ஞானசார தேரர் – கிழக்கு முஸ்லிம்கள் சந்திப்பு: ஹராமா? ஹலாலா?

0 638

எம். எல். எம். மன்சூர்

பொது­பல சேனா இயக்­கத்தின் செய­லாளர் என்ற முறையில் அல்­லாமல், ஜனா­தி­ப­தி­யினால் நிய­மனம் செய்­யப்­பட்­டி­ருக்கும் செய­லணி ஒன்றின் தலைவர் என்ற முறையில் ஞான­சார தேரர் அண்­மையில் முஸ்­லிம்கள் செறிந்து வாழும் கல்­முனை, காத்­தான்­குடி போன்ற பிர­தே­சங்­க­ளுக்கு ஓர் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்­டி­ருந்தார். அப்­பொ­ழுது கணி­ச­மான அள­வி­லான முஸ்­லிம்கள் விரும்பி முன்­வந்து, அவ­ருக்கு வர­வேற்­ப­ளித்­தி­ருந்­த­துடன், அவ­ருடன் சுமு­க­மான விதத்தில் உரை­யா­டல்­க­ளையும் நடத்­தி­யி­ருந்­தார்கள்.

இப்­பொ­ழுது அது தொடர்­பாக கடு­மை­யான விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­வ­துடன், அந்தச் சந்­திப்­புக்­களை நெறிப்­ப­டுத்­திய ஒரு சில சிவில் சமூகச் செயற்­பாட்­டா­ளர்கள் மீது சமூக ஊட­கங்­களில் கடு­மை­யான வசை­மா­ரி­களும் பொழி­யப்­பட்டு வரு­கின்­றன.

‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செய­லணி தொடர்­பாக இரண்­டா­வ­தாக வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் மற்றும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கடந்த 30 ஆம் திகதி 15 இஸ்­லா­மிய நாடு­களின் தூது­வர்­க­ளிடம் தெரி­வித்த கருத்­துக்கள் என்­ப­வற்­றை­ய­டுத்து தனது செய­ல­ணியின் பணிப்­பாணை (Mandate) கடு­மை­யாக வரை­ய­றுக்­கப்­பட்­டி­ருக்கும் ஒரு பின்­ன­ணி­யிலும் கூட, ஞான­சார தேரர் அதனை வெளிக்­காட்டிக் கொள்­ளாமல் தனக்கு பெரு­ம­ள­வுக்கு அதி­கா­ரங்கள் இருந்து வரு­வ­தான ஒரு தோர­ணையில் நடந்து கொள்­கிறார். இந்தப் புதிய நிய­மனம், அது எடுத்து வந்­தி­ருக்கும் அங்­கீ­காரம் மற்றும் காவ­லர்கள் புடை­சூழ மேற்­கொள்­ளப்­படும் பய­ணங்கள் என்­பன அவ­ரிடம் ஒரு வித­மான பர­வச உணர்­வையும், புதுத் தெம்­பையும் எடுத்து வந்­தி­ருப்­பது போல் தெரி­கி­றது. அதற்கு தகுந்தாற் போல அவ­ரு­டைய உடல் மொழி­யிலும் ஒரு மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.
காத்­தான்­கு­டியில் இடம்­பெற்ற சந்­திப்பு குறித்து அவர் தனது இயல்­புக்கு மாறான விதத்தில் மிகுந்த நெகிழ்ச்­சி­யுடன் பேசி­யி­ருக்­கிறார். இந்தப் பய­ணங்­களின் பின்னர் அவ­ரிடம் சிறு அள­வி­லான ஒரு மன­மாற்றம் ஏற்­பட்­டாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்­கில்லை. அப்­படி இல்­லா­விட்­டாலும் கூட, ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ செய­லணி முன்­வைக்கப் போகும் பரிந்­து­ரைகள் குறித்து எவரும் அநா­வ­சி­ய­மாக பீதி­ய­டைய வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

2012 ஆம் ஆண்டின் பின்னர் இடம்­பெற்ற ஞான­சார தேரரின் திடீர் எழுச்­சியும், பரந்த சிங்­கள பௌத்த சமூ­கத்தில் அவ­ருக்கு கிடைத்த வர­வேற்பும் ஒரு சூனி­யத்தில் நிக­ழ­வில்லை என்­பதை முதலில் நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ‘அத்­த­கைய ஒரு ஆபத்தானவரின்’ வரு­கைக்­காக தென்­னி­லங்கை சிங்­கள சமூகம் ஆவ­லுடன் காத்துக் கொண்­டி­ருந்த ஒரு சூழ்­நி­லை­யி­லேயே அது நிகழ்ந்­தது. குறிப்­பாக, 1990 தொடக்கம் இலங்கை இஸ்­லா­மிய சமூ­கத்தில் படிப்­ப­டி­யாக ஏற்­பட்டு வந்த மாற்­றங்கள் மற்றும் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களின் செயற்­பா­டுகள் என்­பன ஞான­சார தேரர் போன்ற ஒரு­வரின் எழுச்­சிக்கு உசி­த­மான ஒரு சூழ்­நி­லையை சிங்­களப் பெரு­நி­லத்தில் உரு­வாக்­கி­யி­ருந்­தன.

