ஒரு நொடியில் கருகிப்போன கஜிமாவத்தை

0 458

எஸ்.என்.எம்.சுஹைல்

“தீப்­ப­ரவல் நான் இருந்த வீட்­டுக்கு இரண்டு வீடு­க­ளுக்கு அப்­பால்தான் ஆரம்­ப­மா­ன­தாக கூறு­கின்­றனர். எல்­லோரும் ஆழ்ந்த நித்­தி­ரை­யி­லி­ருந்தோம், நெருப்பு நெருப்பு என்று கத்தும் சத்தம் கேட்­டது. எனது தாயும் தம்­பி­களும் வீட்­டுக்கு வெளியே ஓடி­னர். நானும், என் பிஞ்­சுக்­கு­ழந்­தையை சுமந்­து­கொண்டு மூத்த மக­ளையும் இழுத்­துக்­கொண்டு வெளியில் ஓடி முடிப்­ப­தற்குள், எங்கள் வீடும் தீயில் கருக ஆரம்­பித்­தது. மயி­ரி­ழையில் உயிர் பிழைத்­த­தாக உணர்ந்தேன். உடுத்த உடை தவிர்ந்து அத்­த­னையும் கண்­முன்னே பற்­றி­யெ­ரிய உயிரை பிடித்­துக்­கொண்டு ஓடினோம்” என்றார் கண­வனை இழந்த இளம் தாய் பஸ்­மினா.

எம்.ஆர்.எப்.பஸ்­மி­னா­வுக்கு 28 வயது. தேயிலை பொதி செய்யும் தொழிற்­சா­லை­யொன்­றுக்கு வேலைக்குச் சென்று தன்­னு­டைய இரண்டு பிள்­ளை­க­ளையும் காப்­பாற்­று­வ­தாக அவர் தெரி­வித்தார்.

“விம­லா­வ­திக்கு காதும் கேட்­காது, பேசவும் முடி­யாது. அன்று அதி­கா­லையில் எமது வீட்டுத் தொகுதி பற்றி எரிந்­த­போது அவர் வீட்­டுக்­குள்தான் இருந்தார். நான் அன்­றைய தினம் வீட்டில் இருக்­க­வில்லை, அதிர்ஷ்­ட­வ­ச­மாக மகன் வீட்டில் இருந்­ததால் விம­லா­வ­தியை காப்­பாற்ற முடிந்­தது” என்றார் 70 வயது மதிக்­கத்­தக்க கணவர் தர்­ம­தாஸ.
கொழும்பு, கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட, கஜீமா தோட்­டத்தில் கடந்த திங்­கட்­கி­ழமை அதி­காலை 2.50 மணி­ய­ளவில் ஏற்­பட்ட திடீர் தீப்­ப­ர­வலில் 32 குடி­சைகள் தீக்­கி­ரை­யா­கின. 5 குடி­சைகள் பகு­தி­ய­ளவில் சேத­ம­டைந்­தன. இங்கு பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களின் கதை­களே இவை.

கஜிமா தோட்­டத்தில் தகரம், பல­கைகள் கொண்டு அமைக்­கப்­பட்ட இந்த நெருக்­க­மான குடி­சை­களில் 32 குடும்­பங்­களைச் சேர்ந்த 140 பேர் வசித்து வந்­த­தாக மாதம்­பிட்டி கிராம சேவகர் பிரிவின் கிராம அதி­காரி டி.ஆர்.டீ.பி.பெரேரா கூறினார்.

“குறித்த பகு­தியில் 18 வய­துக்கு குறைந்த 35 பெண் பிள்­ளைகள், 30 ஆண் பிள்­ளைகள் உட்­பட 65 சிறு­வர்­களும் 42 பெண்கள், 33 ஆண்­களும் வசித்து வரு­கின்­றனர். 18 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களில் சில­ருக்கு வாக்­காளர் பதி­வுகள் இருந்­தாலும் பலர் பதி­வுகள் இல்­லா­தி­ருக்­கின்­றனர்” என்றும் கிராம சேவகர் குறிப்­பிட்டார்.

