ஹிஜாஸுக்கு எதிராக சாட்சி சொல்ல வற்புறுத்தும் சி.ஐ.டி.

புத்தளம் மேல் நீதிமன்றில் சட்டத்தரணி அத்துகோரள சுட்டிக்காட்டு; மன்றில் ஆஜர் செய்யுமாறு கோரிக்கை; சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும், நீர் கொழும்பு சிறைச்சாலை அத்தியட்சருக்கும் விஷேட உத்தரவுகள்

0 361

எம்.எப்.எம்.பஸீர்

உயிர்த்­த­ஞா­யிறு தின தொடர் தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பின்னர் தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக சாட்­சியம் வழங்­கு­மாறு சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் பலரை வற்­பு­றுத்தி வரு­வ­தாக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள புத்­தளம் மேல் நீதி­மன்­றுக்கு அறி­வித்தார்.

ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்­குடன் தொடர்­பில்­லாத, எனினும் அவ்­வ­ழக்கின் சாட்­சி­யா­ளர்­க­ளாகக் கூடிய வாய்ப்­புள்ள இரு­வரை, சி.ஐ.டி.யினர் கடந்த இரண்டு மூன்று மாதங்­க­ளாக கைது செய்து தடுத்து வைத்து ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக சாட்­சியம் வழங்கு­மாறு வற்­பு­றுத்­தி­யுள்­ள­தாக அவர் குறிப்­பிட்டார். இது தொடர்பில் அவ்­வி­ரு­வரும் உயர் நீதி­மன்றில் அடிப்­படை உரிமை மீறல் மனு­வினை இது குறித்து தாக்கல் செய்­துள்­ள­தா­கவும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள குறிப்­பிட்டார்.

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ராக சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் புத்­தளம் மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள குற்றப் பகிர்வுப் பத்­திரம் மீதான வழக்கு விசா­ரணை கடந்த வெள்­ளிக்­கி­ழமை முதல் தட­வை­யாக விசா­ர­ணைக்கு வந்­தது.

சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்வின் சட்­டத்­த­ர­ணிகள் தாக்கல் செய்த நகர்த்தல் பத்­தி­ரத்­துக்கு அமை­யவே குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது.
இவ்­வ­ழக்கை விசா­ரிக்­க­வென விஷே­ட­மாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள சிலாபம் மேல் நீதி­மன்றின் நீதி­பதி குமாரி அபே­ரத்ன, புத்­தளம் மேல் நீதி­மன்­றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்­னி­லை­யி­லேயே இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது.

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ், புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையின் அதிபர் மெள­லவி சலீம் கான் மொஹம்மட் சகீல் ஆகி­யோரே இவ்­வ­ழக்கின் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

அவர்­க­ளுக்கு எதி­ராக 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழும், 2007 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க சிவில், அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழும் 5 குற்­றச்­சாட்­டுக்­களை உள்­ள­டக்கி இந்த குற்றப் பகிர்வுப் பத்­தி­ரத்தை சட்ட மா அதிபர் தாக்கல் செய்­துள்­ள­தா­கவும், குற்­றச்­சாட்­டுக்­களை உறுதி செய்ய 75 சாட்­சி­யா­ளர்­களின் பட்­டி­ய­லையும் 17 ஆவ­ணங்­க­ளையும் சட்ட மா அதிபர் இணைத்­துள்ளார்.

இந் நிலையில், கடந்த ஒரு வரு­டத்­துக்கு மேலாக சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ், சி.ஐ.டி. மற்றும் சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் பொறுப்பில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவரை உட­ன­டி­யாக நீதி­மன்றில் ஆஜர் செய்து, அவ­ருக்கு எதி­ரான குற்றப் பத்­தி­ரி­கையை கைய­ளித்து வழக்கை விசா­ரிக்க நகர்த்தல் பத்­திரம் ஊடாக, ஹிஜாஸின் சட்­டத்­த­ர­ணிகள் கோரி­யி­ருந்­தனர்.

இந் நிலையில் வழக்கு விசா­ர­ணைக்கு வந்த போது, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு பிர­தி­வா­திகள் சார்­பிலும், சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள தலை­மையில் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான ஹபீல் பாரிஸ், நுவன் போப்­பகே, நிரோன் அங்­கிடெல் உள்­ளிட்ட சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­கினர்.
சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்­ட­வாதி தம்­மிக உட­வத்த ஆஜ­ரானார்.

