பின்லாந்தில் பள்ளிவாசலொன்றின் மீது புகைக் குண்டுத் தாக்குதல்
வடக்கு பின்லாந்தில் அமைந்துள்ள பள்ளிவாசலொன்றின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை புகைக் குண்டுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டதாக பின்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதல் நடத்திய நபர் கடந்த செவ்வாய்க்கிழமை ஒலு நகரில் அமைந்துள்ள பள்ளிவாசலின் ஜன்னலை உடைத்துவிட்டு அதனூடாக புகைக் குண்டு வீசியுள்ளதாக ஒலு நகரப் பொலிஸ் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் காரணமாக உடமைகளுக்கு மாத்திரமே சேதம் ஏற்பட்டுள்ளது, உயிரிழப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…