சுதந்­தி­ரத்­திற்குப் பின்னர் கிட்­டத்­தட்ட 60 ஆண்­டுகள் விளிம்பு நிலையில் நின்று செயற்­பட்டு வந்த தீவிர சிங்­கள இன­வா­தி­களை அந்த மாற்­றங்­களே மைய நீரோட்ட அர­சியல் சமூ­கத்­திற்குள் எடுத்து வந்­தி­ருந்­தன என்ற விட­யத்தை இங்கு முக்­கி­ய­மாக குறிப்­பிட வேண்டும்.

2012 / 2013 காலப் பிரிவில் சிங்­கள ஊட­கங்­களின் பக்­க­ப­லத்­துடன் பொது­பல சேனா இயக்கம் முன்­னெ­டுத்த தீவி­ர­மான ஹலால் எதிர்ப்புப் பிரச்­சாரம் எங்கு போய் முடிந்­தது என்­பது எல்­லோ­ருக்கும் தெரியும். நாட்டு நிலை­மையை கவ­னத்தில் எடுக்­காமல் ஒரு சில தரப்­பினர் கண்­மூ­டித்­த­ன­மாக எடுத்­தி­ருந்த தீவிர நிலைப்­பா­டுகள் கார­ண­மாக ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் சிறு­மைப்­ப­டுத்­தப்­பட்ட தரு­ண­மாக அது இருந்து வந்­தது.
அடுத்து வந்த எட்டு ஒன்­பது ஆண்­டு­களில் நிகழ்ந்­தவை அனைத்தும் வர­லாறு.

ஞான­சார தேரர் தொடர்­பாக கட்­ட­மைக்­கப்­பட்­டி­ருக்கும் ‘முஸ்­லிம்­களின் மிக மோச­மான எதிரி’ என்ற பிம்­பத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அவரை பகிஷ்­க­ரிக்க வேண்டும் என்ற கோரிக்­கைகள் விடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

ஆனால், ஞான­சார தேரரும் புதி­தாக கள­மி­றங்­கி­யி­ருக்கும் ஒரு சில தீவிர அர­சியல் பிக்­கு­களும் இன்­றைய இலங்­கையின் சிக்­க­லான இனத்­துவ அர­சி­யலில் உதா­சீனம் செய்ய முடி­யாத சக்­தி­க­ளாக எழுச்­சி­ய­டைந்­தி­ருக்­கின்­றார்கள்.

மறு­பு­றத்தில், ஒரு சரா­சரி மத வெறி­ய­ரி­லி­ருந்து ஞான­சார தேரர் எவ்­வாறு வேறு­ப­டு­கிறார் என்­ப­தனை துல்­லி­ய­மாக அறிந்து கொள்­வது, அவ­ரு­டைய உள­வி­யலை புரிந்து கொண்டு, அதற்­கேற்றாப் போல அவ­ருடன் கருத்துப் பரி­மாற்­றங்­களை மேற்­கொள்­வ­தற்கு உதவ முடியும்.

தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான சிங்­கள இன­வா­தத்தில் மதம் ஒரு போதும் ஒர் அங்­க­மாக இருந்து வர­வில்லை. மாறாக, சில கட்­டங்­களில் பொது­வான மதச் சடங்­குகள் சிங்­கள – தமிழ் சமூ­கங்­களை இணைக்கும் ஒரு பொது நிகழ்வாக சர­டாக இருந்து வரு­கின்­றது என்ற விடயம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது. போர் உக்­கி­ர­மாக இடம்­பெற்ற கால கட்­டத்­திலும் கூட, சிங்­கள இன­வாத/ தேசி­ய­வாத தரப்­புக்கள் மற்றும் சிங்­கள ஊட­கங்கள் என்­பன ஒரு சில சந்­தர்ப்­பங்­களில் கத்­தோ­லிக்கச் திருச்­சபை மீதும், வட­பு­லத்தில் களச் செயற்­பாட்­டா­ளர்­க­ளாக இருந்து வந்த ஒரு சில முன்­னணி அருட் தந்­தை­யர்கள் மீதும் புலி ஆத­ரவு முத்­தி­ரையை குத்­தி­னார்­க­ளே­யொ­ழிய, இந்து மதம் என்ற ஸ்தாப­னத்தை அத்­த­ரப்­புக்கள் ஒரு போதும் விமர்­ச­னத்­திற்கோ அல்­லது கண்­ட­னத்­திற்கோ உட்­ப­டுத்­த­வில்லை.

