போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை விற்கும் முகவர்கள்: நீங்களும் அவதானமாக இருங்கள்

0 883

போலி­யான ஆவ­ணங்­களைத் தயா­ரித்து காணி­களை மோச­டி­யான முறையில் விற்­பனை செய்யும் போலி முக­வர்­க­ளு­டைய தொகையும் அதனால், பாதிக்கப்படு­ப­வர்­க­ளு­டைய தொகையும் நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­வ­தோடு இது போன்ற குற்­றங்கள் நாட்டில் பர­வ­லாக நடை­பெற்று வரு­வ­தாக கொழும்பு மோசடித் தடுப்புப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

பல்­வேறு தரு­ணங்­களில் காணி உரி­மை­யா­ளர்கள் தமது காணியை விற்கும் அவ­ச­ரத்தில் காணி வரை­ப­டங்கள் மற்றும் தனிப்­பட்ட ஆவ­ணங்­களை தர­கர்­க­ளுடன் பகிர்ந்து கொள்­கின்­றனர். சில வேளை­களில் ஆவ­ணங்கள் தவ­ற­வி­டப்­ப­டு­வதை மோச­டிக்­கா­ரர்கள் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொள்வதாக மோசடி தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் ரொஹான் பிரே­ம­ரத்ன தெரி­விக்­கிறார்.

காணி தொடர்­பான ஆவ­ணங்­களை சட்­டத்­துக்கு முர­ணான முறையில் நக­லெ­டுத்து அதன் மூலம் தர­கர்கள் காணி­களை விற்று மில்­லியன் கணக்­கான பணத்தைச் சம்­பா­திக்­கின்­றனர்.

குற்­ற­வா­ளி­க­ளான போலி காணி விற்­ப­னை­யா­ளர்கள், காணி­களின் மூலப் பிர­தி­க­ளையும் கைப்­பற்­று­வ­தோடு தானே குறித்த காணியின் உரி­மை­யாளர் போன்று பாசாங்கு செய்­வ­தாக பிரே­ம­ரத்ன தெரி­விக்­கிறார். இதற்­காக வேண்டி போலி­யான அடை­யாள அட்டை உட்­பட பல்­வேறு விட­யங்­களை மோச­டிக்­கா­ரர்கள் பயன்­ப­டுத்­து­கி­றார்கள்.

இலங்­கையில் நடை­பெற்ற மோச­டிகள் தொடர்­பான அறிக்­கை­களின் படி, 2017 இல், போலி ஆவண மோச­டிகள் 180 மற்றும் ஏமாற்று மோச­டிகள் 66 உம் உட்­பட மொத்­த­மாக 988 சொத்து மோச­டிகள் பதி­வா­கி­யி­ருந்­தன. பதி­வா­கிய 988 மோசடி குற்­றச்­சாட்­டுக்­களில் 734 குற்­றச்­சாட்­டு­க­ளுக்கே தீர்வு காணப்­பட்­டது. கடந்த 2018 ஆம் ஆண்டில் மொத்­த­மாக 523 மோசடி குற்­றச்­சாட்­டு­கள் பதி­வா­கி­யி­ருந்­தன. அவற்றுள் மோசடி குற்­றச்­சாட்­டுகள் 146 உம் ஏமாற்று மோச­டிகள் 28 உம் அடங்கும்.

மோச­டிக்­கா­ரர்கள் எத்­துணை தைரி­ய­மாக திட்­ட­மிட்ட முறையில் செயற்­ப­டு­கி­றார்கள் என்­ப­தற்கு எடுத்­துக்­காட்­டாக முல்­லே­ரி­யாவின் அங்­கொ­டையில் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் காணி விற்­கப்­பட்ட ஒரு சம்­ப­வத்தைக் கூறலாம்.

சட்­ட­வி­ரோ­த­மாக விற்­கப்­பட்ட முல்­லே­ரி­யாவின் இரு காணி­களின் உண்­மை­யான உரி­மை­யாளர் வெளி­நாட்டில் கல்வி கற்கும் ஓர் இளம் யுவ­தி­யாவார். அது அவ­ருக்கு அன்­ப­ளிப்­பாகக் கிடைத்த காணி­யாகும்.

குறித்த யுவதி வெளி­நாட்டில் இருப்­பதை அறிந்து கொண்ட ஒருவர் காணிகள் தனக்கு விற்­கப்­பட்­டது போன்று ஆவ­ணங்­களைச் சோடித்து சட்ட விரோ­த­மாக காணியின் உரி­மை­யா­ள­ரானார்.

இவ்­வாறு போலி­யான காணி அனு­ம­திப்­பத்­திரம், போலி­யான அடை­யாள அட்டை, போலி­யான கையொப்­பங்கள் மூலம் காணி­க­ளுக்குப் போலி­யான உரி­மை­யா­ள­ரா­னவர் அடம்­ப­ராகே யொஹான் ஷமிந்த அலிஸ் என்­பவர் ஆவார்.

