சிறு­வர்­களை பாது­காப்­ப­து அனை­வ­ரதும் பொறுப்­பு

0 533

மலை­ய­கத்தின் டய­கம பிரதே­சத்­தைச் சேர்ந்த 16 வய­தான இஷா­லினி எனு­ம் சிறுமி கொழும்பில் முன்னாள் அமைச்­சரும் பாரா­­ளு­மன்ற உறுப்­பி­ன­­ரு­மான ரிஷாட் பதி­யு­தீனின் வீட்­டில் பணி­யாற்றி வந்த நிலையில் தீக்­கா­யங்­க­ளுக்­­குள்­ளாகி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு மர­­ணித்த சம்­பவம் பாரிய சல­ச­­­லப்­பு­களைத் தோற்­று­வித்­துள்­ளது. குறித்த சிறு­மியின் மரணம் தொடர்பில் உரிய விசா­ர­­ணை­களை நடாத்தி நீதி நிலை­நாட்­டப்­பட வேண்டும் என பல்­வேறு தரப்­பி­ன­ரும் போராட்­­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­னர்.

இந் நிலையில் குறித்த சிறு­மியின் மர­ணத்தில் நிலவும் சந்­தே­கங்­களை தீர்க்கும் பொருட்டு நீதி­ம­ன்ற உத்­த­ர­வின்­பேரில் இரண்­டா­வது தட­வை­யா­கவும் பிரேத பரி­சோ­தனை நடாத்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ளன. இதற்­க­மைய இன்­றைய தினம் சடலம் தோண்­டி எடுக்­கப்­ப­ட­வுள்­ள­து.

இந்த விவ­காரம் தொடர்பில் நால்வர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­ற­ன.

உயி­ரி­ழந்த சிறுமி மற்றும் அவ­ரது குடும்­பத்­திற்கு நீதி நிலை­நாட்­டப்­ப­டு­வ­துடன் இச் சம்­ப­வத்தின் உண்­மையான பின்­னணி வெளிப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதே அனை­வ­ரதும் எதிர்­பார்ப்­பா­கும்.

எனினும் இந்த விவ­கா­ரம் தற்­போது அர­சியல் மற்றும் இன, மத முரண்­பா­டு­க­ளைத் தூண்­டு­வ­தற்­கான ஒரு கரு­வி­யாக பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­­து கவ­லைக்­கு­ரி­ய­தாகும். குறிப்­பாக இந்த விவ­கா­ரத்தை வைத்து தமிழ், முஸ்லிம் சமூ­கங்­க­ளுக்­கி­டையே முரண்­பா­டு­களைத் தோற்­று­விக்க சில சக்­திகள் மறை­மு­க­மாக செயற்­ப­டு­கின்­ற­னவா என்­ற சந்­தேகம் எழுந்­துள்­ளது. கடந்த காலங்­களில் நாட்டில் இவ்­வா­றான பல இன முறு­கல்­களைத் தோற்­று­வித்து அர­சி­யல் நலன்­க­ளை­ய­டைந்த குழு­வினரே தற்­போதும் இந்த விட­யத்தில் குளிர்­காய முற்­­ப­டு­கிறார்கள் என்ற குற்றச்­சாட்­டுக்­களை இல­குவில் மறு­த­லிக்க முடி­ய­வில்­லை.

இலங்­கையைப் பொறுத்­த­வரை சிறுவர் துஷ்­பி­ர­யோகம் என்­பது நாளுக்கு நாள் அதி­க­ரித்துச் செல்­­வ­தை­யே புள்ளி விப­ரங்கள் காட்­டு­கின்­றன. அண்­மையில் கல்­கிஸ்ஸ பிர­தேசத்தில் 15 வய­தான சிறுமி ஒருவர் பாலியல் தேவை­க­ளுக்­காக அவரது தாயா­ரா­லேயே விற்­பனை செய்­யப்­பட்­டமை மற்றும் 13 வயது சிறு­மி ஒருவர் அவ­ரது தந்தை உள்­ளிட்ட பலரால் தொடர்­ச்­சி­யா­க பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­தமை உள்­ளிட்ட சம்­ப­வங்கள் அதிர்ச்­சியை ஏற்­ப­­டுத்­தி­யி­ருந்­தன. இலங்­கையில் வரு­டாந்தம் சுமார் 8500 சிறுவர் துஷ்­பி­ர­யோக சம்­ப­வங்கள் அறிக்­கை­யி­டப்­ப­டு­வ­தாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதி­கார சபை கூறு­கி­றது. 2020 ஆம் ஆண்டு கொவிட் 19 அச்­சு­றுத்­தலால் நாடு முடக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் கூட 8165 சம்­ப­வங்கள் பதிவா­ன­தாக  அதி­கார சபையின் தர­வுகள் கூறுகின்­றன. இந்த வரு­டத்தின் முதல் அரை­யாண்­டில் மாத்­திரம் சிறுவர் பாது­காப்பு அதி­கார சபைக்கு துஷ்­பி­ர­யோ­­­கங்கள் தொடர்­பான 4000 தொலை­பேசி அழைப்­புகள் கிடைக்கப் பெற்­றுள்­ள­ன.

நாட்டில் சிறு­வர்­களின் பாது­காப்பு இவ்­வாறு மிக மோச­ம­டைந்து செல்­கின்ற நிலையில் இதற்கு எதி­ராக நாம் அனை­வரும் இன, மத வேறு­பா­டு­க­ளைக் களைந்து ஒன்­று­பட்டு செயற்­பட வேண்­டுமே தவிர இத­னையும் இன மத மோத­லுக்­கான கரு­வி­யாகப் பயன்­படுத்தி விட­யத்தின் பார­தூரத்தை திசை திருப்ப முனையக் கூடா­து.

எல்லா சமூ­கங்­க­ளையும் சேர்ந்த சிறு­வர்­களும்தான் பாதிக்­கப்­படுகி­றார்கள் என்­பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதே­­போன்று குற்­ற­வா­ளி­களும் எல்லா சமூ­கங்­க­ளி­லும்தான் இருக்­கின்­றார்கள். இந் நிலையில் இந்த விட­யத்தில் அனை­வ­ரும் ஒன்­றுபட்டு குற்­ற­வா­ளி­க­ளுக்கு எதி­ராக போராட வேண்­டுமே தவிர நமக்குள் முரண்­பா­டு­களை வளர்ப்­பது ஆரோக்­கி­ய­மா­ன­தல்­ல.

எள­வேதான் சிறுமி இஷா­லினி விவ­கா­ரத்தில் மாத்­தி­ர­மன்றி சகல சிறுவர் துஷ்­பி­ர­­யோ­க சம்­ப­வங்கள் தொடர்­பிலும் அர­சி­யல்­வா­தி­களும் ஊட­கங்­களும் கவனம் செலுத்த வேண்டும். குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்த போராட வேண்­டும். சிறுவர்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த முன்­வர வேண்டும். அத­னை­வி­டு­த்து உணர்ச்­சி­வ­சப்­பட்டு தீய அர­சியல் சக்­தி­களின் வலை­களில் சிக்கி இன மத முரண்­பா­டு­க­ளுக்கு வித்திடக் கூடாது என வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.