விற்றுத் தீர்க்கப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் நிர்க்கதியான முஸ்லிம்களும்

0 340

லத்தீப் பாரூக்

முஸ்லிம் காங்­கிரஸ் போன்ற பெயர் கொண்ட கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளிப்­பதை இனிமேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என சகல தரப்­புக்­க­ளையும் சேர்ந்த முஸ்­லிம்கள் தற்­போது உணரத் தொடங்கி உள்­ளனர். அதேபோல் அகில இலங்கை ஜம்­ மிய்­யத்துல் உலமா என்ற சமய ரீதி­யான அமைப்பும் இஸ்­லாத்தை விட்டுக் கொடுக்­காத வகையில் மாற்றி அமைக்­கப்­பட வேண்டும் என்­ப­தையும் முஸ்­லிம்கள் வலி­யு­றுத்தத் தொடங்கி உள்­ளனர்.

உயிர்த்த ஞாயிறு படு­கொலைத் தாக்­கு­தலின் பின்­ன­ணியில் இருக்­கின்ற உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரி­களைக் கண்­டு­பி­டித்து சட்­டத்தின் முன் நிறுத்தி அவர்­களைத் தண்­டிக்க வேண்டும் என்ற நியா­ய­மான கோரிக்­கையை முன்­வைத்துப் போராடி வரும் கர்­தினால் மல்கம் ரஞ்­சித்­துடன் இணைந்து அவ­ரது கரங்­களை வலுப்­ப­டுத்த வேண்டும் என்ற தேவை­யையும் முஸ்­லிம்கள் தற்­போது வலி­யு­றுத்தத் தொடங்கி உள்­ளனர். இதன் மூலம் தான் முஸ்லிம் சமூகம் குற்­ற­மற்­றது என்­பதை உல­குக்கு நிரூ­பித்துக் காட்ட முடியும் என்­ப­தையும் முஸ்­லிம்கள் தற்­போது உணர்ந்­துள்­ளனர்.

உயிர்த்த ஞாயிறு கோரச் சம்­ப­வத்தின் உண்­மை­யான சூத்­தி­ர­தா­ரி­க­ளுக்கு, முஸ்­லிம்­க­ளையும் கிறிஸ்­த­வர்­க­ளையும் மோத­விட்டு அவர்கள் ஒரு­வரை ஒருவர் கொலை செய்­வதைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற தேவையும் ஆசையும் இருந்­தது என்­பதே இன்று பலரும் உணர்ந்­துள்ள ஒரு விட­ய­மாகும். ஆனால் அத்­த­கைய ஒரு அழிவு வராமல் தடுத்­தவர் கர்­தினால் மல்கம் ரஞ்சித் தான் என்­பதை நாம் மறந்து விடக் கூடாது. இது முஸ்லிம் சமூ­கத்தைச் சேர்ந்த ஒரு சில தனி­ந­பர்­களால் நடத்­தப்­பட்ட தாக்­கு­தலே தவிர முஸ்லிம் சமூ­கத்­துக்கும் இந்தத் தாக்­குதல் சம்­ப­வத்­துக்கும் எந்த தொடர்பும் கிடை­யாது என அவர் சரி­யான சந்­தர்ப்­பத்தில் துணிச்­ச­லோடும் நிதா­னத்­தோடும் தமது மக்கள் மத்­தியில் விடுத்த அறி­விப்பு, சந்­தர்ப்­ப­வா­திகள் எதிர்­பார்த்­தி­ருந்த ஒரு பாரிய மோதலைத் தவிர்த்­தது என்றால் அது மிகை­யா­காது.

1948 இல் இலங்கை சுதந்­திரம் அடைந்த காலப்­ப­கு­தியில் ஒட்டு மொத்த மூன்றாம் உலக நாடு­க­ளுக்கும் அர­சியல் மற்றும் பொரு­ளா­தார ஸ்திரப்­பாடு மற்றும் இன நல்­லி­ணக்கம் என்­ப­ன­வற்­றுக்கு ஒரு மின்னும் முன்­னு­தா­ர­ண­மாகத் திகழ்ந்­தது. ஆனால் இன்று அது உல­கி­லேயே மிக மோச­மாக முகா­மைத்­துவம் செய்­யப்­பட்ட ஊழல்கள் மலிந்து போன பொரு­ளா­தார ரீதி­யாக உருக்­கு­லைந்த வங்­கு­ரோத்தின் விளிம்பு நிலைக்கு வந்­துள்ள தேச­மாக மாறி­யுள்­ளது. 1948 முதல் தலை­வி­ரித்­தா­டிய இன­வாத அர­சியல் தான் இன்­றைய இழி நிலைக்கு பிர­தான கார­ண­மாகும்.