மாறாக, இலங்­கையில் இஸ்­லா­மி­யர்கள் மீதான வெறுப்பு முழுக்க முழுக்க மதம் சார்ந்த விதத்­தி­லேயே கட்­ட­மைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அந்த வெறுப்புப் பிரச்­சா­ரத்தில் சேர்க்க வேண்­டி­ய­வற்றை சேர்த்து, நீக்க வேண்­டி­ய­வற்றை நீக்கி அதற்கு ஒரு புதிய வடி­வத்தை உரு­வாக்கிக் கொடுத்­தவர் ஞான­சார தேரர்.

சரி­யாகச் சொல்லப் போனால், அந­கா­ரிக தர்­ம­பால போன்ற கடும் தேசி­ய­வா­தி­களின் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்­சா­ரங்­களை அடுத்து, கிட்­டத்­தட்ட 100 ஆண்டு கால­மாக சிங்­கள மக்­களின் பொதுப் புத்­தியில் முஸ்­லிம்கள் தொடர்­பாக உரு­வாக்­கப்­பட்­டி­ருந்த சித்­தி­ரங்கள் “ஈவி­ரக்­க­மற்ற வியா­பா­ரிகள்; ஏமாற்றுப் பேர்­வ­ழிகள்; வகை­தொகை இல்­லாமல் பிள்­ளை­களை பெற்றுக் குவிப்­ப­வர்கள்” என்ற விதத்­தி­லேயே இருந்து வந்­தன.
அந்தச் சித்­தி­ரங்­களை கலைத்துப் போட்ட ஞான­சார தேரர், முஸ்­லிம்­களை அந்தக் கண்­ணோட்­டத்தில் நோக்க வேண்­டி­ய­தில்லை என்று சொன்னார்.

‘முஸ்­லிம்கள் வியா­பா­ரத்தில் கெட்­டிக்­கா­ரர்­க­ளாக இருந்து வந்தால் அதில் உனக்கு என்ன பிரச்­சினை? நீயும் அவர்­க­ளுடன் போட்டி போட்டு வியா­பாரம் செய்து, முன்­னேறு’ என்று அவர் சிங்­கள மக்­களைப் பார்த்துச் சொல்­கிறார். அதே கையோடு “முடி­யு­மான அள­வுக்கு முஸ்­லிம்­க­ளுக்கு இணை­யான வேகத்தில் நீயும் அதிகம் பிள்­ளை­களைப் பெற்று, சிங்­கள இனத்தைப் பெருக்கு” என்ற அறி­வு­ரையை வழங்­கு­கிறார்.

இலங்­கைக்கு இஸ்லாம் விடுத்து வரு­வ­தாக கரு­தப்­படும் அச்­சு­றுத்­தலை முற்­றிலும் வேறு­பட்ட ஒரு கண்­ணோட்­டத்தில் அவர் பார்க்­கிறார். ‘பாரம்­ப­ரிய முஸ்­லிம்கள்’ என்ற பெயரில் அவர் அழைக்கும் முஸ்­லிம்­களின் ஒரு தரப்­பி­னரை சிங்­கள சமூகம் அர­வ­ணைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர்­களை மேலும் வலுப்­ப­டுத்த வேண்டும் என்றும் கேட்­டுக்­கொள்­கிறார்.

சிங்­க­ள­வர்­களைப் போலவே, பாரம்­ப­ரிய முஸ்­லிம்­களும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் என்ற பேரா­பத்தை எதிர்­கொண்­டி­ருக்­கின்­றார்கள் என்று வாதி­டு­கிறார். அத்­தோடு நின்­று­வி­டாது, அந்தப் பாரம்­ப­ரிய முஸ்­லிம்­களின் வேண்­டு­கோள்­க­ளை­ய­டுத்தே தான் இந்தப் பிரச்­சி­னையில் தலை­யி­டு­வ­தா­கவும் சொல்­கிறார்.

‘நாங்கள் மிகுந்த விழிப்­பு­ணர்­வுடன் செயற்­பா­டா­தி­ருந்தால் அடுத்து வரும் ஆண்­டு­களில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் என்ற பூதம் முழு நாட்­டையும் விழுங்கிக் கொள்ள முடியும்’ என்­பது அவ­ரு­டைய பரப்­பு­ரை­களின் சாராம்சம். அதன் ஊடா­கவே அவர் சிங்­கள மக்­களை தொடர்ந்து பயத்­திலும், பீதி­யிலும் வைத்­தி­ருக்க முயன்று வரு­கிறார்.
அவ­ரையும் அவ­ரு­டைய சக பய­ணி­க­ளையும் நிரா­க­ரிக்கும் விதத்­திலும், அவர்­க­ளு­டைய இர­க­சிய அஜென்­டாக்­களை அம்­ப­லப்­ப­டுத்தும் விதத்­திலும் சிங்­கள தரப்பில் சமூக ஊட­கங்­களில் பெரு­ம­ள­வுக்கு பரப்­பு­ரைகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­வது உண்மை. ஆனால், அவர்­களும் கூட, இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாதம் குறித்து ஞான­சார தேரர் முன்­வைத்து வரும் கருத்­துக்­களை மறுத்­து­ரைக்க தயங்­கு­கி­றார்கள்.