இத­னி­டையே, தீப்­ப­ரவல் ஏற்­பட்ட பின்னர் கொழும்பு மாவட்ட அர­சாங்க அதிபர் (பிரதி) பிரதீப் யஷா­ரத்ன, கொழும்பு பிர­தேச செய­லாளர் நாலக்க ரத்­நா­யக்க உள்­ளிட்டோர் ஸ்தலத்­திற்கு சென்று நிலை­மை­களை அவ­தா­னித்­தனர்.
கஜிமா தோட்­டத்தில் தீப்­ப­ர­வ­லினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தற்­போது மோதர தோட்ட தொடர்­மாடி குடி­யி­ருப்பின் சன­ச­மூக நிலை­யத்தில் தங்க வைக்­கப்­பட்­டுள்­ளனர்.

“தீப்­ப­ர­வலின் பின்னர் 100 பேர்­வரை தற்­கா­லி­க­மாக தங்க வைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றனர். அவர்­க­ளுக்­கான மூன்­று­வேளை உணவு மற்றும் உடு­து­ணிகள் அர­சாங்­கத்­தி­னாலும் தொண்டு நிறு­வ­னங்­க­ளாலும் வழங்­கப்­பட்­டுள்­ளன. இவர்­க­ளுக்கு நிரந்­தர வீட்டு வச­தி­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுப்­பது தொடர்­பி­லான கலந்­து­ரை­யா­டல்கள் கொழும்பு மாவட்ட செய­லகம் மற்றும் பிர­தேச செய­ல­கங்­களில் இடம்­பெ­று­கின்­றன” என்றும் கிராம சேவகர் குறிப்­பிட்டார்.

குறித்த கஜிமா தோட்­டத்தில் வசிப்­ப­வர்கள் பெரும்­பாலும் அன்­றாடம் கூலித் தொழில் மூலம் தமது ஜீவ­னோ­பா­யத்தை மேற்­கொள்­ப­வர்கள்.

இந்­நி­லையில் இந்த தீ விபத்துச் சம்­பவம் தம்மை மேலும் வறு­மை­க்குள் தள்­ளி­வி­டுமோ என்று அச்­சப்­ப­டு­கின்றார் இரண்டு பிள்­ளை­களின் தந்­தை­யான முஹம்­மது பயாஸ். “ 5 வரு­டங்­க­ளாக இதே இடத்தில் வசிக்­கிறேன். பதின்ம வயது ஆண் பிள்ளை பாட­சாலை செல்­கிறான், திரு­மண வயதில் பெண் பிள்­ளை­யொ­ருவள் வீட்­டி­லி­ருக்­கிறாள். நான் வார இறுதி நாட்­களில் விகா­ர­ம­கா­தேவி பூங்­காவில் முறுக்கு விற்­பனை செய்து குடும்­பத்தை நடாத்தி வரு­கிறேன். முன்னர் மரு­தானை பகு­தியில் கூலி வீட்டில் வாழ்ந்து வந்தேன். இப்­போது இருக்க வீடின்றி நடுத்­தெ­ரு­வுக்கு வந்­துள்ளேன்” என்றார்.

சத்­தியா தேவி பொரளை பகு­தியில் பதிவை கொண்­டவர். 2 மாதங்­க­ளாக அங்கு வசித்­தாலும் அவ­ருக்கும் சொந்த வீடின்­மையால் இப்­ப­கு­தியில் குடி­யேற நேர்ந்­த­தாக கூறினார்.நாஹிதா கார்த்­திக்கின் தாயை பரா­ம­ரிப்­ப­தற்­காக கஜி­மா­வத்தை பகு­தியில் குடி­யி­ருக்­கிறார், நாஹிதா அங்கு 5 வரு­டங்­க­ளாக வசிப்­பவர். இவர்­க­ளது குடிசை, உட­மை­களும் தீயில் நாச­மா­கி­விட்­டன.

நாம் அங்கு சென்­ற­போது, சன சமூக நிலை­யத்தைச் சுற்றி சிறு­வர்கள் விளை­யாடிக் கொண்­டி­ருந்­தனர். அங்­குள்ள முச்­சக்­கர வண்­டி­யொன்றில் அமர்ந்­த­படி அலெக்ஸ் யொஹான் (தரம் 6 இல் கற்­பவன்) மற்றும் சிதான் (தரம் 9 இல் கற்­பவன்) மற்றும் சில சிறு­வர்­களும் கதைத்­துக்­கொண்­டி­ருந்­தனர்.

