புனித உம்ரா யாத்திரைக்கு அனுமதி கிடைக்கவில்லை

சில முகவர்கள் ஏமாற்றுகின்றனர் என்கிறது ஹஜ் குழு

0 570

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உம்ரா யாத்­திரை தொடர்பில் சவூதி அரே­பிய ஹஜ், உம்ரா அமைச்சு எது­வித உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்­பி­னையும் வெளி­யி­ட­வில்லை எனவும், இலங்­கையில் சமூக வலைத்­த­ளங்­களில் உம்ரா யாத்­தி­ரைக்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தவ­றாக பிர­சாரம் செய்­யப்­பட்டு வரு­வ­தா­கவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

பொது மக்கள் இந்த தவ­றான பிர­சா­ரங்­க­ளுக்கு ஏமாந்து ஹஜ், உம்ரா முகவர் நிலை­யங்­களில் முற்­ப­ணங்­களைச் செலுத்த வேண்டாம் எனவும் அவர் கோரிக்கை விடுத்­துள்ளார்.

இரண்டு தடவைகள் கொவிட் -19 தடுப்­பூ­சி­களை ஏற்றிக் கொண்­ட­வர்­க­ளுக்கும், யாத்­தி­ரைக்கு 14 நாட்­க­ளுக்கு முன்பு தடுப்­பூசி ஏற்­றிக்­கொண்­ட­வர்­க­ளுக்கும் சவூதி அரே­பியா ஹஜ், உம்ரா அமைச்சு யாத்­திரை மேற்­கொள்ள அனு­மதி வழங்­கி­யுள்­ள­து.

அத்­தோடு கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளாகி குண­ம­டைந்­த­வர்­க­ளுக்கும் உம்ரா யாத்­திரை மேற்­கொள்­ளலாம் என அறிவித்துள்ளது. எனினும் வெளிநாட்டு யாத்திரிகர்களை அனுமதிப்பது பற்றி இது வரை எந்த அறிவித்தலும் வரவில்லை எனவும் ஹஜ் குழுவின் தலைவர் தெரி­வித்தார்.

மேலும் அவர் குறிப்­பி­டு­கையில் ஒரு­சில சுய­நல ஹஜ் உம்ரா முகவர் நிலை­யங்­களே இவ்­வா­றான தவ­றான பிர­சா­ரத்தில் ஈடு­பட்டு யாத்­தி­ரி­கர்­களை ஏமாற்­று­வ­தற்கு முயற்­சிக்­கின்­றன. எனவே அரச ஹஜ்­ குழு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கும்­வரை பொது மக்கள் பொறு­மை­யாக இருக்­க­வேண்டும்.

சவூதி அரே­பி­யாவின் விமான நிலை­யங்கள் எதிர்­வரும் ஷவ்வால் பிறை 7 இலிலே திறக்­கப்­ப­ட­வுள்­ளன.இதனை சவூதி அர­சாங்கம் உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது.

இலங்கை அரச ஹஜ் குழு ஹஜ், உம்ரா யாத்திரை தொடர்பில் சவூதி ஹஜ் உம்ரா அமைச்சுடன் தொடர்ந்தும் தொடர்புகளில் உள்ளது. எனவே ஹஜ் குழுவின் உத்தியோக அறிவிப்பு கிடைக்கும் வரை மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.