சம்பளத்தை அதிகரிக்க ஏன் இந்த தயக்கம்

0 801

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்குமாறு வலியுறுத்தி மலையகத்தில் மாத்திரமன்றி நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஓர் அங்கமாக தலைநகர் கொழும்பிலும் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

சமூக வலைத்தளங்களின் ஊடாக விடுக்கப்பட்ட அழைப்பை அடுத்து, கொழும்பு காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடினர். ஆயிரக் கணக்கான இளைஞர், யுவதிகள் கறுப்பு ஆடைகளை அணிந்த வண்ணம் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் சம்பள அதிகரிப்பையும் வலியுறுத்தினர்.

கடந்த இரு வார காலமாக தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மலையகம் உட்பட பல இடங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டதன் தொடரிலேயே கொழும்பில் நேற்றைய ஆர்

Leave A Reply

Your email address will not be published.