மத்­ர­ஸாக்­களை கல்வி அமைச்சின் கீழ் கொண்­டு­வர கலந்­து­ரை­யாடல்

சபையில் கல்வி அமைச்சர் அகில தெரி­விப்பு

0 635

இலங்­கையில் செயற்­படும் மத்­ர­ஸாக்­களை கல்­வி­ய­மைச்சின் கீழ் கொண்­டு­வ­ரு­வ­தற்­கான கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று வரு­வ­தாக கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற வாய்­மூல விடைக்­கான கேள்வி நேரத்­தின்­போது எதிர்க்­கட்சி எம்.பி.யான ஆனந்த அளுத்­க­மகே, இலங்­கையில் தனியார், சர்­வ­தேச பாட­சா­லைகள் இன, மத அடிப்­ப­டையில் செயற்­பட்டு வரு­கின்­றன.

இது தொடர்பில் கல்­வி­ய­மைச்சு எடுத்­துள்ள அல்­லது எடுக்­க­வுள்ள நட­வ­டிக்­கைகள் என்­ன­வென எழுப்­பிய கேள்­விக்குப் பதி­ல­ளிக்­கும்­போதே இவ்­வாறு தெரி­வித்தார். இது­தொ­டர்­பாக அவர் தொடர்ந்து தெரி­விக்­கையில்,

தனியார், சர்­வ­தேச பாட­சா­லைகள் தொடர்­பான அதி­காரம் கல்வி அமைச்­சிடம் இல்லை. எனினும், அவை தொடர்பில் புதிய கல்விச் சட்டம் உரு­வாக்­கப்­பட்டு வரு­கின்­றது. இதே­வேளை, இலங்­கையில் செயற்­படும் மத்­ர­ஸாக்­களை கல்­வி­ய­மைச்சின் கீழ் எடுப்­ப­தற்­கான கலந்­து­ரை­யா­டல்கள் இடம்பெற்று வருகின்றன. அதனால் எதிர்காலத்தில் சர்வதேச பாடசாலைகள் தொடர்பான ஒழுங்குவிதிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.