சட்டரீதியான பாதுகாப்பிலிருந்து கடத்தி துஷ்பிரயோகம்: விசாரணைக்காக பொலிஸ் நிலையம் சென்ற 15 வயது சிறுமிக்கு கருத்தரிப்பு பரிசோதனை

மாத்தறை பொலிஸாருக்கு எதிராக சிறப்பு விசாரணைகள் ஆரம்பம்

0 286

(எம்.எப்.எம்.பஸீர்)
15 வயது சிறுமி ஒரு­வரை அவ­ரது சட்ட ரீதி­யி­லான பாது­காப்­பி­லி­ருந்து கடத்தி துஷ்­பி­ர­யோகம் செய்­தமை தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுக்­காக, பாதிக்­கப்­பட்ட குறித்த சிறுமி மாத்­தறை பொலிஸ் நிலை­யத்தின் சிறுவர் மற்றும் மகளிர் விசா­ரணைப் பிரி­வுக்கு வந்த போது அவ­ருக்கு அங்கு கருத்­த­ரிப்பு தொடர்­பி­லான பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுத்­த­தாக கூறப்­படும் சம்­பவம் ஒன்று தொடர்பில் விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு மோச­மாக நடந்­து­கொண்ட பொலி­சா­ருக்கு எதி­ராக பி.சி.ஏ.டப்­ளியூ.பி.பீ. எனப்­படும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பாது­காப்பு பணி­ய­கத்தின் பணிப்­பா­ளரின் நேரடி கட்­டுப்­பாட்டில் இந்த விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி நிஹால் தல்­துவ ‘விடி­வெள்­ளி­யிடம் ‘ தெரி­வித்தார்.

அத்­துடன் அந்த சிறு­மியை சட்ட ரீதி­யி­லான பாது­காப்­பி­லி­ருந்து கடத்தி துஷ்­பி­ர­யோகம், செய்த இளை­ஞ­னுக்கு எதி­ராக பிரத்­தி­யேக சிறப்பு விசா­ர­ணை­களும், சட்ட நட­வ­டிக்­கையும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர் கூறினார்.

இந்த சம்­பவம் தொடர்பில் மேலும் அறிய முடி­வ­தா­வது, மாத்­தறை பொலிஸ் நிலை­யத்­துக்கு கிடைக்கப் பெற்ற முறைப்­பா­டொன்றில், இளைஞன் ஒருவன் 15 வயது சிறுமி ஒரு­வரை சட்ட ரீதி­யி­லான பாது­காப்­பி­லி­ருந்து கடத்தி துஷ்­பி­ர­யோகம் செய்­துள்­ளமை தொடர்பில் தெரி­ய­வந்­துள்­ளது. இது குறித்து விசா­ர­ணை­க­ளுக்கு இரு­த­ரப்பும் பொலிஸ் நிலையம் அழைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதன்­போது, பொலிஸ் நிலை­யத்தில் பலர் முன்­னி­லை­யிலும் சிறு­மிக்கு கருத்­த­ரிப்பு பரி­சோ­தனை செய்­யப்­பட்டு, அவர் கர்ப்­பிணி என பொலி­சாரால் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கி­றது. இந்த பரி­சோ­த­னையை முன்­னெ­டுக்க சந்­தேக நப­ரான இளை­ஞனின் தாயார் மருந்­த­கத்­தி­லி­ருந்து கருத்­த­ரிப்பு பரி­சோ­தனை கரு­வியை கொள்­வ­னவு செய்து வந்து கொடுத்­துள்­ள­துடன், அத­னை­ய­டுத்து சிறு­மி­யிடம் சிறுநீர் மாதி­ரியை பெற்று பொலிசார் இந்த பரி­சோ­த­னையை செய்­துள்­ள­தாக அறிய முடி­கி­றது. இவை பலர் முன்­னி­லை­யிலும் நடந்­த­தா­கவும், இதனால் பாதிக்­கப்­பட்ட சிறுமி கடும் மன உளைச்­ச­லுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

இந் நிலையில் அந்த பரி­சோ­த­னை­களின் பின்னர், சிறுமி கர்ப்­ப­மாக இருப்­ப­தாக கூறி, அவரை அழைத்துச் சென்று திரு­மணம் முடிக்­கு­மாறு சந்­தேக நப­ரான இளை­ஞ­ருக்கே தெரி­வித்­துள்ள உப பொலிஸ் பரி­சோ­தகர் ஒருவர், இரு நாட்­களில் விவாக பதி­வினை உறுதி செய்யும் ஆவ­ணத்தை கொண்­டு­வந்து காண்­பிக்க வேண்டும் எனவும் கூறி­ய­தாக பாதிக்­கப்­பட்ட சிறு­மியின் குடும்­பத்தார் கூறு­கின்­றனர்.

இத­னை­விட, சிறு­மியின் வயிற்றுப் பகு­தியில் காணப்­பட்ட காயங்­களை பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் தனது கைய­டக்கத் தொலை­பே­சியில் படம் எடுத்­துள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

இது­தொ­டர்பில் நபர் ஒருவர் சமூக வலைத்­த­ளத்தில் வெளி­யிட்ட காணொளி ஒன்­றினை அடுத்து, விட­யத்தை அறிந்­துள்ள மாத்­தறை சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நிசாந்த டி சொய்ஸா, உட­ன­டி­யாக உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ஒரு­வரின் கீழ் விஷேட விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்ளார்.

அதன் அறிக்­கை­யையும் மையப்­ப­டுத்தி, இது தொடர்பில் பொலிஸ் மா அதி­பரின் கவ­னத்­துக்கும் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள நிலை­யி­லேயே, சம்­பவம் தொடர்­பி­லான சிறப்பு விசா­ர­ணைகள் தற்­போது பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பது­காப்பு பணியகம் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.