இந்தப் போலி உரி­மை­யாளர் அலிஸ் மற்­று­மொ­ரு­வ­ருக்குக் காணி­களை விற்ற பின்­னரே பிரச்­சினை சிக்­க­லாக மாறி­யது. காணி­களின் புதிய உரி­மை­யாளர், குறித்த காணியில் மதில் ஒன்றை கட்ட முனைந்­த­போது காணியின் உண்­மை­யான உரி­மை­யா­ள­ரான குறித்த யுவ­தியின் தந்­தைக்கும் புதிய உரி­மை­யா­ள­ருக்கும் இடையில் பிரச்­சினை ஏற்­பட்­டது.

காணியின் புதிய உரி­மை­யாளர் ரூபா 6 மில்­லியன் தொகை­யினை வழங்கி காணியை பிறி­தொ-­ரு­வ­ரிடமிருந்து கொள்­வ­னவு செய்­த­தாக வாதிட்டார். அவ­ரு­டைய ஆவ­ணங்­களில் குறித்த யுவ­தியின் போலி­யான கையொப்­பங்­களும் காணப்­பட்­டன.

தனது மகள் நீண்ட கால­மாக வெளி­நாட்டில் இருப்­ப­தா­கவும் யாருக்கும் காணி­களை விற்­க­வில்லை என்றும் குறித்த யுவ­தியின் தந்தை வாதிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த முறைப்­பாடு கொழும்பு மோசடித் தடுப்புப் பிரி­வுக்கு மாற்றம் செய்­யப்­பட்­டது.

இந்த முறைப்­பாட்டில் கொழும்பு மோசடித் தடுப்புப் பிரிவு, கையொப்­பங்­களில் மாத்­தி­ர­மின்றி –ஆவ­ணங்கள், புகைப்­ப­டங்கள் எனப் பல்­வேறு விட­யங்­களில் பிரச்­சி­னை­களை எதிர்­நோக்­கு­கி­றது. இந்த முறைப்­பாடு தொடர்­பான விசா­ர­ணைகள் தொடர்ச்­சி­யாக நடை­பெற்று வரு­கின்­றன.

நடை­பெற்ற மோசடி சம்­ப­வத்தைத் தொடர்ந்து, காணி­களின் மூலப்­பி­ரதி தொடர்­பான தனிப்­பட்ட விப­ரங்­களை தர­கர்­க­ளிடம் வெளி­யிட வேண்டாம் என மோசடி தடுப்புப் பிரிவின் பணிப்­பாளர் பிரே­ம­ரத்ன எச்­ச­ரிக்கை விடுக்­கிறார்.

கடந்த ஜூன் மாதத்­திலும் இது போன்­ற­தொரு மோசடி சம்­பவம் நடை­பெற்­றது. கொழும்­புக்கு அண்­மையில் 10 பேர்ச்சஸ் அள­வி­லான காணி­யொன்று தர­கரால் சட்­ட­வி­ரோ­த­மாக ரூபா 3 மில்­லி­ய­னுக்கு விற்­கப்­பட்­டது.

இதன்­போது ஜய­திஸ்ஸ என்ற  போலி­யான பெயரைப் பயன்­ப­டுத்தி குறித்த முகவர் காணி விற்­ப­னைக்­குள்­ள­தாக பத்­தி­ரி­கையில் விளம்­பரம் கொடுத்­துள்ளார். குறித்த காணி தன்­னு­டைய மனை­வியின் காணி என்றும் நம்ப வைத்­துள்ளார்.

பத்­தி­ரி­கையில் விளம்­ப­ரத்தைப் பார்­த்து காணியை கொள்­வ­னவு செய்ய விருப்பம் கொண்ட பன்­னிப்­பிட்­டியைச் சேர்ந்த ஒருவர் ‘ஜய­திஸ்ஸ’ வை தொலை­பேசி மூலம் தொடர்பு கொண்டார்.

குறித்த தொலை­பேசி உரை­யா­டலின் போது அவ­சர பணத் தேவைக்­காக வேண்டி விரைவில் காணி விற்­கப்­ப­ட­வுள்­ள­தாக பன்­னிப்­பிட்­டி­யவைச் சேர்ந்­த­வ­ருக்கு தெரி­வித்­தி­ருக்­கிறார்.

காணியை கொள்­வ­னவு செய்­தவர் புதிய காணியைப் பார்­வை­யிட வந்த வேளை­யில்தான் தனக்கு காணியை விற்­றவர் அந்த காணியின் உரி­மை­யாளர் இல்லை என்­பதை அய­ல­வர்கள் மூலம் தெரிந்து கொண்டார்.

குறித்த காணியின் உரி­மை­யாளர் காணியை விற்கும் பொறுப்பை ஒரு தர­க­ரிடம் ஒப்­ப­டைத்­துள்ளார். அந்த தர­க­ருக்கு முற்­ப­ண­மாக 10000 ரூபாவும் வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

கைவி­டப்­பட்ட ஆவ­ணங்கள் மோச­டிக்­கா­ரர்­களின் கைக­ளுக்கு கிடைக்­கும்­போது சட்ட விரோ­த­மான முறையில் அவர்­க­ளுக்கு ஏற்­ற­துபோல் பெயர்கள் மாற்றம் செய்­யப்­பட்டு விற்­பனை செய்­யப்­ப­டு­கி­றது.

