அது சட்­டத்தின் ஆட்­சி­யல்ல, மாறாக அது (Rule by law) ஆட்­சி­யா­ளரின் மேலா­திக்­க­மாகும். ஜன­நா­யகக் கருத்தில் சட்ட ஆட்சி என்­பது உரு­வாக்­கப்­பட்­டி­ருப்­பது ஆட்­சி­யா­ளரின் மேலா­திக்கம் (Rule by men) என்ற ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணான சர்­வா­தி­கார கருத்­துக்கு எதி­ராக வரும் குடி­ம­க­னுக்கும் ஆட்­சி­யா­ள­ருக்கும் ஒரே சட்டம் நடை­மு­றைப்­ப­டுத்தப்பட வேண்டும் என்­ப­துடன் அது நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்ற சுபீட்­சத்தின் பாதை என்ற வெளி­யீட்டில் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்­கின்ற கருத்து உரோமக் கூட்­டாச்சி சட்­டத்தின் கீழ் ஆரம்­ப­மாகி தாராண்மை ஜன­நா­ய­கத்தின் கீழ் வளர்ச்­சி­ய­டைந்த Rule of Law அதா­வது Not rule of law by men (சட்­டத்தின் ஆட்­சி­யே­யன்றி தனிப்­பட்ட ஒரு­வரின் ஆட்­சி­யல்ல) என்ற கோட்­பாட்­டுடன் நெருக்­க­மா­ன­தாகும். அக்­கோட்­பாட்டின் கருத்தை உயர்­தர வகுப்­பு­களில் அர­சியல் கற்கும் மாண­வர்­களும் சட்­டக்­கல்­லூரி மற்றும் சட்­ட­பீ­டங்­களில் படிக்கும் மாண­வர்­களும் நன்கு அறிவர்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்­பது தொடர்­பான கோட்­ட­பாய ராஜ­ப­க்ஷவின் செயற்­திட்­டத்­துக்கு கருத்து ரீதி­யான எதிர்­பார்ப்பை வெளி­யிடும் போது எதிர்க்­கட்சி சிவில் சமூ­கத்­தினர் மற்றும் ஜன­நா­யகச் சக்­திகள் வலி­யு­றுத்த வேண்­டிய ஒரு முக்­கி­ய­மான அர­சியல் கருத்து மேற்­படிக் கூற்­று­களில் வெளிப்­ப­டு­கின்­றது. அதா­வது சுபீட்­சத்தின் பாதை ஆவ­ணத்தில் பல தட­வைகள் கையா­ளப்­பட்­டுள்ள சட்­டத்தின் ஆட்சி என்­பதன் உண்­மை­யான அர்த்­தத்­தின்­படி நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதை ஜனா­தி­ப­தி­யிடம் வலி­யு­றுத்தி அந்த எண்ணக் கருவின் எதேச்­ச­தி­கார, ஆதிக்­க­வாத, சிதைவை தோல்­வி­ய­டையச் செய்யும் ஒரு கருத்­தியல் போராட்­டத்தை மேற்­கொள்ள வேண்டும். கோட்­ர­ட­பய ராஜ­பக்ச கைவிட்­டுள்ள ‘சட்­டத்தின் ஆட்­சி’­என்ற ஜன­நா­யக எண்ணக் கருவை ஜன­நா­ய­கத்தை மீள் நிலை நாட்டும் ஓர் அமைப்பு கையில் எடுக்க வேண்டும்.

சிறு­பான்­மை­யி­னரின் கலா­சார உரி­மைகள்
ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்­டா­பய ராஜ­பக்­சவின் செயற்­திட்டம் பற்­றி­ய­தான ஜன­நா­யக ஆய்­வா­ளர்கள் புறக்­க­ணிக்க முடி­யாத மற்­று­மொரு விட­ய­முண்டு. அது பன்­மைத்­துவ சமூ­க­மொன்றில் சிறு­பான்­மை­யி­னரின் உரி­மைகள் தொடர்­பான பிரச்­சி­னை­யாகும். கோட்­பாட்டு ரீதி­யா­னதும் நடை­முறை ரீதி­யா­ன­து­மான ஒரு பிரச்­சி­னை­யா­க­வுள்ள இந்த விட­யத்தை சுருக்­க­மா­க­வேனும் கலந்­து­ரை­யா­டு­வ­தற்கு முயற்­சிப்போம்.
இன, மத ரீதி­யான பன்மைச் சமூ­கங்­களில் வாழும் சிறு­பான்மை மக்­க­ளி­டையே அவர்­க­ளுக்­கே­யு­ரிய தனித்­து­வ­மான கலா­சார மர­புகள், வழக்­கா­றுகள், நம்­பிக்­கைகள் உண்டு, பெரும்­பான்மை சமூ­கத்­தி­டையில் அவர்­க­ளுக்­கே­யு­ரிய தனித்­து­வ­மான கலா­சார முரண்­பா­டு­களும் உண்டு. பெரும்­பாலும் அத்­த­கைய இனக்­கு­ழு­வி­னரின் குறிப்­பி­டத்­தக்க சட்டத் தொகு­தி­யா­கவும் இருப்­பது அத்­த­கைய கலா­சா­ர­மாகும். சிங்­கள சமூ­கத்தில் இருக்கும் கண்­டியர் விவாக விவா­க­ரத்துச் சட்டம், தமிழ் சமூ­கத்தில் காணப்­படும் தேச­வ­ழமைச் சட்டம், முஸ்லிம் சமூ­கத்தில் நிலவும் முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம், கிழக்கு மாகா­ணத்தில் வசிக்கும் முக்­குவர் என்ற தமிழ் இனக் குழுவின் மத்­தி­யி­லுள்ள முக்­குவர் சட்டம் என்­பன அத்­த­கைய சட்ட விஷேட ஏற்­பா­டு­க­ளுக்கு உதா­ர­ண­மாகும். ஒரு நாடு ஒரு சட்டம் என்ற செயற்­திட்­டத்தின் கீழ் சவா­லுக்­குள்­ளாகி இருப்­பதும் இத்­த­கைய சட்­டங்­களே. ஆனால் மேற் கூறப்­பட்­டவை அந்­நி­ய­மா­ன­தல்ல மாறாக இலங்­கையில் நடை­மு­றையில் உள்ள சட்­டத்தின் பிரி­வு­க­ளாகும்.