(அண்­மைய இரண்டு உதா­ர­ணங்கள் க்ரைஸ்ட் சேர்ச் மற்றும் சியால்கோட் சம்­ப­வங்கள்) ஊடக மொழியில் அவை ‘Isolated Incidents’ என்று வர்­ணிக்­கப்­ப­டு­பவை. அதா­வது, விரி­வான திட்­டங்­க­ளுடன் செயற்­படும் இர­க­சிய தீவி­ர­வாத இயக்­க­மொன்­றினால் மேற்­கொள்­ளப்­பட்ட ஒரு தாக்­கு­த­லாக / கொலை­யாக அல்­லாது, தனித்து செயற்­படும் ஒரு நபரால் / நபர்­க­ளினால் தன்­னெ­ழுச்­சி­யாக நிகழ்த்­தப்­படும் சம்­ப­வங்­களை குறிப்­ப­தற்கு அச்சொல் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஆனால், இலங்­கையில் இவற்­றுக்கு எதிர்­வி­னை­யாற்­றிய சிங்­களத் தரப்­புக்கள் அனைத்­துமே இத்­தாக்­கு­தல்­களை இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் பயங்­க­ர­வாதச் செயல்­க­ளாக சித்­த­ரிப்­ப­தற்கு முயன்­றுள்­ளன என்­ப­தனை இங்கு சுட்டிக் காட்­டுதல் வேண்டும்.

கடும் காழ்ப்­பு­ணர்ச்­சி­க­ளுடன் செயற்­பட்டு வரும் ஒரு சரா­சரி மத வெறியர் என முத்­திரை குத்தி, ஞான­சார தேரரை முற்­றிலும் நிரா­க­ரித்து விட முடி­யாது. அதற்குப் பதி­லாக, அவ­ருடன் ஓர் உரை­யா­டலை நடத்த வேண்­டி­யி­ருப்­ப­துடன், அந்த உரை­யா­டலின் போது அவ­ரிடம் முன்­வைக்க வேண்­டிய வாதங்­களை மிகவும் கவ­ன­மான விதத்தில் தொகுத்துக் கொள்­ளவும் வேண்டும்.

இந்தப் பின்­பு­லத்தில், ஞான­சார தேரரின் கிழக்கு மாகாண விஜ­யத்­திற்கு எதிர்ப்புத் தெரி­வித்து, அவரை முழு­வ­து­மாக பகிஷ்­க­ரிப்­பதன் மூலம் முஸ்­லிம்­க­ளுக்கு ஏதா­வது நல்­லது நடக்­கக்­கூ­டிய வாய்ப்பு இருந்து வரு­கின்­றதா என்ற கோணத்தில் தான் இந்தப் பிரச்­சி­னையை அணுக வேண்டும். அப்­படிப் பார்த்தால், அவரைச் சந்­திப்­பதன் மூலம் சொல்லிக் கொள்ளும் படி­யாக ஏதேனும் பிர­யோ­ச­னங்கள் ஏற்­ப­டா­விட்­டாலும், திட்­ட­மிட்டு அவ­ரு­டைய விஜ­யத்தை பகிஷ்­க­ரிப்­பதன் மூலம் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­புக்கள் அதி­க­மாக இருந்து வரும் என்­பதில் சந்­தே­க­மில்லை (ஞான­சார தேரர் போன்ற ஆளுமைப் பண்­பு­களை கொண்­டி­ருப்­ப­வர்கள் காரி­யங்­களை கெடுப்­பதில் – ஒரு எதிர்­மறை பாத்­தி­ரத்தை (Negative Role) வகிப்­பதில் – வல்­ல­வர்கள்).