இன­வாத யுத்­தத்தின் பின் முஸ்­லிம்கள் ஆட்­சியில் இருந்த அரசை முழு­மை­யாக ஆத­ரித்­தனர். யுத்­தத்தின் மூலம் உரிய பாடங்­களை அரசு கற்றுக் கொள்ளும் என அவர்கள் எதிர்­பார்த்­தனர். இனங்­களை அர­வ­ணைத்துக் கொண்ட பொது­வான நல்ல விட­யங்­களை நோக்கி இந்த நாடு நடை­போடும் என அவர்கள் எதிர்­பார்த்­தனர். ஆனால் அரசு எந்தப் பாடத்­தையும் கற்றுக் கொள்­ள­வில்லை. மாறாக இன­வாத அர­சியல் கொள்கை முஸ்­லிம்­களை இலக்கு வைக்கத் தொடங்­கி­யது. அதற்கு சாத­க­மாக இந்­தி­யாவில் இன­வா­தத்தில் ஊறிப்­போன பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராகப் பிர­மாணம் செய்து கொண்­டுள்ள இஸ்ரேல் என்­ப­ன­வற்­றுக்கு அர­சாங்கம் நாட்டின் கத­வு­களை தாரா­ள­மாகத் திறந்து விட்­டது.

இலங்கை என்ற தேசத்தைப் பற்றி இந்த சக்­தி­க­ளுக்கு எந்த வித­மான கரி­ச­னையோ அக்­க­றையோ கிடை­யாது. அவர்­க­ளது ஒரே தீய இலக்கு முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாதம் தான்.

அளுத்­கமை, தர்கா நகர், பேரு­வளை ஆகிய இடங்கள் உட்­பட இன்னும் பல இடங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான ஆத்­தி­ர­மூட்டல் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. அங்­கெல்லாம் முஸ்­லிம்­களின் சொத்­துக்கள் உட்­பட பள்­ளி­வா­சல்­களும் தாக்­கப்­பட்­டன. சில இடங்­களில் முஸ்­லிம்­களின் புனித வேத­நூ­லான அல்­குர்­ஆ­னையும் எரித்து அதன் மேல் சிறுநீர் கழித்த சம்­ப­வங்­களும் பதி­வா­கி­யுள்­ளன. இவற்றில் சம்­பந்­தப்­பட்ட எவ­ருமே இது­வரை சட்­டத்தின் முன் நிறுத்­தப்­ப­ட­வில்லை.

மைத்­தி­ரி-­ ரணில் ஆட்­சி­யிலும் கூட முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இந்த இன­வாத ஆத்­தி­ர­மூட்­டல்கள் தொடர்ந்­தன. இந்தச் சம்­ப­வங்­களின் உச்ச கட்ட விளை­வுதான் உயிர்த்த ஞாயிறு படு­கொ­லைகள். ஒரு சமூகம் என்ற ரீதியில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு இந்தச் சம்­ப­வத்­தோடு எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் இன­வா­தி­களின் திட்­ட­மிடல் படி அவர்­களின் வன்­முறைத் தாக்­கு­தல்­க­ளுக்கு முழு சமூ­கமும் முகம் கொடுக்க வேண்­டி­ய­தா­யிற்று. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வெறித்­த­னமும் வன்­மு­றை­களும் தொடர்ந்­தன.

இந்த இன­வாத பிர­சா­ரங்­களின் தொட­ரா­கவே ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான பௌத்த அரசு பத­விக்கு வந்­தது. 2019 ஆகஸ்ட்டில் இடம்­பெற்ற ஜனா­தி­பதித் தேர்­தலில் சுமார் 69 இலட்சம் மக்கள் அவ­ருக்கு வாக்­க­ளித்­தனர். அன்று முதல் இன்று வரை இந்த அரசும் முஸ்­லிம்­க­ளுக்கு பொது­வாக பாதக நிலையை உரு­வாக்கும் பல நட­வ­டிக்­கை­களை அறி­முகம் செய்­துள்­ளனர்.