இத்­த­கைய சட்­டங்கள் நில­வு­வதை தீவி­ர­வாத, இன­வாத, தேசி­ய­வாத சக்­திகள் பிழை­யான கண்­ணோட்­டத்­துடன் யோசிக்­கின்­றனர். அது சம்­பி­ர­தா­யபூர்வமான தேசிய அர­சு­வாத தேசி­ய­வாதக் குழுக்­களில் இருக்கும் வெறுப்­புடன் இணைத்து யோசிக்­கப்­ப­டு­கின்­றது. கலா­சார, சட்ட, மற்றும் தனித்­து­வ­மான ஒரு­மைப்­பாடு அத்­த­கைய பிரி­வி­னரின் இலக்­காக இருப்­பதே இந்த எதிர்ப்­புக்­கான கார­ண­மாகும்.

பொது­ப­ல­சேனா இக்­கு­ழு­வையே பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்­றது. அந்த அமைப்பின் செய­லாளர் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற குழுவின் தலை­வ­ராக ஜனா­தி­ய­தியால் நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பது அர­சியல் ரீதி­யாக ஒரு மோச­மான சமிக்­ஞை­யாக கரு­தப்­ப­டு­வதும் இத­னா­லே­யாகும்.

சிறு­பான்மை இனத்­த­வர்­களின் கலா­சாரம்
சிறு­பான்மை மக்­க­ளி­டையே நிலவும் சில சட்­டங்கள் மூலம் மனித உரி­மைகள் மீறப்­ப­டு­கின்­றன என்ற சர்ச்­சையும் இன்று இலங்­கையில் எழுப்­பப்­ப­டு­கின்­றது. முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்டம் பெண் பிள்­ளை­களின் விட­யத்தில் பாரிய பாகு­பாட்டை வளர்ப்­பதும் அவர்­க­ளது மனித உரி­மை­களை மீறும் உறுப்­பு­ரை­களைக் கொண்­ட­து­மாக உள்­ளது என்ற விமர்­சனம் முஸ்லிம் சமு­கத்தை சேர்ந்த பெண் செயற்­பாட்­டா­ளர்­க­ளாலும் வேறு மனித உரிமை ஆர்­வ­லர்­க­ளாலும் எழுப்­ப­டு­கின்­றன. ஞான­சார குழு­வுக்கும் இது தெரியும். ஒரு நாடு ஒரு சட்டம் என்­பதை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்­காக இதே விமர்­ச­னங்­களை அர­சாங்­கமும் செய­ல­ணியும் பயன்­ப­டுத்திக் கொண்­டாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை.

ஜன­நா­யகக் கோணத்தில் இருந்து நோக்கும் போது இங்கு ஒரு முக்­கிய கேள்வி எழு­கி­றது. எமது நாட்டில் விமர்­ச­னத்­துக்கு எடுத்துக் கொள்ள வேண்­டி­யதும் இப்­பி­ரச்­சி­னைகள் பற்­றிய விளக்­கத்­தை­யாகும். பன்மைச் சமூ­க­மொன்றில் இன­ரீ­தி­யான கலா­சாரம் மற்றும் ஏற்­பா­டு­களில் காணப்­படும் மனித உரிமை மீறல்­களைக் கொண்­டதும் ஜன­நா­ய­கத்­திற்கு முரண்­பட்­ட­து­மான அம்­சங்கள் தொடர்­பாக மேற்­கொள்ள வேண்­டிய ஜன­நா­யகத் தீர்வு எவை என்­பது அக்­கேள்வி.