வீடுகள் மற்றும் காணிகள் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் விற்­பனை செய்­யப்­பட்டு ரூபா 5 மில்­லியன் தொடக்கம் 350 மில்­லியன் வரை மோசடி செய்­யப்­ப­டு­வ­தாக குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம் (சி.ஐ.டி.) தெரி­வித்­துள்­ளது.

நாடு முழு­வதும் இது போன்று 75 முறைப்­பா­டுகள் தொடர்ந்து விசா­ர­ணையில் இருப்­ப­தாக சி.ஐ.டி. தெரி­வித்­துள்­ளது. தற்­போது அதி­க­மான காணி மற்றும் வீடு விற்­பனை மோச­டிகள் விற்­பனை முக­வர்­களால் நடை­பெ­று­வ­தில்லை. தனி­யாட்கள் இதற்­காக கிளம்­பி­யுள்­ளார்கள். காணி உரி­மை­யா­ளர்கள் வெளி­நாட்டில் இருக்­கும்­போதே அதி­க­மான மோச­டிகள் நடை­பெ­று­கின்­றன.

பெரும்­பாலும் காணிகள் வாங்­கும்­போது வாடிக்­கை­யா­ளர்கள் கட்­டா­ய­மாக முற்­பணம் செலுத்த கட்­டா­யப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள். முற்­ப­ணத்தை வாங்­கிய பின்னர் காணி முக­வர்கள் தலை­ம­றை­வாகும் நிலை காணப்­ப­டு­கி­றது. தெஹி­வளை, கல்­கிசை, பத்­த­ர­முல்லை, அத்­து­ரு­கி­ரிய போன்ற பகு­தி­க­ளி­லேயே இது போன்ற மோச­டிகள் பற்றி அதி­க­மாக முறைப்­பாடு கிடைப்பதாகக் சி.ஐ.டி. தெரி­வித்­துள்­ளது.

அர­சாங்க அலு­வ­ல­ ர்கள், ஆசி­ரி­யர்கள் என பலர் அவ­சரம் கருதி வீடு­களைக் கொள்­வ­னவு செய்து இவ்­வா­றான மோச­டி­களில் சிக்­கி­யுள்­ள­தாக சி.ஐ.டி. சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. நெடுஞ்­சா­லை­க­ளுக்கு அருகில் உள்ள வீடுகள் மற்றும் காணி­களை வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை (ஆர்.டி.ஏ.) கொள்­வ­னவு செய்­துள்­ளது. இதற்­காக வேண்டி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு ஆர்.டி.ஏ. நட்­ட­ஈ­டாக ஒரு தொகை பணத்தை வழங்கும்.

நட்­ட­ஈட்டை பெற்றுக் கொண்ட உரி­மை­யா­ளர்கள் தமது காணி அல்­லது வீடு­களை விற்று விடு­வார்கள். வீதி அபி­வி­ருத்தி அதி­கார சபை­யினால் வேலைகள் தொடங்­கப்­ப­டு­வ­தற்கு முன்னர் புதிய உரி­மை­யா­ளர்கள் தமது புதிய காணியில் வீடு கட்ட முனை­யும்­போது பிரச்­சி­னை­கள் தோன்­று­கி­ன்றன.

ஒரு சில குற்­ற­வா­ளிகள் சூழ்ச்சி செய்து காணி­களைச் சட்ட விரோ­த­மாக போலி ஆவ­ணங்கள் மூலம் உரி­மை­யாக்­கி­விட்டு மாவட்ட நீதி­மன்­றங்­க­ளுக்குச் சென்று தமது காணி என வாதாடும் நிலை­மையும் காணப்­ப­டு­கி­றது. காணி­களின் உட் பிரி­வுகள் தொடர்­பாக நோக்கும் போது நீதி மன்­றமும் இந்த முறைப்­பா­டு­களால் சிக்­க­லான நிலை­மையை எதிர்­நோக்­கு­கி­றது.

காணி­களைக் கொள்­வ­னவு செய்­யும்­போது வாடிக்­கை­யா­ளர்கள் காணி உரிமையாளர் மற்றும் காணி உரிமைப்பத்திரம் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் காணி விற்கும் முகவருடைய புகைப்படம் ஒன்றையும் கண்டிப்பாக பெற்றுக் கொள்ள வேண்டும் என சி.ஐ.டி. வலியுறுத்தியுள்ளது. தொடர்மாடி குடியிருப்புகளில் வீடுகளை வாங்கும்போது அதிக நாட்கள் வாழ்வதற்குச் சாத்தியமான வீடுகளைக் கொள்வனவு செய்யவேண்டும். வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் காணி மற்றும் வீட்டின் பாதுகாப்புத் தன்மையை உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் விற்பனை முகவர்களுடைய விபரம், கிராம சேவகரின் உறுதிப்படுத்தல் தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். இணைய வழியினூடாகவும் தற்போது காணிகள் மோசடியாக விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காகவே பல இணையத் தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இணைய வழியூடாக காணிகளை வாங்கும்போதும் அவதானமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.