எதற்காக இந்த செயலணி?

0 534

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்­கையை நாட்டில் அமுல்­ப­டுத்தும் நோக்கில் விசேட ஜனா­தி­பதி செய­லணி ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. இதன் தலை­வ­ராக பொது பல சேனா அமைப்பின் பொதுச் செய­லாளர் கல­கொ­ட­அத்தே ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். மொத்தம் 13 பேரை உறுப்­பி­னர்­க­ளாகக் கொண்ட இக் குழுவில் நான்கு முஸ்­லிம்­களும் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளனர்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்­கையை முன்­னி­றுத்­தியே ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ச தலை­மை­யி­லான தற்­போ­தைய பொது ஜன பெர­முன அர­சாங்கம் ஆட்­சிக்கு வந்­தது. அதா­வது நாட்டில் ஏலவே வழக்கில் உள்ள தனியார் சட்­டங்­களை ஒழிப்­பதே இக் கொள்­கையின் பிர­தான நோக்­க­மாகும். அதிலும் குறிப்­பாக முஸ்லிம் தனியார் சட்­டத்தை இல்­லா­தொ­ழிப்­ப­தற்­கான வேலைத்­திட்­டமே இது என்­பதில் எந்­த­வித சந்­தே­க­மு­மில்லை.

கடந்த பல வரு­டங்­க­ளாக இத­னையே ஞான­சார தேரரும் வலி­யு­றுத்தி வரு­கிறார். அத­னால்தான் கடும்­போக்கு கொள்கை கொண்ட தேர­ரையே இந்த விசேட செய­ல­ணியின் தலை­வ­ராக ஜனா­தி­பதி நிய­மித்­தி­ருக்­கிறார்.

யாரும் எதிர்­பார்க்­காத நேரத்தில், நாட்டில் கவனம் செலுத்­தப்­பட வேண்­டிய எத்­த­னையோ பிரச்­சி­னைகள் இருக்­கத்­தக்­க­தாக இவ்­வா­றான­தொரு செய­ல­ணியை ஜனா­தி­பதி விசேட வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் நிய­மித்­தி­ருப்­ப­தா­னது மக்கள் மத்­தியில் பலத்த சந்­தே­கத்தைத் தோற்­று­வித்­துள்­ளது.

பொருட்­களின் விலை­யேற்றம், நாட்டின் வளங்­களை வெளி­நா­டு­க­ளுக்குத் தாரை வார்த்­துள்­ளமை, விவ­சா­யிகள் எதிர்­நோக்கும் உர நெருக்­கடி, ஆசி­ரி­யர்கள் உள்­ளிட்ட பல்­வேறு தொழிற்­சங்­கங்­களின் போராட்­டங்­க­ளி­லி­ருந்து மக்­களின் கவ­னத்தை திசை­தி­ருப்பி, இன­வா­தத்தை தூண்­டு­கின்ற செயற்­பா­டா­கவும் சிலர் இதனை நோக்­கு­கின்­றனர்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் கொள்கை தேசத்தின் நலனை முன்­னி­றுத்­தி­ய­தாக இருந்­திருப்பின் நிச்­ச­ய­மாக ஜனா­தி­பதி அர­சியல் மற்றும் சட்ட விற்­பன்­னர்­களைக் கொண்ட குழு­வையே இதற்­காக நிய­மித்­தி­ருப்பார். சகல மக்­க­ளாலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட தகு­தி­வாய்ந்த ஒரு­வ­ரையே இச் செய­ல­ணியின் தலை­வ­ராக நிய­மித்­தி­ருப்பார். எனினும் தற்­போது இந்த செய­ல­ணியின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­பவர் ஏற்­க­னவே நீதி­மன்­றத்தால் சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்ட ஒருவர். நாட்டில் இன, மத­வா­தத்தை தூண்டி, அளுத்­கம மற்றும் திகன உள்­ளிட்ட பகு­தி­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களைக் கட்­ட­விழ்ப்­ப­தற்கு கார­ண­மாக இருந்­தவர் என உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச அமைப்­பு­களால் குற்­றம்­சாட்­டப்­பட்ட ஒருவர். அது­மாத்­தி­ர­மல்­லாது, உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் விசா­ர­ணை­களை நடாத்­திய ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் சிபா­ரி­சு­க­ளிலும் குறித்த தேரர் செய­லா­ள­ராக அங்கம் வகிக்கும் அமைப்பை தடை செய்ய வேண்டும் என பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான பின்­ன­ணியைக் கொண்ட ஒரு­வ­ரது தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள இச் செய­ல­ணியின் தீர்­மா­னங்கள் எவ்­வாறு நீதி­யா­ன­தாக அமைய முடியும் என்ற கேள்­வியை இன்று பெரும்­பான்மை மக்­களே எழுப்பத் தொடங்­கி­யுள்­ளனர்.

இதற்­கி­டையே, இதே செய­ல­ணியில் நான்கு முஸ்லிம் பிர­தி­நி­தி­களும் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர். இவர்கள் என்ன அடிப்­ப­டையில் தெரிவு செய்­யப்­பட்­டனர் என இது­வரை தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இது குறித்து முஸ்லிம் அர­சியல், சிவில் தலை­மை­களின் ஆலோ­ச­னைகள் பெறப்­பட்­ட­தா­கவும் தெரி­ய­வில்லை. உலமா சபை கிளை­யொன்றின் தலைவர் இதன் உறுப்­பி­ன­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள போதிலும் அது குறித்து தமக்கு எதுவும் தெரி­யாது என உலமா சபையின் செய­லாளர் தெரி­வித்­துள்ளார்.

அதே­போன்று, தமிழ் மற்றும் கிறிஸ்­தவ சமூ­கங்­களைச் சேர்ந்த பிர­தி­நி­தி­களும் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. மாறாக, சிங்கள மற்றும் முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்தோரே இதில் உள்ளடங்கியுள்ளனர். இதுவும் பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
இச் செயலணியில் உள்ளடங்கியுள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் தமது சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக குரல் கொடுப்பார்களா அல்லது அரசாங்கத்தை திருப்திப்படுத்துவதற்காக சமூகத்தின் நலன்களை தாரைவார்க்கப் போகிறார்களா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.