ஜம்இய்யத்துல் உலமா வஹாபிஸத்தை ஏற்கிறதா?

தெளிவுபடுத்த வேண்டும் என்கிறது பொதுபலசேனா

0 315

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா வஹா­பி­ஸத்தை ஏற்­றுக்­கொள்­கி­றதா? அல்­லது புறக்­க­ணிக்­கி­றதா என்­பதைத் தெளி­வாகக் கூற வேண்­டு­மென பொது­பல சேனா அமைப்பு கோரிக்கை விடுத்­துள்­ளது.

இது தொடர்­பாக பொது­பல சேனாவின் ஊடக பிரிவு அறிக்­கை­யொன்­றினை வெளி­யிட்­டுள்­ளது. அவ்­வ­றிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது 2021.09.22 ஆம் திகதி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் செய­லாளர் அர்கம் நூரா­மித்தின் கையொப்­பத்­துடன் பொது­ப­ல­சே­னா­வுக்கு வெளி­யிட்ட கடி­தத்­துக்கு பதி­ல­ளிக்கும் வகை­யிலே இவ் அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

இந்­நாட்டின் கலா­சா­ரத்­துக்கு அமை­வாக வாழ்ந்து பாது­காப்பு பிரி­வு­களில் இணைந்து சேவை­யாற்­றிய மலே முஸ்லிம் சமூ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நீங்கள் வஹாபிஸம் சல­பி­வாத உலமா சபையின் செய­லா­ள­ராக நிய­மனம் பெற்று இவ்­வா­றான கலந்­து­ரை­யா­டல்­களைச் செய்­வது குறித்து நாம் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம்.

குறிப்­பாக வஹாப் வாதம், சல­பி­வாதம், தப்லீக் ஜமா அத் மற்றும் ஜமா அத்தே இஸ்­லாமி ஆகிய கொள்­கை­க­ளி­லி­ருந்தும் முஸ்லிம் சமூ­கத்தைக் காப்­பாற்றி இந்­நாட்டின் கலா­சா­ரத்­துக்கு அமை­வான சமூ­க­மொன்­றினை உரு­வாக்கும் பலம் உங்­க­ளுக்குக் கிட்­ட­வேண்­டு­மெ­னவும் நாம் பிராத்­திக்­கிறோம்.

உலமா சபை வஹா­பி­ஸத்தை ஏற்றுக் கொள்­கி­றதா? புறக்­க­ணிக்­கி­றதா? என்ற முக்­கி­ய­மான கேள்­விக்கு நீங்கள் பதி­ல­ளிக்க மறந்து விட்­டீர்கள். இந்த கேள்­வியை ஞான­சார தேரர் பகி­ரங்க ஊட­க­மா­நா­டு­களில் பல தட­வைகள் வின­வி­யி­ருக்­கிறார். என்­றாலும் இது­வரை உலமா சபையின் நிலைப்­பாடு வெளிப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அத்­தோடு ஞான­சா­ர­தேரர் எந்த வகை­யிலும் மதத்தை அவ­ம­திப்­புக்­குள்­ளாக்­க­வில்லை. அவ­ரது கருத்து ஸ்ரீ லங்கா தெளஹீத் ஜமா­அத்தின் குர்ஆன் சிங்­கள மொழி­பெ­யர்ப்­பினை அடிப்­ப­டை­யாகக் கொண்டே தெரி­விக்­கப்­பட்­டது. இலங்­கையில் தடை­செய்­யப்­பட்­டுள்ள இந்த இயக்கம் வெளி­யிட்­டுள்ள குர்ஆன் தொடர்பில் உல­மாக்கள் எது­வித கருத்தும் எவ­ளி­யி­ட­வில்லை. அதனால் உல­மா­சபை அந்த குர் ஆன் மொழி­பெ­யர்ப்பினை ஏற்றுக் கொள்­கி­றதா என நாம் சிந்­திக்க வேண்­டி­யுள்­ளது.

ஞான­சார தேரர் சம­யத்தை அவ­மா­னப்­ப­டுத்­தி­ய­தாக உல­மா­சபை குற்­றஞ்­சாட்­டு­வது போன்ற கருத்­துக்கள் குர்ஆன்,ஹதீஸ்­களிலும் அடங்­கி­யுள்­ளன. அவற்றை வெளிப்­ப­டுத்த முடி­யு­மென்­றாலும் வஹாப்­வா­திகள் அல்­லாத இந் நாட்டின் கலா­சா­ரத்தை புரிந்­து­கொண்டு அதன்படி வாழும் சமா­தா­னத்தை விரும்பும் முஸ்­லிம்களின் மன­து­புண்­படும் என்­பதால் நாம் அனை அதனைத் தவிர்த்­துள்ளோம்.

நாம் ஒரு குர்ஆன் வச­னத்தை இங்கு குறிப்­பி­ட­வி­ரும்­பு­கிறோம். அல்­லாஹ்வின் அனு­ம­தி­யின்றி எந்­தவோர் செயலும் இடம்­பெ­றாது.(64:11) என்று குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. குர்ஆன் வசனம் இவ்­வா­றென்றால் உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் எவ்­வாறு இடம்­பெற்­றது? அல்­லாஹ்வின் அனு­ம­தி­யின்றி எந்­தவோர் செய­லா­வது இடம்­பெற முடி­யும்­என உல­மாக்­க­ளா­கிய நீங்கள் நம்­பு­வ­தா­யி­ருந்தால் அது தொடர்பில் கடிதம் மூலம் அறி­விக்­கும்­படி வேண்­டிக்கொள்­கிறோம்.

அத்­தோடு அகில இலங்கை ஜம்இயத்துல் உல­மா­சபை குர்­ஆனில் குறிப்­பிட்­டுள்ள மக்­கா­வுடன் தொடர்­பான விட­யங்­கள்­இந்­நாட்­டுக்கு தொடர்­பா­வைகள் அல்ல என்று தெரி­விப்­ப­தற்கு முயற்சிப்பதாக நாம்நினைக்கின்றோம். நாம் இது தொடர்பில் மகிழ்கிறோம். அதனால் மக்கா மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கு உரித்தான பல விடயங்கள் எமக்குத் தொடர்பானவைகள் அல்ல. அப்படியென்றால் உலமா சபை இதுவரை காலம் வழங்கியுள்ள பத்வாக்கள் மற்றும் வழிகாட்டல்கள் உங்களது முன்னைய கடிதத்தின் படி அமுலாகாது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.