நீண்ட நாட்­க­ளாக பாட­சாலை விடு­மு­றையில் இருப்­பதால் கல்வி கற்கும் வாய்ப்­பினை இழப்­ப­தாக கூறினர். “கைய­டக்கத் தொலை­பே­சியில் படிப்­பிக்­கின்­றனர். எமக்கு அவ்­வ­சதி குறை­வாக இருப்­பதால் எம்மால் பாடங்­களை தொடர முடி­ய­வில்லை, அடுத்த மாதம் பாட­சாலை ஆரம்­பித்­து­விடும். ஆனால், எமது பாட­சாலை சீரு­டைகள், புத்­தகம், புத்­த­கப்­பைகள் எல்லாம் எரிந்­து­விட்­டன” என்று அங்­கி­ருந்த எல்லா சிறு­வர்­களும் ஒரே தொனியில் கூறினர்.

பாதிக்­கப்­பட்­ட­வர்­களில் கணி­ச­மான குடும்­பங்கள் மோதர தோட்ட தொடர்­மாடி குடி­யி­ருப்பின் சன­ச­மூக நிலை­யத்தில் தங்­கி­யி­ருக்­கின்­றன. மேலும் சில குடும்­பங்கள் தமது உற­வி­னர்­களின் வீடு­க­ளுக்குச் சென்­று­விட்­டன.

தலை­நகர் கொழும்பைப் பொறுத்­த­வரை இவ்­வா­றான சேரிப்­பு­றங்கள், குடி­சை­க­ளுக்குப் பஞ்­ச­மில்லை. தெற்­கா­சி­யாவின் உயர்ந்த கோபு­ர­மான தாமரைக் கோபுரம் உள்ள அதே கொழும்­பில்தான் இன்­னமும் இவ்­வா­றான குடி­சை­களும் உள்­ளன. கொழும்பில் 230 மீற்றர் உய­ர­மான 407 அதி­சொ­குசு வீடு­களைக் கொண்ட அல்­டயார் மாடிக் குடி­யி­ருப்பு திறந்து வைக்­கப்­பட்டு மூன்று நாட்­க­ளி­லேயே கஜி­மா­வத்­தையில் வசித்­து­வந்த இந்த ஏழை­களின் தகரக் குடி­சைகள் எரிந்து சாம்­ப­ரா­கி­யுள்­ளன. இந்த ஏற்­றத்­தாழ்­வு­க­ளுக்கும் சமத்­து­வ­மின்­மை­க­ளுக்கும் முற்­றுப்­புள்ளி வைக்­கும்­போ­துதான் இவ்­வா­றான தீ விபத்துச் சம்­ப­வங்­க­ளையும் ஒரே இரவில் வீடு­களை இழந்து நடுத்­தெ­ரு­வுக்கு வரும் அவ­லங்­க­ளையும் தடுத்து நிறுத்த முடியும்.

கஜிமாவத்­தையில் எரிந்து தரை­மட்­ட­மாகிப் போன பகு­தியில் நின்று பார்த்தால் நேரே தெரி­வதும் இவ்­வா­றான வீடற்ற மக்­க­ளுக்­காக அர­சாங்­கத்­தினால் நிர்­மா­ணித்துக் கொடுக்­கப்­பட்ட மாடிக்­கு­டி­யி­ருப்­பு­கள்தான். அவ்­வா­றான ஒரு வீட்டுத் திட்­டத்தில் தமக்கும் ஒரு கல் வீடு கிடைக்க வேண்டும் என்­பதே இந்தக் குடும்­பங்­களின் வேணவா.
பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களை மீண்டும் தற்­கா­லிக குடி­சை­களில் வாழ­வைப்­ப­தை­விட அவர்­களை பாது­காப்­பா­னதும் நிரந்­த­ர­மா­ன­து­மான வீடு­களில் குடி­யேற்­று­வது அர­சாங்­கத்­தி­னதும் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளினதும் கடமையாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.