ஜனாதிபதியின் செயல் நியாயமானதா

0 787

சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் நெருக்கடியான அரசியல் சூழல் ஒன்றுக்கு நாடு முகங்கொடுத்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கிவிட்டு, தனது அரசியல் எதிரியாக கருதப்பட்ட மஹிந்த ராஜபக்சவை அப் பதவியில் அமர்த்தியுள்ளமையே இந்த நெருக்கடிகளுக்கு காரணமாகும்.

இந்த நியமனமானது முற்றிலும் அரசியலமைப்புக்கும் ஜனநாயகத்துக்கும் விரோதமானது என பல்வேறு தரப்புகளும் குற்றம்சுமத்தியுள்ளன. எனினும் நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பதவி நீக்கமும் புதிய பிரதமர் நியமனமும் முற்றிலும் சட்ட வரம்புகளுக்கும் அரசியலமைப்புக்கும் உட்பட்டது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துள்ள புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் தனது நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என்றும் தனக்கு பாராளுமன்றத்தில் 120 உறுப்பினர்களுடன் கூடிய பெரும்பான்மை ஆதரவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான ஒத்துழைப்புடன், மஹிந்த ராஜபக்சவை எதிர்த்து நின்று மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வெற்றி பெற்றார். இதற்கமைய ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தார். சரியாக மூன்று வருடங்களின் பின்னர் தனது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்து விட்டது தன்னை எதிர்த்து நின்ற மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் இவ்வாறானதொரு பாரதூரமான தீர்மானத்தை எடுப்பதற்கு காரணம் ரணில் விக்ரமசிங்கவின் தன்னிச்சையான, முரட்டுத்தனமான செயற்பாடுதான் என நேற்றைய உரையில் பல இடங்களில் குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னுடன் கலந்தாலோசிக்காது, ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைக் கூட தன் வசப்படுத்தி ரணில் செயற்பட்டதாகவும் மத்திய வங்கி உள்ளிட்ட பல மோசடிகளுக்கு ரணில் துணை போனதாகவும் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.