இவற்றின் நடுவே அலி சப்ரி என்ற ஒரு முஸ்லிம் சட்­டத்­த­ர­ணியை அர­சாங்கம் நீதி அமைச்­ச­ராக நிய­மித்­தது. இந்த நாட்டில் ஜன­நா­ய­கத்தை செய­லி­ழக்கச் செய்து சிங்­கள பௌத்த சர்­வா­தி­கா­ரத்­துக்கு வழி­ய­மைக்கும் அர­சியல் யாப்பின் 20 ஆவது திருத்­தத்தை அவர்தான் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பித்தார். பாரா­ளு­மன்­றத்தில் உள்ள ஏனைய பல முஸ்லிம் பிர­தி­நி­தி­களின் ஆத­ர­வோடு இந்த திருத்தம் அமோ­க­மாக நிறை­வேற்­றப்­பட்­டது. 20 ஆவது திருத்­தத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­ததன் மூலம் இந்த முஸ்லிம் பிர­தி­நி­திகள் தம்மை ஏமாற்றி தாம் சார்ந்த சமூ­கத்­துக்கு துரோகம் இழைத்து விட்­டார்கள் என்­பதே மக்­களின் பொது­வான நிலைப்­பா­டாகும்.

அலி சப்ரி என்ற முஸ்லிம் சட்­டத்­த­ர­ணியைப் பயன்­ப­டுத்தி அர­சாங்கம் பௌத்த சர்­வா­தி­கா­ரத்­துக்கு வழி­வ­குக்கும் 20ஆவது திருத்­தத்தை தந்­தி­ர­மாக நிறை­வேற்றிக் கொண்­டது.

இந்தப் பிரச்­சி­னைகள் எல்லாம் ஒரு புறம் இருக்க அண்­மையில் தெஹி­வளை பள்­ளி­வா­ச­லுக்குள் பிர­தம மந்­திரி மகிந்த ராஜ­ப­க்ஷவின் பிறந்த தினத்தை நினைவு கூறும் வகையில் இடம்­பெற்ற ஒரு வைப­வத்தில் அலி சப்ரி உரை­யாற்றி உள்ளார்.

பள்­ளி­வா­சல்கள் அர­சியல் நோக்­கங்­க­ளுக்கு உரி­ய­தல்ல என்ற வகையில் இந்­நி­கழ்வு பல முஸ்­லிம்­களை அதிர்ச்­சிக்­குள்­ளாக்கி உள்­ளது. ஒரு­வ­ருக்கு தான் விரும்பும் எந்­த­வொரு அர­சி­யல்­வா­தி­யையும் ஆத­ரிக்கும் உரிமை உள்­ளது. ஆனால் தமது அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக இறை­வனின் புனித இல்­ல­மான பள்­ளி­வா­சல்­களை பாவிப்­பதும் அர­சி­யல்­வா­தி­களைப் புகழும் பதா­தை­க­ளையும் ஏனைய அறி­விப்­புக்­க­ளையும் பள்­ளி­வா­சல்­க­ளுக்குள் காட்­சிப்­ப­டுத்­து­வ­தையும் யாரும் அனு­ம­திக்க முடி­யாது. அனு­ம­திக்­கவும் கூடாது. இவை வன்­மை­யாகக் கண்­டிக்­கப்­பட வேண்­டிய விட­யங்கள். இந்த சம்­பவம் கார­ண­மாக உலமா சபையும் அதன் சர்ச்­சைக்­கு­ரிய தலை­மைத்­து­வமும் மீண்டும் ஒரு தடவை சமூக மற்றும் இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் வாயி­லாக கண்­ட­னத்­துக்கு ஆளாகி உள்­ளன.