கல்­மு­னை­யிலும், காத்­தான்­கு­டி­யிலும் இந்தச் சந்­திப்­புக்­களை நெறிப்­ப­டுத்­தி­ய­வர்கள் அநே­க­மாக இத்­த­கைய ஒரு கண்­ணோட்­டத்­தி­லேயே சிந்­தித்­தி­ருக்க முடியும்.
ஞான­சார தேர­ரு­ட­னான இந்தச் சந்­திப்பு இடம்­பெற்­றி­ருக்கும் அர­சியல் பின்­பு­லத்­தையும் இங்கு நாங்கள் கவ­னத்தில் வேண்டும். முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் முற்­றிலும் முடக்­கப்­பட்டு, அவற்றின் பேரம் பேசும் சக்தி பூச்­சிய நிலையில் இருந்து வரும் ஒரு சூழ்­நி­லை­யி­லேயே இந்த நகர்­வுகள் இடம்­பெற்று வரு­கின்­றன. எனவே, ஞான­சார தேரர் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் அர­சாங்­கத்­து­டனும், அவர் முன்­வைக்கும் கருத்­தி­ய­லு­டனும் (விரும்­பியோ, விரும்­பா­மலோ) ஓர் உரை­யா­டலை நடத்த வேண்­டிய தேவை கிழக்கு முஸ்­லிம்­க­ளுக்கு இப்­பொ­ழுது ஏற்­பட்­டி­ருக்­கி­றது. (அதே போல தென்­னி­லங்கை முஸ்­லிம்­களும் தமது தரப்­புக்­களை முன்­வைத்து, உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அவ­ரு­டைய செய­ல­ணி­யுடன் உரை­யா­டு­வது அவ­சியம்).

குறிப்­பாக, உயிர்த் ஞாயிறுத் தாக்­கு­தல்­களை அடுத்து நிலைமை தீவி­ர­ம­டைந்து, இஸ்­லா­மிய எதிர்ப்பு ஒரு பகி­ரங்க அச்­சு­றுத்­த­லாக மாறிய பொழுது, இஸ்­லா­மிய இயக்­கங்கள் முழு­வதும் ஆன்­மி­கத்தின் பக்கம் தங்கள் கவ­னத்தை திருப்பத் தொடங்­கின. ‘இந்தச் சோத­னை­க­ளி­லி­ருந்து மீண்டு வரு­வ­தற்­கான ஒரே­யொரு வழி மேலும் மேலும் அமல்­களை செய்­வது தான்’ என்று வெள்­ளிக்­கி­ழமை பிர­சங்­கங்­களில் சொல்லத் தொடங்­கி­னார்கள். (அதில் எந்தத் தவ­று­மில்லை). ஆனால், அதே நேரத்தில், லௌகீக யதார்த்­தங்­களை இந்த மண்ணில் நின்று தான் எதிர்­கொள்ள வேண்டும்; அதற்­கான வியூ­கங்­களை வகுக்க வேண்டும்; சமூ­கத்­திற்கு விழிப்­பு­ணர்­வூட்டி, அதற்கு தயார்­ப­டுத்த வேண்டும்; ஆனால், அத்­த­கைய காரி­யங்கள் எவையும் கடந்த இரண்டு ஆண்­டு­களில் இடம்­பெற்­றி­ருப்­ப­தாக தெரி­ய­வில்லை.

ராஜ­பக்­சாக்­க­ளையும் ஞான­சார தேரர் போன்­ற­வர்­க­ளையும் பழித்­து­ரைத்து, அவர்கள் மீது கடு­மை­யான சாபங்­களை இடு­வதில் எல்­லோரும் காலத்தைக் கழித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். எழுந்­த­மா­ன­மான விதத்தில் ஐந்து முஸ்­லிம்­களை சந்­தித்தால் அவர்­களில் நான்கு பேர் அந்த மன­நி­லையில் இருந்து வரு­வ­தையே பார்க்க முடி­கி­றது. ஆனால், இந்த நெருக்­க­டியை எதிர்­கொள்­வ­தற்கு எவ­ரி­டமும் சரி­யான ஒரு மாற்­று­வ­ழியோ, மாற்றுத் திட்­டமோ இருந்து வரு­வ­தாகத் தெரி­ய­வில்லை. அது குறித்து எவரும் கவ­லைப்­ப­டு­வ­தா­கவும் தெரி­ய­வில்லை.

ஞான­சார தேரர் போன்­ற­வர்­க­ளுடன் உரை­யாட வேண்­டிய அவ­சி­யத்தை எடுத்து வரும் மற்­றொரு காரணி இலங்­கையின் இன்­றைய அர­சியல் கள யதார்த்தம்; முஸ்­லிம்கள் இந்த நெருக்­க­டியை வெறு­மனே ‘கொடிய ராஜ­பக்ச ஆட்சி எதிர் சிறு­பான்­மை­யினர்’ என்ற இரு­மைக்குள் சுருக்கி, நோக்க முடி­யாது என்ற யதார்த்தம்; 2024 / 2025 தேர்­தல்­களை அடுத்து ராஜ­பக்­சாகள் இல்­லாத ஓர் ஆட்சி வந்­தாலும் கூட, இந்த நெருக்­கடி தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற யதார்த்தம்; ராஜ­பக்­சாக்கள் இல்­லாத ஓர் அர­சாங்­கத்­திற்­கூ­டாக கரை­யோர அம்­பாறை மாவட்டம் உள்­ளிட்ட தமது எந்­த­வொரு முதன்­மை­யான கோரிக்­கை­யையும் கிழக்கு முஸ்­லிம்­களால் நிறை­வேற்றிக் கொள்ள முடி­யாது போகும் என்ற யதார்த்தம்.

