ஆட்சியமைக்குமாறு சவால்விடுத்த அரசாங்கமே தற்போது ஓலக்குரல் எழுப்புகிறது

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் முடிந்தால் ஒரு சபையில் ஆட்­சி­ய­மைத்­துக்­காட்­டு­மாறு அர­சாங்­கமே எமக்கு சவால் விடுத்­தது. அந்த சவாலை ஏற்­றுக்­கொண்டு செயற்­ப­டும்­போது தற்­போது அர­சாங்கம் ஓலக்­குரல் எழுப்பி வரு­கி­றது என ஐக்­கிய மக்கள் சக்தி உறுப்­பினர் முஜிபுர் ரஹ்மான் தெரி­வித்தார்.

மன்னார்–புத்தளம் வீதியை மூட நீதிமன்றம் எடுக்கும் நடவடிக்கை சட்டவிரோதமானதே

சட்­டமா அதி­பர் ­தி­ணைக் ­க­ளத்தின் உத­வி­யுடன் 100 வருடம் பழை­மை­வாய்ந்த மன்னார்– புத்­தளம் பாதையை மூடி­வி­டு­வ­தற்கு நீதி­மன்றம் நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றது. இது சட்­ட­வி­ரோ­த­மான நட­வ­டிக்­கை­யாகும். இந்த பாதை அம்­பாந்­தோட்­டை­யிலோ வேறு பிர­தே­சங்­க­ளிலோ இருந்­தி­ருந்தால் சட்­டமா அதிபர் திணைக்­களம் இந்த பாதையை மூடி­விட உதவி செய்­தி­ருக்­காது. இந்த நட­வ­டிக்­கையை நாங்கள் வன்­மை­யாக கண்­டிக்­கிறோம் என அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் தலைவர் ரிஷாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

‘இஸ்ரேலிய படையினர் ஓய்வெடுக்கும் இடமாக இலங்கை’ ரணிலின் அனுமதியை அநுரவும் தொடர்கிறார்

காஸாவில் மனிதப் படு­கொ­லை­க­ளிலும் இனச்­சுத்­தி­க­ரிப்­பிலும் ஈடு­படும் இஸ்­ரே­லிய படை­யினர் ஓய்­வெ­டுக்­கின்ற மற்றும் பொழு­து­போக்­கு­கின்ற இட­மாக இலங்கை மாறி­யி­ருக்­கி­றது. முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவே இதற்­கான அனு­ம­தியை வழங்­கினார். இப்­போ­தைய ஜனா­தி­பதி அநுர குமார திசா­நா­யக்­கவும் இதே அனு­ம­தியை தொடர்ந்தும் வழங்கிக் கொண்­டி­ருக்­கிறார் என இரா­ஜ­தந்­தி­ரியும் ஜெனீவாவுக்­கான இலங்­கையின் முன்னாள் வதி­விடப் பிர­தி­நி­தி­யு­மான கலா­நிதி தயான் ஜய­தி­லக தெரி­வித்தார்.

மாலைத்தீவு கழகத்துக்காக தங்கம் வென்றார் இலங்கை இளைஞர் ஆஷிக் அஹ்மட்

மாலை­தீவின் 'பைட்சோல் மோல்டிவ்ஸ் ' ( Fightsoul Maldives) கழ­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­யி­ருந்த இலங்­கையின் மாத்­தளை மாவட்­டத்தின் கலே­வெ­லயைச் சேர்ந்த எம்.ஐ. ஆஷிக் அஹ்மட், WBC Muaythai Amateur Sri lanka -2025 இன் ஆரம்­ப­வி­ய­லாளர் பிரிவின் ஆண்­க­ளுக்­கான 60 கிலோ கிராம் எடைக்­குட்­­பட்ட குத்துச் சண்டை போட்­டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்­தினார்.