இது சம்­பந்­த­மாக மௌலவி இம்­தியாஸ் யூசுப் வெளி­யிட்­டுள்ள ஒரு விஷேட காணொ­ளியில் ஊழல், குற்­றச்­செ­யல்கள், நீதி­யற்ற நிலைமை என்­பன தலை­வி­ரித்­தாடும் அர­சியல் நோக்­கங்­க­ளுக்­காக பள்­ளி­வா­சல்­களைப் பயன்­ப­டுத்­து­வதை அவர் வன்­மை­யாகக் கண்­டித்­துள்ளார்.

அந்தச் சம்­பவம் பள்­ளி­வா­ச­லுக்குள் அர­சியல் பதா­தை­க­ளோடு நடந்­துள்­ளது. நாம் வாழும் இதே பிர­பஞ்­சத்தில் தான் அமைச்சர் அலி சப்­ரியும் வாழு­கின்றார் எனின், 2009 மே மாதம் யுத்தம் முடி­வ­டைந்த பின்னர் இந்த நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை அவர் நன்கு அறிந்­தி­ருக்க வேண்டும்.

சர்ச்­சைக்­கு­ரிய சில முஸ்லிம் வியா­பா­ரி­களும் அதே அளவு சர்ச்­சைக்­கு­ரிய உலமா சபை தலை­வரும் இணைந்து பள்­ளி­வா­ச­லுக்குள் இவ்­வா­றான நிகழ்­வு­களை நடத்­தி­யமை இது முதற் தடவை அல்ல. ஏற்­க­னவே ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­ப­க்ஷவின் முதலாம் ஆண்டு பதவி நிறைவை முன்­னிட்டு ஒரு வைபவம் கொள்­ளு­பிட்டி ஜும்ஆ பள்­ளி­வா­ச­லிலும் இடம்­பெற்­றுள்­ளது.

இவ்­வா­றான நிகழ்­வு­களை முஸ்லிம் அல்­லா­த­வர்­களும் நன்கு அவ­தா­னித்து வரு­கின்­றனர். அண்­மையில் ஒரு பௌத்த பிக்கு இவ்­வா­றான ஒரு நிகழ்வைக் குறிப்­பிட்டு வெளி­யிட்­டுள்ள காணொ­ளியில் அது எந்த வகை­யிலும் இஸ்­லா­மிய போத­னை­க­ளோடு தொடர்­பு­டைய ஒன்­றல்ல என்­பதை தாங்கள் அறிந்து வைத்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ளார்.
சுமார் 22 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஓரங்க நாடகம் நடத்திக் கொண்­டி­ருக்கும் உலமா சபை செய்யும் பணி இது­தானா? தவ­று­க­ளுக்கு மேல் தவ­றுகள், குழப்­பங்­க­ளுக்கு மேல் குழப்­பங்கள், சர்ச்­சைக்கு மேல் சர்ச்­சைகள் என பணி­யாற்றும் உலமா சபை இன்று வரை சரி­யான இஸ்­லா­மிய கருத்­துக்­க­ளையும், சிந்­த­னை­க­ளையும், பாடங்­க­ளையும் இந்த நாட்டின் ஏனைய சமூ­கங்­க­ளுக்கு வழங்கத் தவறி வந்­துள்­ளது.

பூகோள ரீதி­யாக இஸ்­லா­மோ­போ­பியா சக்­திகள் வலு­வ­டைந்து வரு­கின்ற நிலையில், அவை முஸ்லிம் நாடு­களை ஆக்­கி­ர­மித்து வரு­கின்ற நிலையில், மில்­லியன் கணக்­கான அப்­பாவி முஸ்­லிம்­களைக் கொன்று குவித்து வரு­கின்ற நிலையில், அவர்­களின் தீய நிகழ்ச்சி நிரலை நிறை­வேற்றும் வகையில் இன்னும் மில்­லியன் கணக்­கான முஸ்­லிம்­களை அகதி முகாம்­க­ளுக்குள் அடக்கி வைத்­துள்ள நிலையில் இவற்­றுக்கு முகம் கொடுக்கும் வகை­யி­லான மாற்­றங்கள் தேவைப்­ப­டு­கின்­றன. இதே சக்­திகள் இந்த நாட்­டிலும் இன­வாத ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்தி சிங்­கள மக்­களின் உள்­ளங்­களில் நச்சு விதை­களை தூவும் முயற்­சி­களை ஏற்­க­னவே அமுல் செய்து வரு­கின்­றன.