அதிகம் பேர் நினைத்துக் கொண்­டி­ருக்கும் விதத்தில், ராஜ­பக்ச எதிர்ப்புப் புள்­ள­டி­யினால் மட்டும் எல்லாப் பிரச்­சி­னை­களும் ஒரே­ய­டி­யாக தீர்ந்து விடப் போவ­தில்லை. கோத்­தா­பய ராஜ­பக்­ச­வினால் தீர்த்து வைக்க முடியாத முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினையையும், சஜித் பிரேமதாசவோ அல்லது வேறு ஒரு சிங்களத் தலைவரோ தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

எல்­லோரும் இன­வா­தி­யா­கவும், மத­வா­தி­யா­கவும் சிந்­திக்கப் பழ­கி­யி­ருக்கும் ஒரு சமு­தா­யத்தில் ஒருவர் மற்­ற­வரை நோக்கி விரல் நீட்­டு­வதில் எந்தப் பிர­யோ­ச­னமும் இல்லை. சாதா­ரண மக்­க­ளுக்கு மத்­தியில் ஒரு வித­மான மத­வாத சிந்­த­னையை, பல்­லின, பல் கலா­சார நாடு ஒன்­றுக்கு எவ்­வி­தத்­திலும் பொருத்­த­மில்­லாத ஒரு சிந்­த­னையை ஊட்டி வளர்த்து, ஒட்­டு­மொத்த சமூ­கத்­தையும் ஒரு மாபெரும் நெருக்­க­டிக்குள் தள்­ளி­விட்­ட­வர்கள் இப்­பொ­ழுது ஒதுங்கி நின்று ‘பிரச்­சினை இல்லை, அதிகம் அதிகம் அமல்­களை செய்து இந்தச் சோதனைகளிலிருந்து மீண்டு வருவோம்’ என்கிறார்கள்.

ஆனால், கல்­மு­னை­யிலும், காத்­தான்­கு­டி­யிலும் ஞான­சார தேர­ரு­ட­னான சந்­திப்­புக்­களை ஒருங்­கி­ணைப்புச் செய்­வதில் பங்­கேற்ற சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் (ஆன்­மிக ரீதி­யி­லான அம்­சங்­க­ளுடன் சேர்த்து) லௌகீக ரீதி­யி­லான சில பிரச்­சி­னைகள் குறித்தும் சிந்­தித்­தி­ருப்­ப­தாக தெரி­கி­றது. அடுத்து வர­வி­ருக்கும் தலை­மு­றை­யினர் குறித்து கரி­சனை கொண்டு, சமூக இயங்­கி­யலை துல்­லி­ய­மாக அடை­யாளம் கண்டு, அதற்கு எதிர்­வி­னை­யாற்­றி­யி­ருப்­ப­தாகத் தெரி­கி­றது.

நிதான புத்­தி­யையும், ‘பொது மந்­தைக்கு’ வெளியில் நின்று, எவரும் பார்க்­காத ஒரு கோணத்தில் பிரச்­சி­னை­களை அணுகும் திற­னையும் கொண்­டி­ருக்கும் அத்தகைய சமூக செயற்பாட்டாளர்கள் மேலும் மேலும் எமக்குத் தேவை.

ராஜ­பக்­சாக்­க­ளையும் ஞான­சார தேரர் போன்­ற­வர்­க­ளையும் பழித்­து­ரைத்து, அவர்கள் மீது கடு­மை­யான சாபங்­களை இடு­வதில் எல்­லோரும் காலத்தைக் கழித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். எழுந்­த­மா­ன­மான விதத்தில் ஐந்து முஸ்­லிம்­களை சந்­தித்தால் அவர்­களில் நான்கு பேர் அந்த மன­நி­லையில் இருந்து வரு­வ­தையே பார்க்க முடி­கி­றது. ஆனால், இந்த நெருக்­க­டியை எதிர்­கொள்­வ­தற்கு எவ­ரி­டமும் சரி­யான ஒரு மாற்­று­வ­ழியோ, மாற்றுத் திட்­டமோ இருந்து வரு­வ­தாகத் தெரி­ய­வில்லை. அது குறித்து எவரும் கவ­லைப்­ப­டு­வ­தா­கவும் தெரி­ய­வில்லை.

