இனவாதத்தை தூண்டுவோர் எவரும் மத்தியில் இல்லை
நாங்கள் இனவாதிகள் அல்லர். இனவாதத்தை தூண்டுவோர் யாரும் எம் மத்தியில் இல்லை. எமது நாட்டை துண்டாட முடியாது என்று நாட்டின் பிரிவினைக்கு எதிராகக் குரல் கொடுப்பதால் எம்மை இனவாதிகள் என்கின்றனர். சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் சுதந்திரமாக வாழ்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. நாட்டின் மீது நாம் அன்பு செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
பத்தரமுல்ல, படபொத்த ஸ்ரீ சுதர்சனாராம விகாரையில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.…