ஆனால் இன்­றைய நிலையில் அதிர்ஷ்­ட­வ­ச­மாக நாம் கடந்து செல்லும் ஒவ்­வொரு நாட்­களும் இந்த நாட்டில் முஸ்லிம் சமூ­கத்­துக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திகள், அவ­மா­னங்கள், பாதிப்­புக்கள் என்­ப­ன­வற்றை சிங்­கள மக்­களில் பலரும் அவர்­களின் சமயத் தலை­வர்­களும் நன்கு உணர்ந்து கொள்ளும் நாட்­க­ளா­கவே கடக்­கின்­றன.

இவ்­வா­றான ஒரு சாத­க­மான பின்­ன­ணியில் முஸ்லிம் சமூகம் அதன் தலை­யெ­ழுத்தை தீர்­மா­னிக்கும் பொறுப்பை ஊழலும் வஞ்­ச­கமும் மிக்க அர­சி­யல்­வா­தி­க­ளி­டமோ அல்­லது அவர்­க­ளுக்கு நிக­ரான சமயத் தலை­மை­க­ளி­டமோ ஒப்­ப­டைத்து விட்டு, அவர்கள் அதில் சுக­போகம் அனு­ப­விப்­பதை கைகட்டி வேடிக்கை பார்க்க முடி­யாது.

தேசிய கட்­சிகள் ஊடாக அங்கம் வகிக்கும் முஸ்லிம் பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­க­ளான முஜிபுர் றஹ்மான், மரிக்கார், இம்­தியாஸ் பாக்கீர் மாக்கார், கபீர் ஹாஷிம், இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் தம்மால் முடிந்­த­ளவு பணி­யாற்றி வரு­கின்­றனர். இவர்­க­ளோடு முஸ்லிம் சமூகம் கைகோர்க்க வேண்­டிய நேரம் வந்து விட்­டது. இஸ்­லாமே இல்­லாத, முஸ்லிம் சமூ­கத்தின் நம்­பிக்­கையை இழந்த முஸ்லிம் கட்­சி­க­ளி­னதும் அவற்றின் தலை­மைத்­து­வங்­க­ளிடம் இருந்தும் அவற்றின் பிர­தி­நி­தி­க­ளிடம் இருந்தும் முஸ்­லிம்கள் தம்மை விடு­வித்துக் கொள்ள வேண்­டிய காலம் வந்து விட்­டது.

அதேபோல் உறக்க நிலையில் இருக்கும் சிவில் சமூக அமைப்புக்களும் விழித்துக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. நிலைமைகளை சீராக்கும் ஒழுங்குகளை மேற்கொள்ளும் பணியில் அவர்கள் இந்த நாடு சிங்கள, தமிழ், முஸ்லிம் என எல்லோருக்கும் சொந்தமானது என்ற எண்ணக்கருவோடு செயற்படும் பெரும்பான்மை அமைப்புக்களோடு கைகோர்த்து செயற்பட வேண்டிய காலம் வந்து விட்டது.

இந்தத் தீவகத்தில் சுமார் 1200 வருடங்களுக்கு மேலாக முஸ்லிம்கள் வாழ்ந்து வருகின்றனர். இனவாதம் அற்ற சிங்கள மன்னர்கள் தலைமையில் இந்த நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு துறைகளில் அவர்கள் தமது பங்களிப்புக்களை வழங்கி உள்ளனர். சுதந்திரத்துக்குப் பிறகு பதவிக்கு வந்த இனவாத அரசுகள் முஸ்லிம்களின் உரிமைகளையும் இருப்பையும் மறுத்தாலும் கூட முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் தனியானதோர் வரலாறு உள்ளது என்பதே யதார்த்தமாகும்.

முஸ்­லிம்கள் அனு­ப­வித்த துன்­பங்­களும் செய்த தியா­கங்­களும் இல்­லா­விட்டால் இன்று இலங்கை ஒரே நாடாக இருந்­தி­ருக்க முடி­யாது என்ற உண்மை நிலையை இன­வாத சக்­திகள் உணர மறந்­துள்­ளமை வேதனை மிக்கதாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.