ஞான­சார தேரர் போன்­ற­வர்­க­ளுடன் உரை­யாட வேண்­டிய அவ­சி­யத்தை எடுத்து வரும் மற்­றொரு காரணி இலங்­கையின் இன்­றைய அர­சியல் கள யதார்த்தம்; முஸ்­லிம்கள் இந்த நெருக்­க­டியை வெறு­மனே ‘கொடிய ராஜ­பக்ச ஆட்சி எதிர் சிறு­பான்­மை­யினர்’ என்ற இரு­மைக்குள் சுருக்கி, நோக்க முடி­யாது என்ற யதார்த்தம்; 2024 / 2025 தேர்­தல்­களை அடுத்து ராஜ­பக்­சாகள் இல்­லாத ஓர் ஆட்சி வந்­தாலும் கூட, இந்த நெருக்­கடி தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற யதார்த்தம்; ராஜ­பக்­சாக்கள் இல்­லாத ஓர் அர­சாங்­கத்­திற்­கூ­டாக கரை­யோர அம்­பாறை மாவட்டம் உள்­ளிட்ட தமது எந்­த­வொரு முதன்­மை­யான கோரிக்­கை­யையும் கிழக்கு முஸ்­லிம்­களால் நிறை­வேற்றிக் கொள்ள முடி­யாது போகும் என்ற யதார்த்தம்.

அதிகம் பேர் நினைத்துக் கொண்­டி­ருக்கும் விதத்தில், ராஜ­பக்ச எதிர்ப்புப் புள்­ள­டி­யினால் மட்டும் எல்லாப் பிரச்­சி­னை­களும் ஒரே­ய­டி­யாக தீர்ந்து விடப் போவ­தில்லை. கோத்­தா­பய ராஜ­பக்­ச­வினால் தீர்த்து வைக்க முடியாத முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினையையும், சஜித் பிரேமதாசவோ அல்லது வேறு ஒரு சிங்களத் தலைவரோ தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

எல்­லோரும் இன­வா­தி­யா­கவும், மத­வா­தி­யா­கவும் சிந்­திக்கப் பழ­கி­யி­ருக்கும் ஒரு சமு­தா­யத்தில் ஒருவர் மற்­ற­வரை நோக்கி விரல் நீட்­டு­வதில் எந்தப் பிர­யோ­ச­னமும் இல்லை. சாதா­ரண மக்­க­ளுக்கு மத்­தியில் ஒரு வித­மான மத­வாத சிந்­த­னையை, பல்­லின, பல் கலா­சார நாடு ஒன்­றுக்கு எவ்­வி­தத்­திலும் பொருத்­த­மில்­லாத ஒரு சிந்­த­னையை ஊட்டி வளர்த்து, ஒட்­டு­மொத்த சமூ­கத்­தையும் ஒரு மாபெரும் நெருக்­க­டிக்குள் தள்­ளி­விட்­ட­வர்கள் இப்­பொ­ழுது ஒதுங்கி நின்று ‘பிரச்­சினை இல்லை, அதிகம் அதிகம் அமல்­களை செய்து இந்தச் சோதனைகளிலிருந்து மீண்டு வருவோம்’ என்கிறார்கள்.

ஒருங்­கி­ணைப்புச் செய்­வதில் பங்­கேற்ற சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் (ஆன்­மிக ரீதி­யி­லான அம்­சங்­க­ளுடன் சேர்த்து) லௌகீக ரீதி­யி­லான சில பிரச்­சி­னைகள் குறித்தும் சிந்­தித்­தி­ருப்­ப­தாக தெரி­கி­றது. அடுத்து வர­வி­ருக்கும் தலை­மு­றை­யினர் குறித்து கரி­சனை கொண்டு, சமூக இயங்­கி­யலை துல்­லி­ய­மாக அடை­யாளம் கண்டு, அதற்கு எதிர்­வி­னை­யாற்­றி­யி­ருப்­ப­தாகத் தெரி­கி­றது.

நிதான புத்­தி­யையும், ‘பொது மந்­தைக்கு’ வெளியில் நின்று, எவரும் பார்க்­காத ஒரு கோணத்தில் பிரச்­சி­னை­களை அணுகும் திற­னையும் கொண்­டி­ருக்கும் அத்தகைய சமூக செயற்பாட்டாளர்கள் மேலும் மேலும் எமக்குத் தேவை.-ராஜ­பக்­சாக்­க­ளையும் ஞான­சார தேரர் போன்­ற­வர்­க­ளையும் பழித்­து­ரைத்து, அவர்கள் மீது கடு­மை­யான சாபங்­களை இடு­வதில் எல்­லோரும் காலத்தைக் கழித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். எழுந்­த­மா­ன­மான விதத்தில் ஐந்து முஸ்­லிம்­களை சந்­தித்தால் அவர்­களில் நான்கு பேர் அந்த மன­நி­லையில் இருந்து வரு­வ­தையே பார்க்க முடி­கி­றது. ஆனால், இந்த நெருக்­க­டியை எதிர்­கொள்­வ­தற்கு எவ­ரி­டமும் சரி­யான ஒரு மாற்­று­வ­ழியோ, மாற்றுத் திட்­டமோ இருந்து வரு­வ­தாகத் தெரி­ய­வில்லை. அது குறித்து எவரும் கவ­லைப்­ப­டு­வ­தா­கவும் தெரி­ய­வில்லை.