இதன்­போது மன்றில் வாதங்­களை முன் வைத்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள,
விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இருவர் தொடர்­பி­லான வழக்­கினை, பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்­குகள் எனும் ரீதியில் முன்­னு­ரிமை அளித்து உட­ன­டி­யாக விசா­ர­ணைக்கு எடுக்க வேண்டும் என கோரினார். அதன்­படி அவரை மன்­றுக்கு அழைத்து குற்றப் பத்­தி­ரி­கையை கைய­ளிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என அவர் சுட்­டிக்­காட்­டினார்.

‘தற்­போதும் விளக்­க­ம­றி­யலில் உள்ள பிர­தி­வா­தி­க­ளுக்கு குறிப்­பாக வழக்கின் முதல் பிர­தி­வா­திக்கு (ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ்) எதி­ராக சாட்­சி­ய­ம­ளிக்­கு­மாறு, இவ்­வ­ழக்­குடன் தொடர்பு படாத எனினும் எதிர்­கா­லத்தில் இவ்­வ­ழக்கின் சாட்­சி­யா­ளர்­க­ளாக மாற வாய்ப்­புள்ள நபர்கள் கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யினரால் அச்­சு­றுத்­தப்பட்­டுள்­ளனர். அது குறித்து உயர் நீதி­மன்­றிலும் மனு தாக்கல் செய்­துள்ளோம்.

இவ்­வா­றான ஒரு பின்­ன­ணி­யி­லேயே, நீண்­ட­காலம் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள ஒரு­வ­ருக்கு எதி­ராக வழக்கு விசா­ர­ணை­களை உடன் ஆரம்­பிக்­கவும் அவரை மன்­றுக்கு அழைத்து குற்றப் பத்­தி­ரி­கையை கைய­ளிக்­கவும் கோரு­கின்றேன்.’ என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள நீதி­மன்றில் தெரி­வித்தார்.

எனினும் இதன்­போது சிரேஷ்ட அரச சட்­ட­வாதி ஒரு­வ­ருக்கு பதி­லாக மன்றில் ஆஜ­ரா­கிய அரச சட்­ட­வாதி தம்­மிக உட­வத்த,
‘நாட்டில் நிலவும் சூழலில் எந்த பிர­தி­வா­தியும் எந்த நீதி­மன்­றங்­க­ளுக்கும் அழைக்­கப்­ப­டாத பின்­ன­ணியில், இவ்­வ­ழக்கின் பிர­தி­வா­திக்கு விஷேட முறைமை சாத்­தி­ய­மற்­றது என வாதிட்டார். சுகா­தார சேவைகள் பணிப்­பா­ள­ரினால் வெளி­யி­டப்­பட்­டுள்ள வழி­காட்­டல்­க­ளுக்கு அமை­யவே நீதி­மன்­றங்­க­ளுக்கு பிர­தி­வா­திகள் அழைக்­க­ப்ப­டு­வ­தில்லை எனவும், எனவே இது சுகா­தார சேவைகள் பணிப்­பா­ள­ரினால் தீர்­மா­னிக்­கப்­பட வேண்­டிய விடயம் என அவர் குறிப்­பிட்டார்.

எனினும் இதற்கு பதி­ல­ளித்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள, ‘இவ்­வ­ழக்கில் எந்த விஷேட நட­வ­டிக்­கை­களும் இடம்­பெ­ற­வில்லை. சாதா­ரண வழக்கு விசா­ரணை முறை­மையின் கீழேயே நடக்­கி­றது.

குற்­ற­வியல் சட்டக் கோவையை மீறி இங்கு எந்த வழக்கு விசா­ர­ணை­களும் நடாத்த முடி­யாது. தற்­போது மேன் முறை­யீட்டு நீதி­மன்­றங்­களில் கூட ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக மேன் முறை­யீட்டு வழக்­குகள் விசா­ரிக்­கப்­ப­டு­கின்­றன.

நாட்டில் நிலவும் நிலை­மையை மையப்­ப­டுத்தி, ஒரு­வரின் சுதந்­தி­ரத்தை கட்­டுப்­ப­டுத்தி வைக்கும் அதி­காரம் சுகா­தார சேவைகள் பணிப்­பா­ளரின் கையில் இல்லை. சந்­தேக நபரை மன்­றுக்கு அழைத்து குற்றப் பத்­தி­ரி­கையை கைய­ளிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.’ என வாதிட்டார்.