இக்­கேள்­விக்­கான ஜன­நா­ய­க­வா­தி­களின் பிர­தான பதி­லாக இருக்க வேண்­டி­யது அர­சாங்கம் வலுக்­கட்­டா­ய­மாக பெரும்­பான்­மை­வாத தேசி­ய­வாத நிகழ்ச்சி நிர­லுக்குப் பொருத்­த­மான வகையில் சிறு­பான்மைக் கலா­சார அம்­சங்­களை ஒழித்­து­வி­டு­வதோ இரத்துச் செய்­வதோ அன்று. அவ்­வாறு செய்­வது சிறு­பான்­மைக்­கெ­தி­ராக அரசின் கட்­டா­யப்­ப­டுத்­தலை திணிப்­ப­தாகும். அதன் மூலம் சிறு­பான்­மை­யினர் மேலும் மேலும் வேறு­ப­டுத்தி நோக்­கு­வ­தற்கு உட்­ப­டுத்­து­வ­தே­யாகும். இது சிறு­பான்­மை­யி­ன­ருக்கும் பெரும்­பான்­மை­யி­ன­ருக்கும் அர­சுக்­கு­மி­டையே புதிய குரோ­தங்­களைத் தோற்­று­வித்து மோதல்­க­ளுக்­கான வாசல் திறக்­கப்­படும் நிலையை ஏற்­ப­டுத்­து­வ­த­னா­லே­யாகும். இன ஒற்­று­மையும் வெகு­வாக பாதிக்­கப்­படும் என்பதனாலாகும்.

இது போன்ற பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வு கட்­டா­யப்­ப­டுத்தி அடி­மைப்­ப­டுத்­து­வதோ பலாத்­கா­ர­மாக நிறை­வேற்­றப்­படும் சட்டத் திருத்­தங்­களோ அல்ல. அந்தப் பிரச்­சினை தொடர்பில் பொது­வாக சமூ­கத்­திலும் சிறு­பான்மை மக்­க­ளி­டை­யேயும் திறந்த கலந்­து­ரை­யா­டல்­களை தொட­ரு­வ­தாகும். அதன் மூலம் சிறு­பான்மை சமூ­கத்­த­வ­ரி­டையே அத்­த­கைய சட்­டங்கள் சம்­பி­ர­தா­யங்­களை சீர்­ப­டுத்தும் கலந்­து­ரை­யா­டலும் பொது­சன அபிப்­பி­ரா­யமும் உரு­வாகும்.

எமது சமு­கத்­தி­லி­ருந்து ஒரு உதா­ர­ணத்தை எடுப்­ப­தானால் சிங்­கள, தமிழ் சமு­கங்­களில் காணப்­படும் சாதி வேற்­றுமை மற்றும் சீதன முறை மனித உரி­மை­க­ளையும் அர­சியல் யாப்பின் உறுப்­பு­ரை­க­ளையும் மீறு­கின்­ற­ன­வாக உள்­ளன. சிங்­கள, தமிழ் சமூ­கங்­களின் கலா­சா­ரத்தை ஜன­நா­யக நவீ­னத்­துவம் கொண்­ட­தாக மாற்­றி­ய­மைக்க சாதி வேற்­றுமை மற்றும் சீதனம் தொடர்­பான திறந்த மக்கள் கலந்­து­ரை­யா­ட­லொன்று இடம்­பெற வேண்டும். சாதி வேற்­று­மையை மற்றும் சீத­னத்தை ஒழிப்­ப­தற்­கான சட்­டங்­களைக் கொண்டு வரு­வ­தா­யினும் அது உரிய சமூ­கங்­க­ளு­ட­னான கலந்­து­ரை­யாடல் மூல­மா­கவே நடை­பெற வேண்டும். அத்­த­கைய கலந்­து­ரை­யா­டலின் போது குறிப்­பிட்ட கலா­சார அம்­சங்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் கருத்தைக் கேட்­பது அத்­த­கைய முயற்­சி­களில் முன்னோடிகளாக இருக்கும் ஜனநாயக மற்றும் சமூக மறுசீரமைப்பு தொடர்பாக ஈடுபாடு கொள்கின்ற செயற்பாட்டாளர்கள் குழுக்களின் முக்கிய கடமையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு நோக்கும் போது முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் மனித உரிமைகள், பெண்கள் உரிமைகளை மீறும் அம்சங்கள் இருப்பின் சட்டத்திலிருந்து அவற்றை நீக்கவேண்டியது பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயன்றி இன மேலாதிக்க செயற்திட்டத்தை நிறைவேற்றுவதாக இருக்கக் கூடாது.

சிறுபான்மை மக்களின் கலாசார, உரிமைகள் தொடர்பான விடயங்கள் ஜனநாயகம் தொடர்பான அரசியற் கோட்பாட்டிலும் கூட கருத்து வேறுபாடு கொண்ட ஒரு கருப்பொருளாகவே உள்ளது. முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது, தனியாள் உரிமைக்கா, குழு உரிமைக்கா, அரசியல் ஜனநாயகத்திற்கா, கலாசார ஜனநாயகத்திற்கா என்ற கேள்விகள் அதனுள் பொதிந்துள்ளன. ஜனநாயகம் தொடர்பான எமது நாட்டின் கலந்துரையாடல் இத்தகைய பிரிவுகள் விடயத்திலும் கவனம் செலுத்தும் காலம் இப்போது கனிந்துள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.