ஞான­சார தேரர் போன்­ற­வர்­க­ளுடன் உரை­யாட வேண்­டிய அவ­சி­யத்தை எடுத்து வரும் மற்­றொரு காரணி இலங்­கையின் இன்­றைய அர­சியல் கள யதார்த்தம்; முஸ்­லிம்கள் இந்த நெருக்­க­டியை வெறு­மனே ‘கொடிய ராஜ­பக்ச ஆட்சி எதிர் சிறு­பான்­மை­யினர்’ என்ற இரு­மைக்குள் சுருக்கி, நோக்க முடி­யாது என்ற யதார்த்தம்; 2024 / 2025 தேர்­தல்­களை அடுத்து ராஜ­பக்­சாகள் இல்­லாத ஓர் ஆட்சி வந்­தாலும் கூட, இந்த நெருக்­கடி தொடர்ந்து நீடிக்க முடியும் என்ற யதார்த்தம்; ராஜ­பக்­சாக்கள் இல்­லாத ஓர் அர­சாங்­கத்­திற்­கூ­டாக கரை­யோர அம்­பாறை மாவட்டம் உள்­ளிட்ட தமது எந்­த­வொரு முதன்­மை­யான கோரிக்­கை­யையும் கிழக்கு முஸ்­லிம்­களால் நிறை­வேற்றிக் கொள்ள முடி­யாது போகும் என்ற யதார்த்தம்.

அதிகம் பேர் நினைத்துக் கொண்­டி­ருக்கும் விதத்தில், ராஜ­பக்ச எதிர்ப்புப் புள்­ள­டி­யினால் மட்டும் எல்லாப் பிரச்­சி­னை­களும் ஒரே­ய­டி­யாக தீர்ந்து விடப் போவ­தில்லை. கோத்­தா­பய ராஜ­பக்­ச­வினால் தீர்த்து வைக்க முடியாத முஸ்லிம்களின் எந்தவொரு பிரச்சினையையும், சஜித் பிரேமதாசவோ அல்லது வேறு ஒரு சிங்களத் தலைவரோ தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

எல்­லோரும் இன­வா­தி­யா­கவும், மத­வா­தி­யா­கவும் சிந்­திக்கப் பழ­கி­யி­ருக்கும் ஒரு சமு­தா­யத்தில் ஒருவர் மற்­ற­வரை நோக்கி விரல் நீட்­டு­வதில் எந்தப் பிர­யோ­ச­னமும் இல்லை. சாதா­ரண மக்­க­ளுக்கு மத்­தியில் ஒரு வித­மான மத­வாத சிந்­த­னையை, பல்­லின, பல் கலா­சார நாடு ஒன்­றுக்கு எவ்­வி­தத்­திலும் பொருத்­த­மில்­லாத ஒரு சிந்­த­னையை ஊட்டி வளர்த்து, ஒட்­டு­மொத்த சமூ­கத்­தையும் ஒரு மாபெரும் நெருக்­க­டிக்குள் தள்­ளி­விட்­ட­வர்கள் இப்­பொ­ழுது ஒதுங்கி நின்று ‘பிரச்­சினை இல்லை, அதிகம் அதிகம் அமல்­களை செய்து இந்தச் சோதனைகளிலிருந்து மீண்டு வருவோம்’ என்கிறார்கள்.

ஆனால், கல்­மு­னை­யிலும், காத்­தான்­கு­டி­யிலும் ஞான­சார தேர­ரு­ட­னான சந்­திப்­புக்­களை ஒருங்­கி­ணைப்புச் செய்­வதில் பங்­கேற்ற சிவில் சமூக செயற்­பாட்­டா­ளர்கள் (ஆன்­மிக ரீதி­யி­லான அம்­சங்­க­ளுடன் சேர்த்து) லௌகீக ரீதி­யி­லான சில பிரச்­சி­னைகள் குறித்தும் சிந்­தித்­தி­ருப்­ப­தாக தெரி­கி­றது. அடுத்து வர­வி­ருக்கும் தலை­மு­றை­யினர் குறித்து கரி­சனை கொண்டு, சமூக இயங்­கி­யலை துல்­லி­ய­மாக அடை­யாளம் கண்டு, அதற்கு எதிர்­வி­னை­யாற்­றி­யி­ருப்­ப­தாகத் தெரி­கி­றது.

நிதான புத்­தி­யையும், ‘பொது மந்­தைக்கு’ வெளியில் நின்று, எவரும் பார்க்­காத ஒரு கோணத்தில் பிரச்­சி­னை­களை அணுகும் திற­னையும் கொண்­டி­ருக்கும் அத்தகைய சமூக செயற்பாட்டாளர்கள் மேலும் மேலும் எமக்குத் தேவை.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.