இரு தரப்பு விட­யங்­க­ளையும் ஆராய்ந்த நீதி­பதி குமாரி அபே­ரத்ன, முதலில் நீதி­ப­தியின் அதி­காரம் சுகா­தார சேவைகள் பணிப்­பா­ள­ருக்கு இல்லை என்­பதை தெளி­வு­ப­டுத்­திய நிலையில், நாட்டில் நிலவும் சூழலில் பிர­தி­வா­தியை நீதி­மன்­றுக்கு அழைக்க உரிய சுகா­தார பரிந்­து­ரைகள் இருப்பின் அவற்றை மன்­றுக்கு அறிக்­கை­யாக சமர்ப்­பிக்க சுகா­தார சேவைகள் பணிப்­பா­ள­ருக்கு உத்­தரவிட்டார். அத்­துடன் பிர­தி­வா­தி­களை மன்றில் ஆஜர் செய்­ய­வுள்ள வாய்ப்­புக்கள் தொடர்பில் மன்­றுக்கு விஷேட அறிக்­கையை சமர்ப்­பிக்­கு­மாறு நீர்­கொழும்பு சிறைச்­சா­லையின் சிறைச்­சாலை அத்­தி­யட்­ச­ருக்கும் நீதி­பதி கட்­டளை பிறப்­பித்து வழக்கை எதிர்­வரும் ஜூலை 2 ஆம் திக­திக்கு ஒத்தி வைத்தார்.

இதன்போது, சிலாபம், புத்­தளம் மேல் நீதி­மன்­றங்­களில் ஸ்கைப் தொழில் நுட்­பத்­துடன் கூடிய வச­திகள் இல்லை என்­பதும் வெளிப்­பட்­டது.

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களில் தொடர்­பு­பட்ட சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தாக்­குதல் நடாத்­திய இன்சாப் அஹமட் எனும் குண்­டு­தா­ரி­யுடன் தொடர்­பு­களை பேணி­ய­தாக கூறி, பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி சி.ஐ.டி. யினரால் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். அது முதல் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த அவரை, தண்­டனை சட்டக் கோவையின் 102, 113 (ஆ) ஆகிய அத்­தி­யா­யங்­களின் கீழும், 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) ( உ) பிரிவின் கீழும், 2007 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க சிவில், அர­சியல் உரி­மை­க­ளுக்­கான சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் 3(1) ஆம் உறுப்­பு­ரையின் கீழும் ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­து­வ­தற்­கான நம்­ப­க­ர­மான தக­வல்கள் விசா­ர­ணையில் வெளிப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டியே, அக்­குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் அவரை மன்றில் ஆஜர் செய்ய சட்ட மா அதிபர் கடந்த பெப்­ர­வரி 17இல் ஆலோ­சனை வழங்கினார்.

அதன்­படி இக்­குற்­றச்­சாட்­டுக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு, ஹிஜா­சிடம் வாக்கு மூலம் ஒன்­றினை பதிவு செய்­து­கொண்டு அதன் பின்னர் அவரை குற்­ற­வியல் சட்டக் கோவை நடை­மு­றைக்கு அமைய நீதி­மன்றில் ஆஜர் செய்­யு­மாறு பொலிஸ் மா அதி­ப­ருக்கு சட்ட மா அதிபர் அறி­வித்த நிலை­யி­லேயே முதன் முறை­யாக கடந்த பெப்­ர­வரி 18 ஆம் திகதி ஹிஜாஸ் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு அன்று முதல் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே சட்ட மா அதிபர் கடந்த பெப்­ர­வரி 17இல் வழங்­கிய ஆலோ­ச­னைக்கு அமைய ஹிஜா­ஸுக்கு உதவி ஒத்­தாசை வழங்­கி­ய­தாக கூறி, அல் சுஹை­ரியா மத்­ர­ஸாவின் அதிபர் மொஹம்மட் சகீல் அன்­றைய தினமே சி.ஐ.டி.யினரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

அவ்­வி­ரு­வ­ருக்கும் எதி­ராக தற்­போது புத்தளம் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.