அசாத் சாலி விவகாரத்தில் இரு வாரங்களில் முடிவு

சர்ச்சைக்குரிய பேச்சு குறித்த விசாரணை நிறைவு

0 475

எம்.எப்.எம்.பஸீர்

கைது மற்றும் தடுத்து வைப்­புக்கு எதி­ராக உயர் நீதி­மன்றில் அசாத் சாலி சார்பில், தன்­னையே மனு­தா­ர­ராக பெய­ரிட்டு, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கெளரி சங்­கரி தவ­ராசா தாக்கல் செய்­துள்ள எஸ்.சி.எப்.ஆர். 97/2021 எனும் அடிப்­படை உரிமை மீறல் மனு மீதான பரி­சீ­ல­னை­களில் அடுத்த இரு வாரங்­களில் ஒரு முடி­வுக்கு வரக் கூடி­ய­தாக இருக்கும் என உயர் நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது. அதன்­படி, குறித்த மனுவை அவ­சர அவ­சியம் கரு­திய மனு­வாக கருதி எதிர்­வரும் 28 ஆம் திகதி மீள பரி­சீ­ல­னைக்கு எடுக்க உயர் நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது.

இது குறித்த மனு கடந்த திங்­க­ளன்று உயர் நீதி­மன்ற நீதி­யரசர் எல்.டி.பி. தெஹி­தெ­னிய, காமினி அம­ர­சே­கர மற்றும் ஷிரான் குண­ரத்ன ஆகியோர் முன்­னி­லையில் பரி­சீ­லிக்­கப்­பட்­டது.

மனு மீதான பரி­சீ­ல­னைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது, சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ராகும் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ், அசாத் சாலி ஊடக சந்­திப்­பொன்றில் கூறிய கருத்­துக்கள் குறித்த விசா­ரணை நிறை­வ­டைந்­துள்­ள­தாக குறிப்­பிட்டார்.

‘அந்த விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்­துள்­ளன. அது குறித்த விசா­ரணை அறிக்கை சட்ட மா அதி­ப­ருக்கு அனுப்பி வைக்­கப்பட்­டுள்­ளது. விசா­ரணை கோவையை ஆராய்ந்த பின்னர் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­வதா இல்­லையா, அடுத்த கட்டம் என்ன என்­பது தொடர்பில் தீர்­மா­னிக்க முடியும். அடுத்து வரும் ஒரு வாரத்­துக்குள் அது சாத்­தி­ய­மாகும்.’ என பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரிஸ் குறிப்­பிட்டார்.

இதன்­போது நீதி­யரசர் எல்.டி.பி. தெஹி­தெ­னிய, மாவ­னல்லை புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்­தி­லான விசா­ர­ணைகள் தொடர்பில் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் திலீப பீரி­ஸிடம் கேள்வி எழுப்­பினார்.

அதற்கு பதி­ல­ளித்த அவர் அவ்­வி­சா­ர­ணைகள், இறுதிக் கட்­டத்தில் இருப்­ப­தா­கவும் பெரும்­பாலும் ஓரிரு வாரங்­களில் அதனை நிறை­வுக்கு கொண்டு­வர முடியும் என நம்­பு­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

இதன்­போது அசாத் சாலி சார்பில், சிரேஷ்ட் சட்­டத்­த­ரணி கெளரி சங்­க­ரி­ த­வ­ரா­சாவின் ஆலோ­ச­னைக்கு அமைய, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா, சிரேஷ்ட சட்­டத்­த­ரணி என்.எம். சஹீட் சட்­டத்­த­ர­ணி­க­ளான தர்­மஜா தர்­ம­ராஜா, சந்­ரகேஷ் பிருந்தா உள்­ளிட்­ட­வர்கள் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர். இந் நிலையில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா மன்றில் வாதங்­களை முன்­வைத்து, இவ்­விரு குற்றச் சாட்­டுக்கள் தொடர்­பிலும் மனு­தா­ர­ரான அசாத் சாலிக்கு எந்த தொடர்­பு­களும் இல்லை என குறிப்­பிட்டார். அத்­துடன் ஊட­கங்­க­ளுக்கு அளித்த சர்ச்­சைக்­கு­ரி­யது என கூற­ப்படும் கருத்தில், எந்த குரோத மனப்­பான்­மை­யையும் தூண்டும் விட­யங்­களும், மக்­களை தவ­றாக வழி நடாத்தும் விட­யங்­களும் இல்லை எனவும், குறித்த கருத்­தினை வெளி­ப்படுத்தும் போது அவ­ரது நோக்கம் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­து­வது அல்ல என்­ப­தையும் மன்­றுக்கு நிரூ­பிக்க தான் தயா­ராக இருப்­ப­தா­கவும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா மன்றில் குறிப்­பிட்டார்.

அத்­துடன் மாவனல்லை சம்­ப­வத்­து­டனும் அசாத் சாலிக்கு எந்த தொடர்­பு­களும் இல்லை எனவும் அவ­சியம் எனில் இவை தொடர்பில் எழுத்து மூலம் சமர்ப்­ப­ணங்­களை முன் வைக்­கவும் தயார் என ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி பாயிஸ் முஸ்­தபா குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து குறித்த மனு தொடர்பில் முன் வைக்­கப்பட்ட விட­யங்­களை ஆராய்ந்த நீதி­யர­சர்கள் குழாம், எதிர்­வரும் 28 ஆம் திக­தி­வரை வழக்கை ஒத்தி வைத்­தது. அன்­றைய தினம் அவ்­வ­ழக்கை பரி­சீ­ல­னைக்கு எடுக்க, அவ­சர அவ­சியம் கரு­திய மனு­வாக இம்­ம­னுவை நீதி­மன்றம் பெய­ரிட்­டது.

தீவி­ர­வாத பயங்­க­ர­வாத சந்­தேக நபர்­க­ளுடன் தொடர்பு வைத்­தி­ருந்­தமை, தீவி­ர­வாத பயங்­க­ர­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு உத­வி­ய­ளித்­தமை மற்றும் உடந்­தை­யா­க­வி­ருந்­தமை, வன்­முறை அல்­லது மத, இன அல்­லது சமூக ரீதி­யான விரோ­தத்தை தூண்டும் வகையில் அல்­லது வேறு­பட்ட சமூ­கங்கள் அல்­லது இனங்கள் மத குழுக்­க­ளுக்­கி­டையில் பகை­மையை தூண்டும் விதத்தில் வார்த்­தை­களை பயன்­ப­டுத்­தி­ய­மைக்­கா­கவும் மற்றும் 21.04.2019 அன்று நடை­பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் இந்த சந்­தேக நப­ருக்கு உள்ள தொடர்­பினை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான மேல­திக விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கவும் அவரை தடுத்து வைத்து விசா­ரிக்க அனு­ம­திப்­ப­தாக அசாத் சாலி கைது செய்­யப்­பட்­டதை தொடர்ந்து அவரை தடுத்து வைக்க ஜனா­தி­பதி கையெ­ழுத்­திட்­டுள்ள தடுப்புக் காவல் உத்­த­ரவு அனு­ம­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதன்­படி 90 நாட்­க­ளுக்கு அவரை தடுத்து வைக்க அனு­ம­திப்­ப­தாக ஜனா­தி­பதி குறித்த அனு­ம­தியில் குறிப்­பிட்­டுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.